tag:blogger.com,1999:blog-80813502274547453522024-02-07T18:23:21.834+05:30எனது பார்வையில்எனது சூழல் பற்றிய எனது பார்வை உங்கள் பார்வைக்குமணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-83398246588747751562010-11-22T07:24:00.008+05:302010-11-22T07:31:46.300+05:30தலைக்கவசம் அழகிற்கல்ல - ஆபத்தை தடுக்க<div style="text-align: justify;">சில வாரங்களுக்கு முன்னர் எப்பொழுதும் போல வீட்டிற்கு தொலைபேசியபோது காலையிலேயே அவர்கள் ஒரு துக்க நிகழ்விற்கு செல்வதாக கூறினர். ஒரு உறவினர் அதற்கு முந்தைய நாள் தவறிவிட்டதாகவும் அதற்கு செல்வதாகவும் கூறினர். இங்கு நான் வந்தபிறகு இந்த ஒன்பது மாதத்தில் எனக்கு அறிவிக்கப்படும் நான்காவது உறவின் மரணம். சிறிது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. காரணம், மிகவும் அதிக வயதாகாதவர்; நோயினால் அவதிப்படுவதாக அறியப்படாதவர். இறப்பின் காரணம் கேட்டபோது சாலை விபத்து என்று கூறினர். நமது ஊரை பொறுத்தவரை மிகவும் சாதாரணமாகிப்போன விடயமாகிவிட்டது இந்த விபத்துக்கள். இருசக்கர வாகனத்தில் இவரது நண்பருடன் சென்னை அன்னனூர் அருகே சென்றபோது வாகனத்தின் முன்சக்கரம் வெடித்துசிதறியதால் சாலையில் விழுந்து தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் பிழைத்துவிடுவார் என்று நம்பிக்கையளித்து இரண்டு நாட்கள் சிகிச்சையில் பயனின்றி மூளைச்சாவு ஏற்பட்டு உயிர் நீத்துள்ளார். வாகனத்தை ஓட்டிச்சென்றவர் அதிர்ஷ்டவசமாக கைமுறிவுடன் உயிர் தப்பியுள்ளார்.<br /><br />இவர்கள் இருவரின் தலைக்கவசமும் வாகனத்தின் பக்கவாட்டில் மாட்டிவிடப்பட்டிருந்தது. இவரது மரணத்தை பொறுத்தவரை அதிர்ச்சியையும் மீறி அவர்மீது கோபம் அதிகமானது. என்னை பொறுத்தவரை தானே சென்று தேடிக்கொண்டதாகவே இது படுகின்றது. தலைக்கவசம் தன்னை பாதுகாத்துக்கொள்ள அணிந்துகொள்வதற்கா இல்லை ஏதோ அழகுபொருள் போல தொங்கவிடுவதற்கா? அவர்கள் தலைக்கவசத்தை அணிந்து சென்றிருந்தால் உயிர் தப்பியிருக்க வாய்ப்புகள் நிறைய உள்ளது.<br /><br />பலரும் இவ்வாறு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதை பார்க்கிறோம். சென்னை போன்ற பெருநகரங்களிலேயே இவ்வாறென்றால் பிற சிறு நகரங்களில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. அங்கெல்லாம் தலைக்கவசம் என்றால் நம்மை ஏளனமாக பார்க்கின்றனர். நம் மக்களை பொறுத்தவரை எதுவுமே கடுமையான சட்டமாக இல்லாதவரை அதற்கு மதிப்பு கொடுத்து பின்பற்றுவது என்பதை தேவையற்ற ஒன்றாகவே நினைக்கிறார்கள். சில நாட்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தது. பின்னர் என்ன ஆனதோ தெரியவில்லை, அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது. சட்டம் அமலில் இருந்தபோது பலரும் காவலருக்கு பணம் அழவேண்டுமே என்ற நோக்கிலாவது தலைக்கவசத்தை அணிந்து சென்றனர். நல்ல விடயங்கள் எல்லாம் சட்டமாகி அமலில் இருக்காது. எவராவது செல்வாக்குள்ளவர் மக்கள் அவதிப்படுகின்றனர் என்று தவறான உதாரணம் கூறியிருப்பாரோ என்று தெரியவில்லை, அரசு சட்டத்தை ரத்து செய்துவிட்டது. இதில் என்ன அவதி என்று புரியவில்லை. நிதிநிலை என்றால், அவ்வளவு செலவுசெய்து வாகனம் வாங்கும்போது, அதன் சிறுபகுதியில் தலைக்கவசம் வாங்குவது என்பது சிரமமாக இருக்காது. சிலரோ அதனை அணிவதால் தலைவலி, கழுத்துவலி போன்ற உடல் உபாதைகள் வருவதாக கூறுகின்றனர். சிறு பிரச்சனைகளுக்காக எவரேனும் உயிரை பணயம் வைப்பார்களா? அவ்வாறு இருப்பின் அவர்கள் வாகனங்களையே செலுத்தாமல் இருக்கலாம்.<br /><br />இதற்கு எப்படி வேண்டுமானாலும் (எதிர்)விதண்டாவாதம் செய்யலாம். ஆனால், அவ்வாறு செய்பவர்கள், தங்களையும் மீறி தங்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், தங்களின் குடும்பத்தின் கதி என்னவாகும் என்று நினைத்துப்பார்பார்களா? எனது உறவினர் தன்னுடைய உடலின் பாகங்களை தானமளித்து சிலருக்கு வாழ்வளித்து சென்றுள்ளார். ஆனால், அவரின் மறைவால் வாடும் அவரின் மனைவிக்கும், இரண்டு சிறு பிள்ளைகளுக்கும் அவர்களின் வாழ்வில் நீங்காத சோகத்தையும், கேள்விகளையும் அல்லவா விட்டுச்சென்றுள்ளார். எவரும் தனிமனிதர்கள் இல்லை. ஒவ்வொருவரையும் நம்பியோ, சுற்றியோ குடும்பமோ, நட்போ, உறவுகளோ இருந்துக்கொண்டுதான் இருக்கும். அதனை நினைவில் கொண்டாவது இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து செல்லலாமே.<br /> <br />இந்த விபத்தை கேள்விப்பட்டவுடன் என் மனதில் சில காலம் முன்னர் நடந்த நிகழ்ச்சி சிறிது நடுக்கத்தை மீண்டும் அளித்துச்சென்றது. சென்ற திசம்பர் மாதம் சென்னையில் இருந்தபோது எனது அப்பாவை அழைத்துக்கொண்டு தாம்பரத்திலிருந்து மைலாப்பூர் சென்றேன். இரு சக்கர வாகனத்தில் பயணம். தலைக்கவசம் அணியாமல் செல்லமாட்டேன்; சாலை இலகுவாக இருந்தால் நல்ல வேகத்தில் செல்வது பழக்கம். (60-70 கி.மீ). அன்றும் அவ்வாறே சென்றுகொண்டிருந்தேன். அப்பாவை பொறுத்தவரை என்னுடன் வரும்போது பார்த்துப்போ என்றுமட்டும் சொல்வார். என் மீது நம்பிக்கை அதிகம் (வேற வழி...) அடையாறு சிக்கனலில் நின்று, பின்னர் கிளம்பி சிறிது வேகம் எடுப்பதற்குள் ஏதோ வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. அதனோடு வாகனத்தின் பின்பக்கம் நிலைதடுமாறி செல்ல ஆரம்பித்தது. சாலையின் நடுவே சென்று கொண்டிருந்தேன். பின்சக்கரம் வெடித்துவிட்டது என்று புரிந்துவிட்டது. நல்லவேலையாக வேகம் அதிகமில்லாததால் பிரேக் பிடித்து வண்டியை நிப்பாட்டவும் எனது அப்பா சரியான பக்கத்தில் கீழே குதிப்பதற்கும் சரியாக இருந்தது. வேறு வண்டியில் சென்றுகொண்டிருந்த இரண்டு பேர் வாகனத்தை தூக்கி ஓரமாக செல்ல உதவினர். எனக்கு மயக்கம் வந்துவிட்டதோ என்று அவர்கள் நினைத்தார்களாம். சக்கரத்தில் ஆணி ஏறியிருந்தது அந்த டையரை மாற்றும்போது பார்த்தோம். அந்த சிக்னல் தாண்டியதுமுள்ள வேக தடுப்பான்களில் ஏறியிருக்கக்கூடும். எங்களின் நல்லநேரம் எங்கள் பின்னால் எந்த பேருந்தோ, பெரிய வாகனங்களோ வரவில்லை; நெருக்கடியான போக்குவரத்தும் இல்லை. நல்ல வேகத்தில் செல்லவில்லை. இல்லாவிட்டால் இன்று எங்கள் நிலைமை எப்படியிருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த நிகழ்விற்கு பின்னர் மிகவும் அதிக எச்சரிக்கையோடு, சாலையை உற்றுநோக்கி வாகனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டேன். என்னதான் வாகனம் என்கட்டுப்பாட்டிற்க்குள் இருக்கின்றது என்று கூறிக்கொண்டாலும், இவ்வாறான சில நிகழ்வுகள் சிறிது அச்சத்தை ஏற்படுத்தியே செல்கின்றன. அதிலும், நம்மை நம்பி மற்றவர் அமரும்போது நம்பிக்கையையும் மீறி மனதில் எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்துவிடுகின்றது. இந்த விபத்திற்கு பின்னர் பின்னால் அமர்பவருக்கும் தலைக்கவசம் ஏற்பாடுசெய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்துவிட்டேன்.<br /><br />இருசக்கர வாகனவோட்டிகள் தயவு செய்து தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.<br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-87343385028525868002010-09-10T06:56:00.010+05:302010-09-10T07:08:30.332+05:30காத்திருந்த பயணம் - இ<div style="text-align: justify;">அன்று பிரதோச தினம். சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்று மாலை மன்னார்குடியிலுள்ள சித்தி வீட்டிற்கு செல்லும் திட்டம். மேலும், மாலை மன்னார்குடிக்கு அருகிலுள்ள பாமினி என்னும் ஊரிலுள்ள சிவாலயத்திற்கு சென்றுவர வேண்டும் என்று என் அப்பா விரும்பியபடியால் அவ்வாறே திட்டமிட்டிருந்தோம். குடந்தை வந்து சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு மாலை மன்னை நோக்கி பயணமானோம்.<br /></div><div style="text-align: justify;"><br />பாமினி - மன்னையிலிருந்து சில மைல்கள் தூரத்தில் உள்ளது. பழங்காலத்தைய சிவத்தலமாகும். சென்று சேரும்போது மாலை ஆறு மணிக்கு மேலாகிவிட்டது. மழை தூரிக்கொண்டேயிருந்ததால் சுவாமி புறப்பாடு அன்று இல்லை. எனினும் தரிசனம் நன்றாக கிடைத்தது. அப்பாவிற்கு எல்லோரையும்விட மிகுந்த மகிழ்ச்சி என்று எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அன்றைய தினம் மன்னையில் அலவலாவிக்கொண்டு இனிதே முடிந்தது.<br /><br />அடுத்த நாள் பல இடங்களுக்கு செல்லும் திட்டம் வைத்திருந்தோம். மேலும் அன்றிரவு சென்னையும் திரும்ப வேண்டும். ஆகையால் சீக்கிரமே மன்னையிலிருந்து கிளம்பி முதலில் குருஸ்தலமான ஆலங்குடி சென்றடைந்தோம். நாங்கள் சென்றது குருபெயர்ச்சிக்கு முதல்நாள். ஆலயத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருந்தன. எங்களுக்கு நேரம் மிக குறைவாக இருந்ததால் சீக்கிரமாக குருதரிசனத்தை முடித்துக்கொண்டு நேராக ராகுஸ்தலமான திருநாகேஸ்வரம் சென்றடைந்தோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIDL4uW8DDSChp3o_Cu7XJKh9868TaWKnt6EBshYxM5DS9sH8FgNA4aG31R3xmrnhb6nxLE86c497oX7-GL5UX7AJ95QyRX_wgJTK35VRhN0RLQ_-bhpGjka-Sxgj_El32HrPFba6ujGwK/s1600/Picture+191.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIDL4uW8DDSChp3o_Cu7XJKh9868TaWKnt6EBshYxM5DS9sH8FgNA4aG31R3xmrnhb6nxLE86c497oX7-GL5UX7AJ95QyRX_wgJTK35VRhN0RLQ_-bhpGjka-Sxgj_El32HrPFba6ujGwK/s320/Picture+191.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513935377967797298" border="0" /></a><br />எவ்வளவு பெரிய கோயில் அது. பார்ப்பதற்கே மலைப்பாகத்தான் இருந்தது. ஏற்கனவே சிலமுறை சென்றிருந்தாலும் அம்முறை சென்றபோதும் பிரம்மிப்பேற்படுத்தியது. அதிக மக்கள் கூட்டம் இல்லாததால் இறையின் நிறைவான தரிசனம் கிடைத்தது. அந்த தரிசனத்தை முடித்துக்கொண்டு குடந்தை வந்து அவர்களிடம் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டுவிட்டு, சென்னை செல்லும் மற்றவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் கிளம்பியது அப்பாவின் சொந்த ஊரான திருக்களாச்சேரி நோக்கி. அங்கு அவர்கள் வாழ்ந்த வீடும் இப்போது எங்களுக்கு சொந்தமில்லை. எனினும் அங்கு செல்வது எங்களில் சிலருக்கு ஒரு அலாதியான இன்பத்தை அளிக்கும். அதன் காரணமாக அந்த பயணம்.<br /><br />செல்லும் வழியில் திருபுவனம் சரபேஸ்வரர் ஆலயம் சென்றடைந்தோம். சிவபெருமான் சரபேஸ்வரராக காட்சியளிக்கும் ஆதிஸ்தலம். அங்கும் சுவாமியின் நிறைவான தரிசனம் கிடைத்தது. எல்லாமே மிகவும் விஸ்தாரமான கோயில்கள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUSK2_i6gqUXyDbyf0uxPnPYz_wWX3IDqMnPfOY1S0USYqQZxhcj2r5YLGsJjIDwPGM9wwEX2Qo7gosmNxpSt_hVg4m82_F_pWJAyTldStn1VjZ9iOHKFhbr6IDMQ4juq1I80EW1fnVsIM/s1600/Picture+206.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUSK2_i6gqUXyDbyf0uxPnPYz_wWX3IDqMnPfOY1S0USYqQZxhcj2r5YLGsJjIDwPGM9wwEX2Qo7gosmNxpSt_hVg4m82_F_pWJAyTldStn1VjZ9iOHKFhbr6IDMQ4juq1I80EW1fnVsIM/s320/Picture+206.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513935397205298402" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVrCohVHNjlcvomdB8dHWXaPFee2-8CSoggO7RfXv6NXoA_uysPpRe2H-DBJxTimh0sVBx_CHCtcJNypk0ZYgbtGnyN3SVUumP9CTPOn-0BekH4TGmvcPMX8l43XUm-l8u5xBbYAWVcByb/s1600/Picture+202.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVrCohVHNjlcvomdB8dHWXaPFee2-8CSoggO7RfXv6NXoA_uysPpRe2H-DBJxTimh0sVBx_CHCtcJNypk0ZYgbtGnyN3SVUumP9CTPOn-0BekH4TGmvcPMX8l43XUm-l8u5xBbYAWVcByb/s320/Picture+202.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513935388564965474" border="0" /></a><br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp2d5_75j9ogPvI1GCpasApt75ykDqMepoqhgXdVYLTnc1xo0KSo5AxPx1-FRZUJJKvU3CJZG3EaiIDJs9Q6in4YCbalRwycrBR2dXR6vMvIFdiFGhm2_EBUJ1aQ0Ha8ImnmKRXS26mcFg/s1600/Picture+216.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp2d5_75j9ogPvI1GCpasApt75ykDqMepoqhgXdVYLTnc1xo0KSo5AxPx1-FRZUJJKvU3CJZG3EaiIDJs9Q6in4YCbalRwycrBR2dXR6vMvIFdiFGhm2_EBUJ1aQ0Ha8ImnmKRXS26mcFg/s320/Picture+216.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513935404773412818" border="0" /></a> ( வாயில் தூண்களில் கண்ட சிற்பங்கள்)<br /></div><br />அங்கிருந்து கிளம்பி எங்கள் கிராமம் சென்றடைய மதியம் ஒன்றரை மணிக்கு மேலாகிவிட்டது. மயிலாடுதுறை தாண்டியதும் மழை கொட்டித்தீர்த்துவிட்டதால் மெதுவாகத்தான் செல்லமுடிந்தது. எடுத்துச்சென்ற உணவினை அந்த வீட்டிலேயே வைத்து சாப்பிட்டுவிட்டு எங்கள் ஊர் நாகநாதஸ்வாமி ஆலயத்திற்கு மூன்று மணிக்குமேல் சென்றோம். அன்று சங்காபிஷேகம் எனவும் நாங்கள் வந்தது மகிழ்ச்சி எனவும் அங்கிருந்த குருக்கள் கூறிக்கொண்டிருந்தார்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhmuqfpxAMIvND1mXNkSqkaupVYAytxNk0FjAfzAfFYnOqzxgtzg7JZzVZUCdFV36B6ommBoXQnaRa3vKDk2rPXtQ_tyIVd_hgHJYpgOkwYJWFOFevmA0-njbUxIkVjUNi6Dn2fQMs5xV8/s1600/Picture+241.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhmuqfpxAMIvND1mXNkSqkaupVYAytxNk0FjAfzAfFYnOqzxgtzg7JZzVZUCdFV36B6ommBoXQnaRa3vKDk2rPXtQ_tyIVd_hgHJYpgOkwYJWFOFevmA0-njbUxIkVjUNi6Dn2fQMs5xV8/s320/Picture+241.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513935420034952498" border="0" /></a><br />தாத்தா, பாட்டி கிட்டத்திட்ட இறுதிவரை வாழ்ந்த ஊரிற்கு செல்வதே எனக்கெல்லாம் தனிசுகம்தான். அவர்கள் வீட்டுப்பிள்ளை என்று அடையாளப்படுத்தும்போது மகிழ்வாகவே இருக்கும். தரிசனம் முடித்துக்கொண்டு தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் அளவளாவிவிட்டு புறப்பட்டோம். அந்த பயணத்தில் வரும்வழியில் சிலமுறை சென்றுள்ள திருக்கடையூருக்கும், அதுவரை செல்ல வாய்ப்பே கிடைக்காத சிதம்பரம் கோயிலுக்கும் சென்றுவரவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், அங்கேயே மாலை நான்கு மணியாகியபடியாலும், இரவு எப்படியும் சென்னை சென்றுவிடவேண்டும் என்ற காரணத்தாலும் ஆலய தரிசனத்திற்காக வழியில் எங்கும் நிறுத்தாமல் சென்னை நோக்கி செல்வது என்று முடிவு செய்யப்பட்டு கிளம்பினோம். சிதம்பரம், சீர்காழி எல்லாம் மற்றொரு வாய்ப்பிற்காக தள்ளிவைக்கப்ட்டது. வழியில் பண்ருட்டி அருகே உணவினை முடித்துக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் சென்னை சென்றடைந்தோம்.<br /><br />பல ஆண்டு கனவான குலதெய்வ தரிசனமும், மேலும் பல கோயில்களும் கண்டதில் மனம் நிறைவாக இருந்தது. குடும்பத்தினர் பலரும் சேர்ந்துவந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. என்றும் மனதில் அசைப்போட்டுக்கொண்டேயிருக்ககூடிய பயணமாய் இது அமைந்தது.</div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-54161289473752318732010-09-08T06:58:00.005+05:302010-09-08T20:55:43.004+05:30காத்திருந்த பயணம் - ஆ<div style="text-align: justify;">கூந்தலூர் - எங்களின் பூர்வீகமான ஊர் என்று அப்பாவும், தாத்தாவும் சொல்லி கேள்விபட்ட இடம். எனது தாத்தாவரை அங்குதான் பிறந்துள்ளார்கள். பின்னர் தாத்தாவின் அப்பாவின் கர்ணம் (கணக்காளர்) வேலையின் பொருட்டு மயிலாடுதுறை பகுதியிலுள்ள திருக்களாச்சேரி என்னும் கிராமத்தில் குடிபெயர்ந்துவிட்டனர். என் அப்பா பிறந்து வளர்ந்த ஊரெல்லாம் அதுவே. ஆகையால் கூந்தலூர் செல்வது எனக்கு அதுவே முதன்முறையாகும்.<br /></div><div style="text-align: justify;"><br />கேள்விபட்ட பூர்வீக ஊரை பார்க்கப்போவதில் ஒருவித ஆர்வம் மேலோங்கியே இருந்தது. குடந்தை மற்றும் சென்னையிலுள்ள உறவுகள் சூழ செல்வதில் மேலும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வண்டி பற்றாத நிலை. மற்றொரு மகிழுந்துவையும் ஏற்பாடு செய்து கொண்டு கூந்தலூர் நோக்கி புறப்பட்டோம். நாங்கள் செல்வதற்கு முன்னரே அந்த கோயில் பூசாரியிடம் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய சொல்லியிருந்தோம். சிறிய கிராமங்களிலுள்ள ஆலயத்தில் நினைத்த நேரத்தில் சென்று பூசாரியை பார்த்து அனைத்து வேலைகளையும் செய்வது என்பது மிகுந்த கடனமான காரியமாகும். இரண்டு-மூன்று கோயில்களுக்கு சேர்த்து ஒரு பூசாரியோ/குருக்களோதான் இருப்பார்கள். ஆகையால் முன்னேற்பாட்டுடன் சென்றோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj689S5pDn_UzQdvoU_FMdFjF67xu_TUEB-2nnKPkp9lHOhBS7X8KJmqBHImw_TeesgDIzhZ_81QIXxRHTBsqSFvVk6mEuIAuq8TkjNKAtmbV3p5rm7atHcOLUjegLyqS6jc8dA1e1rVSF3/s1600/Picture+075.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj689S5pDn_UzQdvoU_FMdFjF67xu_TUEB-2nnKPkp9lHOhBS7X8KJmqBHImw_TeesgDIzhZ_81QIXxRHTBsqSFvVk6mEuIAuq8TkjNKAtmbV3p5rm7atHcOLUjegLyqS6jc8dA1e1rVSF3/s320/Picture+075.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513919862595724786" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicXcIe8tPKlZRAfwE5sWx4A1s8r3DiHOXjQQxSS8bpFRyvMBosy_8Ad36lfdahhYcA0-qzesw0KrxXrYEFkR8Dw28-sxGo4IVV5bLXd4XL3rOURDNqWBcouoKQWDgcRW3iIyc2uqpOTHDz/s1600/Picture+126.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicXcIe8tPKlZRAfwE5sWx4A1s8r3DiHOXjQQxSS8bpFRyvMBosy_8Ad36lfdahhYcA0-qzesw0KrxXrYEFkR8Dw28-sxGo4IVV5bLXd4XL3rOURDNqWBcouoKQWDgcRW3iIyc2uqpOTHDz/s320/Picture+126.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513919871193005026" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdqbZDQHCbKHqzhzTi6mqL1hjWoXTiQgE6OzKUKRGR3qU2uQ2yxgeUXWap6gTR0hAxfpfo1DxVZPmjVC63UXd495H_GpdkvKtoP4MbW6UNjnobwbals_h89L-aSdMgdbObr8NiXB8V2AMo/s1600/Picture+108.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdqbZDQHCbKHqzhzTi6mqL1hjWoXTiQgE6OzKUKRGR3qU2uQ2yxgeUXWap6gTR0hAxfpfo1DxVZPmjVC63UXd495H_GpdkvKtoP4MbW6UNjnobwbals_h89L-aSdMgdbObr8NiXB8V2AMo/s320/Picture+108.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513921213287926354" border="0" /></a><br />காவிரியின் ஒரு கிளைநதியின் கரையில் அந்த கோயில் அமைந்திருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் குடமுழுக்கு நடைப்பெற்று ஆலயம் சிறப்பாக இருந்தது. பூசாரி சந்நிதியினுள்ளே அம்மனின் அபிஷேக ஏற்பாடுகளை கவனிக்க, எங்கள் மக்கள் சந்நிதியின் வெளியே பூசைக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடலானர். முந்தைய காலங்களாக இருந்திருந்தால் காவிரியில் நீர் எடுத்துவந்து சுத்தம் செய்து பூசைக்கான வேலைகளை செய்திருப்பார்களாம். எங்கள் பாட்டி இருந்த காலத்தில் அவ்வாறுதான் எல்லாம் நடந்ததாக எனது அண்ணன் கூறினார். இப்போதோ பாட்டியும் இல்லை, காவிரியில் அவ்வளவு தண்ணீரும் இல்லை. அவர்கள் இருக்கும்போது வந்திருந்தால் மகிழ்ச்சி பலமடங்காக இருந்திருக்கும். கிடைத்த இந்த சந்தர்ப்பத்திற்காக மகிழ்ச்சி அடைந்துக்கொண்டோம். கோயிலிலேயே அடிபம்பு அமைத்துவிட்டதால் தண்ணீருக்கு கவலையில்லை.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpKSVG9DyngEf4E0EtHFUO8hNusmgJQNY58rah0Z35ZYA3RRJ3yGvrwh09oYynij5asCVR5IKrtmxjLTh37CYgiAAymJ_EsalKnLOYuGUEMckERaa8rOW2LJEPhJVrcp9oJdh2_S89JcAp/s1600/Picture+149.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpKSVG9DyngEf4E0EtHFUO8hNusmgJQNY58rah0Z35ZYA3RRJ3yGvrwh09oYynij5asCVR5IKrtmxjLTh37CYgiAAymJ_EsalKnLOYuGUEMckERaa8rOW2LJEPhJVrcp9oJdh2_S89JcAp/s320/Picture+149.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513919852946585058" border="0" /></a><br />அந்த இடத்தை சுத்தம் செய்து அம்மா, பெரியத்தை போன்றோர் பூசைக்கான ஆயத்தங்களை ஆரம்பிக்க சின்னத்தை போன்றோர் அம்மன் பாடல்கள் பாட ஆரம்பித்தனர். பூசைகளில் முக்கியமாக படைப்பது மாவிளக்கு மாவும், காப்பரிசியும், பழங்களும்தான். மாவிளக்கு மாவு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. ஒருகாலத்தில் உரலில் இடித்து மாவு பிசைவார்கள். இப்போதெல்லாம் உரலும் இல்லை; அதற்கான தெம்பும் இல்லை. எல்லாம் அறிவியல் இயந்திரமயம்தான். அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது. அம்மனின் அலங்காரம் முடியவும், பூசைக்கான படையல்கள் தயார் செய்துமுடிக்கவும் சரியாக இருந்தது. அனைவரும் ஒன்றுகூடி அம்மனுக்கு நெய்வேதியம் செய்து தீபாராதனை காட்சி காணப்பெற்றோம். பலஆண்டுகால காத்திருப்பு நிறைவேறியதில் பெரும் மகிழ்ச்சி வீட்டினர் அனைவருக்கும். பூசைகள் முடிந்த பின்னர் எடுத்து சென்றிருந்த உணவினை அங்கேயே முடித்துக்கொண்டோம். இந்த கட்டுசாப்பிட்டிற்கான சுவை வேறு எதிலும் கிடைப்பதேயில்லை. கண், மனம் மற்றும் வயிறு நிறைந்து புறப்பட தயாரானோம்.<br /><br />வண்டியில் ஏறியதும் யாரோ ஒருவரின் அழுகை கேட்டது. கொஞ்சம் அதிர்ச்சியில் என்னவென்று பார்த்தபோது வண்டியில் ஏறும்போது கால்பிசகியதால் வலியில் என் அம்மாவின் கண்களில் கண்ணீர். எங்களுக்கு அதுவும் ஒரு ஆச்சிரியம்தான். இதுவரை தனக்கு எந்தவொரு வலிவந்தாலும் அழுது பார்த்ததேயில்லை. பெரிதாக அதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாதவர். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திவிட்டு கிளம்பினோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8jQrou7O3f27w-gluTkbT3KcdTrBOECRk1F26CekpMn3KKeZGyNwhxlZRtoM5geQnZuYJohf0iXJS1zwB3tHbt4CE_w_8SBpcCAceC-7Nzne-mXT9xzsER3qF5vyDrHfwrTST3ZV2cIaU/s1600/Picture+181.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8jQrou7O3f27w-gluTkbT3KcdTrBOECRk1F26CekpMn3KKeZGyNwhxlZRtoM5geQnZuYJohf0iXJS1zwB3tHbt4CE_w_8SBpcCAceC-7Nzne-mXT9xzsER3qF5vyDrHfwrTST3ZV2cIaU/s320/Picture+181.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513919889117196930" border="0" /></a><br />அந்த ஊரிலுள்ள சிவாலயத்திற்கு சென்றோம். மழை தூறிக்கொண்டே வந்ததால் அங்கும் அவர்கள் கால் தடுமாறி வழுக்கி விழும் சம்பவமும் நடந்தது. நல்லவேளையாக பலத்த பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அந்த ஆலயத்திலும் தரிசனத்தை முடித்துக்கொண்டு குடந்தை நோக்கி கிளம்பினோம். கிளம்பிய நேரம் பெருமழை பிடித்துக்கொண்டு விடாது பெய்து தீர்த்துவிட்டது.<br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-36294138995233745292010-09-07T07:00:00.018+05:302010-09-07T07:41:48.062+05:30காத்திருந்த பயணம் - அ<div style="text-align: justify;">பயணங்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியை அளிக்கும் விடயம். சில இடங்களுக்கு நினைத்தவுடன் சென்றுவர முடிந்துவிடுகிறது; சில இடங்களுக்கு ஒருசில மாதங்களோ, வருடங்களோ காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த பயணத்தை பொறுத்தவரை சுமார் முப்பது வருட காத்திருப்பு இதன் பின்னால் இருந்துள்ளது. சென்ற ஆண்டு திசம்பரில் நான் ஊருக்கு செல்வதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே எங்கள் வீட்டில் இம்முறை எப்படியேனும் இந்த பயணத்தை மேற்கொண்டுவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.அவ்வாறு நாங்கள் செல்ல விரும்பியது எங்கள் குலதெய்வ கோயிலுக்கு.<br /></div><div style="text-align: justify;"><br />கூந்தலூர் - கும்பகோணம் (குடந்தை) அருகில் எரவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமம். அங்குள்ள அம்மன்தான் குலதெய்வம்.இத்துனை ஆண்டுகளில் பலமுறை குடந்தைக்கும், சொந்த ஊரான மயிலாடுதுறைக்கும் சென்று வந்திருந்தாலும் கூந்தலூர் செல்வது மட்டும் கைகூடாமலேயே இருந்தது. எல்லாவற்றிற்கும் நேரங்காலம் வரவேண்டுமென்று சொல்வது உண்மையோ என்று எண்ணவைக்கிறது.<br /><br />குடந்தையை அடித்தளமாக வைத்து பயண ஏற்பாடுகள் செய்யத்துவங்கினோம். சில நெருங்கிய உறவுகளையும் அழைத்துக்கொண்டோம். இரயிலில் இடம் கிடைக்காததால் வேன் எடுத்துச்செல்வது என்று முடிவாயிற்று. நான்கு குடும்பமாக சென்னையிலிருந்து கிளம்பி குடந்தையிலுள்ள அத்தையின் வீட்டிற்கு செல்வது என முடிவாயிய்று. ஒரு பொடியனுக்கு உடல் நலமில்லாததால் அந்த குடும்பம் எங்களுடன் வரமுடியவில்லை. குடந்தைக்கு தனியாக வண்டியெடுத்து செல்வதால் செல்லும் வழியில் வடலூர் சென்றுவிட்டு செல்வது என்று முடிவு செய்தோம்.வடலூர் இராமலிங்க அடிகளார் மீதும், அவர்தம் கொள்கைகள் மீதும் ஒருவித பற்று சில ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தைக்கு ஏற்பட்டது.ஆகையால் வடலூர் செல்ல வேண்டும் என்ற அவாவும் சில ஆண்டுகளாக அவருக்கு இருந்தது. அது நிறைவேறவும் இதுதான் உற்ற சமயம் போன்று தோன்றியது.<br /><br />திசம்பர் 12.ஆம் தேதி காலையில் நாங்கள் ஏழு பேர் சென்னையிலிருந்து கிளம்பினோம்.வழியில் எடுத்து சென்ற காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சுமார் பதினோரு மணியளவில் வடலூர் சென்றடைந்தோம். முதன்முறையாக சென்றதாலும், குறிப்பிட்ட கால அவகாசமே இருந்ததாலும் சத்திய ஞான சபைக்கு மட்டுமே சென்றோம். சென்ற நேரம் சந்நிதி மூடப்பட்டிருந்தாலும் அடுத்த அரை மணிநேரத்தில் திறக்கப்படும் என்று அங்கிருந்தவர்கள் கூறியபடியால், தரிசனம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் தீர்ந்தது. அங்கு குழுமியிருந்தவர்களில் வயதான ஒருவர் தொடர்ந்து சுவாமிகளின் பாடலை பாடிக்கொண்டிருந்த்தார். அந்த நிலையிலேயே அவரை புகைப்படம் பிடிக்காமல் இருக்க முடியவில்லை.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPl6rveknZ_G7S4JiT_c3NFKrAGcqubDCp6XpvUd6Z5wTprOHhTGghBCy8_A_YeGmdRLUJGHh57p_3uSTK-4Ox9BNrOoCb2ImqUvw2-we-oDmcP9lIGeUyQsIP-QxnIJ8SJe12tyBvAWy6/s1600/Picture+008.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPl6rveknZ_G7S4JiT_c3NFKrAGcqubDCp6XpvUd6Z5wTprOHhTGghBCy8_A_YeGmdRLUJGHh57p_3uSTK-4Ox9BNrOoCb2ImqUvw2-we-oDmcP9lIGeUyQsIP-QxnIJ8SJe12tyBvAWy6/s320/Picture+008.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513908703741146738" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhxUKMEVwsvVLbBJoEqxlpYoVbvWKKPfAZdxOHHFiEJJH7BZKO00Z6xM-q4SIrGsg0rDga840gUN6LzheJhCCKV4iRamI2Du8paUWA0HKS6Q5M-LEK2iU4r-0y0ubgdgp1o3nuPq1Ar5Vs/s1600/Picture+017.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhxUKMEVwsvVLbBJoEqxlpYoVbvWKKPfAZdxOHHFiEJJH7BZKO00Z6xM-q4SIrGsg0rDga840gUN6LzheJhCCKV4iRamI2Du8paUWA0HKS6Q5M-LEK2iU4r-0y0ubgdgp1o3nuPq1Ar5Vs/s320/Picture+017.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513908715077742434" border="0" /></a><br /><br />குறித்த நேரத்தில் தீப தரிசனம் கிடைக்கப்பெற்றோம். மிகுந்த நிறைவாக இருந்தது.சிறிது நேரம் அந்த வளாகத்தை சுற்றிப்பார்த்துவிட்டு குடந்தை நோக்கி பயணமானோம். செல்லும் வழியில் சில ஆச்சிரியமான விசயங்களும் அறியெப்பெற்றேன். ஏதோ பழைய பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருக்க அந்த பாட்டை பள்ளியில் பாடி முதல் பரிசு வாங்கியதாக எங்கள் அம்மா கூறினார். இன்பதிர்ச்சி. அம்மாவிற்கு இசையில் நாட்டமுண்டு, பாடவெல்லாம் தெரியும் என்பதே அப்போதுதான் எங்களுக்கு தெரியும். மேலும், ஏதோ பேசிக்கொண்டிருக்கையில் என் தம்பி அந்த விசயத்தைபற்றி சில விடயங்கள் சொன்னான். அவனுக்கும் அந்தமாதிரியெல்லாம் பேசமுடியும் என்பதையே நாங்கள் அப்போதுதான் கண்டோம். அவன் எப்போதும் விளையாட்டுத்தனமாய் இருப்பதால் பல விடயங்கள் அவனுக்கு தெரியாது என்று நாங்கள் தவறான கணக்கு போட்டு வைத்திருந்தோம். சில தெரியாத விடயங்கள் இந்த பயணத்தில் அறியப்பெற்றோம். குடந்தையில் அனைவரையும் ஓராண்டிற்கு பின்னர் கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. சுவையான உணவுடனும், அளவளாவலுடனும் மதிய நேரம் கழிந்தது.<br /><br />கூந்தலூர் செல்வது பிரதானமாக இருந்தாலும் அதனூடே பல ஆலயங்களுக்கும் செல்வதும் எங்களின் திட்டமாக இருந்தது. பலமுறை குடந்தை சென்றிருந்தாலும் வெகுசில ஆலயங்களுக்கே இதுவரை சென்று வந்துள்ளோம். ஆகையால் அன்று மாலை அங்கிருந்த சில உறவுகளையும் அழைத்துக்கொண்டு தாராசுரம், பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி மற்றும் சுவாமிமலை ஆகிய தலங்களுக்கு சென்றோம். அதுவரை தெளிவாக இருந்த வானிலை தாராசுரத்தில் இறங்கியவுடன் மாறத்துவங்கி மழை தூற ஆரம்பித்துவிட்டது.<br /><br />தாராசுரம் பல சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சிவத்தலமாகும். இதற்கு முன்னர் எப்போது சென்றேன் என்பது நியாபகமில்லை. மேலும், இம்முறைதான் புகைப்படக்கருவி இருந்தது. ஆகையால் நிறைய புகைப்படங்கள் எடுக்க திட்டமிட்டிருந்தேன். மழை வந்து அந்த ஆசையை குலைத்துவிட்டது. எனினும் குடைக்குள்ளிருந்து வெகுசில படங்களை மட்டும் எடுத்துக்கொண்டோம். ஆலயத்தில் அங்குமிங்குமாக சில மக்களை மட்டுமே காண முடிந்த்தது. இவ்வாறான ஊர்களில் உள்ள கோயில்களில் சாதாராண நாட்களில் செல்வதிலுள்ள ஒரு வசதியெனில் அது அதிக கூட்டமில்லாமையாகும். அதனால் அடித்துபிடித்து முன்டியடித்து தரிசனம் செய்யத்தேவையில்லை. போங்க-போங்க என்று விரட்டும் மனிதர்களும் இருக்கமாட்டார்கள்.ஆகையால் நின்று நிதானமாக நிம்மதியான தரிசனம் கிடைக்கப்பெற்றோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvo3Kphta_m3Lr2pNZJ5Qu8LXLvZawxeXUReVJt2y_lRAmMPepB2NxDEoEfZz8uQz1fiHz1iheYEbghC0ncqXO8pYF9DBUB7trkHa9_5qa3IfM5-ro0zKK1obeqIoZZr6vu2CXnivX3DmV/s1600/Picture+060.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvo3Kphta_m3Lr2pNZJ5Qu8LXLvZawxeXUReVJt2y_lRAmMPepB2NxDEoEfZz8uQz1fiHz1iheYEbghC0ncqXO8pYF9DBUB7trkHa9_5qa3IfM5-ro0zKK1obeqIoZZr6vu2CXnivX3DmV/s320/Picture+060.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513908724887700866" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgAFDer0EkmQyzG_Sx86vupGc9NAJnU1dKJgluYVG8h28XYnTJB2Qa_R7q6PV36hNGILrAXKa5I3gPaJtkfOJOlMx6_on6pnHaKn0WKMmCMBgcvgbbREYHhmHBVhVMEc0v45FwhL0tEhoG/s1600/Picture+062.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgAFDer0EkmQyzG_Sx86vupGc9NAJnU1dKJgluYVG8h28XYnTJB2Qa_R7q6PV36hNGILrAXKa5I3gPaJtkfOJOlMx6_on6pnHaKn0WKMmCMBgcvgbbREYHhmHBVhVMEc0v45FwhL0tEhoG/s320/Picture+062.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513908738752819826" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG9r3PRney_biyMdH6CJh63h-a4N6p5Nsqxr1cYhIrylnHiqwj0c1Guo1W4LOvszJ_N6dZC3NXeWQ3ePfppmSkCi099qMFTolnTLcNu4q3MK65xbyMXm-SrkbzuZN8rhaln0nkbR1U4vxA/s1600/Picture+064.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG9r3PRney_biyMdH6CJh63h-a4N6p5Nsqxr1cYhIrylnHiqwj0c1Guo1W4LOvszJ_N6dZC3NXeWQ3ePfppmSkCi099qMFTolnTLcNu4q3MK65xbyMXm-SrkbzuZN8rhaln0nkbR1U4vxA/s320/Picture+064.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5513908727836794978" border="0" /></a><br />பின்னர் அங்கிருந்து கிளம்பி பட்டீஸ்வரம் சென்றடைந்தோம். அங்கே வாசலிலேயே வீற்றிருக்கும் துர்க்கையம்மன் பிரசித்தமாகும். அந்த மாலைவேளையில் மிகுந்த அலங்காரத்துடன் அழகாக காட்சியளித்தார். பிற சந்நிதிகள் கோயிலின் உட்புறத்தில் இருந்தது. சென்றுவந்தோம். அமைதியாக அதிக ஆள்நடமாட்டமில்லாமல் இருந்தது. மழை தூறிக்கொண்டே இருந்தது. சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு திருவலஞ்சுழி சென்றோம்.<br /><br />திருவலஞ்சுழியில் வெள்ளை விநாயகர் பிரசித்தம். சென்ற நேரம் மின்சாரம் தடைப்பட்டுபோனது. கற்பூர தீபயொளியில் நிறைவான காட்சி கிடைக்கையில் மின்சாரமும் வந்து அந்த நிமிடத்தை மேலும் நிறைவாக்கியது. விநாயகர் சந்நிதியே வாசலிலிருந்து நல்ல தூரத்தில் இருக்கும். பின்னர்தான் தெரிந்தது அதன்பின்புறம் சிவப்பெருமான் சந்நிதியும், அம்பாள் சந்நிதியும் மேலும் உள்ளடங்கி இருப்பது. சென்று தரிசித்து வந்தோம். தீபங்கள் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தாராசுரம் போல இங்கும் மனித நடமாட்டம் இல்லை. இதுதான் கிராமங்களிலுள்ள கோயில்களின் நிலை பெரும்பாலும். ஆலயங்களை கட்டிய அரசர்கள் என்ன நினைப்பில் இவற்றை எழுப்பியிருப்பார்கள். அவர்கள் இன்றைய நிலையில் இக்கோயில்கள் இருப்பதை பார்த்தால் என்ன நினைத்திருப்பார்கள் என்ற எண்ணம் வராமல் இருக்கபோவதில்லை. எத்துனை மக்கள் இவ்வாறான ஆலயங்களுக்கு வந்து சென்றிருக்க வேண்டும். இப்போது எப்படியுள்ளது.... அங்கிருந்து சுவாமிமலை முருகனை தரிசிக்க சென்றோம். கிட்டத்திட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் சென்றேன். சுவாமிநாதனின் அருமையான தரிசனம் கிடைக்கப்பெற்றோம். அனைவருக்கும் மனம் மிகவும் மகிழ்வாய் இருந்தது.அன்றைய தினத்தை அங்கிருப்பதிலேயே பெரியவரின் பிறந்தநாளை கொண்டாடியும், அடுத்த நாள் கூந்தலூர் செல்வதற்கான ஏற்பாடுகளை முடித்துக்கொண்டும் உறங்கச்சென்றோம்.<br /><br />(பி.கு.: கடந்த ஆறு மாதங்களாக எழுத நினைத்து கடந்த இரண்டு நாட்களில் எழுதிய பயணத்தொடரின் முதல் பகுதி.)<br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-46684440212084108542010-05-07T07:21:00.006+05:302010-05-07T07:30:11.782+05:30சென்ற வாரயிறுதியில்...<div style="text-align: justify;">இங்கு வந்துசேர்ந்து கிட்டத்திட்ட மூன்று மாதங்களாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரேமாதிரியாக சென்றுகொண்டிருந்தது. வாரயிறுதிகளில் அதிகபட்சமாக கடைக்கு செல்வதற்கு மட்டுமே வீட்டினைவிட்டு வருவது என்று பெரும்பாலும் வீட்டினுள் அடைப்பட்டுக்கொண்டிருந்தேன். சிலருக்கு தனிமையில் வெளியில் சென்று வர பிடிக்கும்; சிலருக்கு தெரிந்த நண்பர்களோடோ அல்லது சிறு குழுவாகவோ சென்றுவர பிடிக்கும். நானோ இரண்டாவது ரகம். இங்கு வந்து சேர்ந்ததிலிருந்து சரியான சமயமோ, குழுவோ அமையாததால் பெரும்பாலும் நான்கு சுவர்றிற்குள் சிறை வாழ்க்கை போன்று வாரயிறுதிகளை கடத்திக்கொண்டிருந்தேன். இரண்டு முறை இரண்டு நண்பர்கள் வருவதாக இருந்தது.ஏனோ, இயற்க்கைக்கே பொறுக்கவில்லையோ தெரியவில்லை. அதுநாள்வரை நல்லவிதமாக இருந்த வானிலை நாங்கள் திட்டமிட்டு வைத்திருந்த வாரயிறுதியில் எங்கள் இருவரின் பகுதிகளிலும் கனமழையை கொட்டித்தீர்த்தது. வெறுப்பேற்றி சென்ற நாட்கள் அவை.வாய்ப்புகள் கைநழுவி சென்ற வண்ணமே இருந்தன. நமக்கென்று அதிர்ஷ்டம் இருக்கவேண்டும் என்று சொல்வார்களே....அது எனக்கு இல்லை என்று நினைத்து நொந்துகொண்டிருந்த நாட்களாய் காலம் சென்று கொண்டிருந்தது.<br /><br /></div><div style="text-align: justify;">சென்ற வெள்ளியிரவு பள்ளித்தோழன் வாஷிங்கடன் டி.சி. யிலிருந்து சனியன்று முடிந்தால் எனது இருப்பிடத்திற்கு (பெத்லஹாம்) வருவதாக கூறினான். மறுநாள் காலை மின்னஞ்சல் அனுப்புவதாக கூறியிருந்தான். கூறியபடியே மதியம் 2 மணியளவில் வந்து சேர்வதாக அனுப்பியிருந்தான். மூன்றரை மணி நேர மகிழுந்து பயணம். அவன் வரும் மகிழ்ச்சியில் அவனுக்கும் சேர்த்து சமையலை செய்து முடித்தேன். சேர்ந்து சாப்பிடலாம் என்று காத்திருக்கையில் வழியில் போக்குவரத்தில் மாட்டிக்கொண்டதால் வந்துசேர மேலும் இரண்டு மணி நேரங்கள் ஆகுமென்றான். ஆஹா என்ன சோதனை என்று எண்ணியவாரே காத்துக்கொண்டிருந்தேன். சுமார் மூன்றரை மணியளவில் வந்து சேர்ந்தான். அவனை கண்டதில் எனக்கோ மகிழ்ச்சி. அவன் உணவருந்தியபின் சிறிது நேரம் அளவளாவிக்கொண்டிருந்தோம். இந்நேரத்தில் கணிணியில் மற்றொரு பள்ளித்தோழனையும் அழைத்து பேசிக்கொண்டிருந்தோம்.<br /><br />மாலை என்ன திட்டம் என்று அவன் கேட்க அருகில் கடைகளுக்கு சென்று வரவேண்டும் என்றேன். பேசிக்கொண்டே இருக்கையில் இரவு நமது உணவருந்த நியு ஜெர்சி எடிசனிலுள்ள சரவண பவன் செல்லலாமா என கேட்க, சென்று வர ஆகும் நேரத்தை யோசிக்க சொன்னேன். மேலும், வெகுநேரம் வண்டியை ஓட்டி வந்ததால் அசதியாக இருப்பானோ என்று யோசித்தேன். அவனுக்கு அசதியொன்றும் இல்லையெனவும், நமது வண்டியில் செல்வதால் எளிமையாக சென்று வந்துவிடலாம் என்றும் அவன் கூற, உடனே கிளம்பிவிட்டோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDX4QLDLvZB-kPlVf0qWkFZ6wiUD9CFxu-Lj3VXgELI0Hk1FuZfc_9o2nwnXEYriVPbHC6ja8-1F2-Pv-5VFQnY2qGQtwedh69sB4LUUulf3uyotLNlIIMlB1Bxzv1Q464h4JX9V-Z-07o/s1600/Picture+013.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDX4QLDLvZB-kPlVf0qWkFZ6wiUD9CFxu-Lj3VXgELI0Hk1FuZfc_9o2nwnXEYriVPbHC6ja8-1F2-Pv-5VFQnY2qGQtwedh69sB4LUUulf3uyotLNlIIMlB1Bxzv1Q464h4JX9V-Z-07o/s320/Picture+013.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5468263771122671426" border="0" /></a><br />மாலை ஐந்து மணியளவில் கிளம்பினோம். அங்கே ஒரு கோயில் இருப்பதாகவும் செல்லலாமா என்றும் கேட்டான். உடனேயே சரியென்றேன். செல்லும் வழியில் காபி அருந்த சில நிமிடங்கள் நிப்பாட்டினோம். அந்த இடைவெளியில் வெகுநாட்களாக வாங்க எண்ணி தள்ளிபோட்டுக்கொண்டே வந்த கைப்பேசியை வாங்கி முடித்தோம். எத்துனை நாள் காத்திருப்பு. சில உந்து சக்திகளால்தான் பல விடயங்கள் எனக்கு சாத்தியமாகிறது என்பது மறுக்க முடியாதவொன்று.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPM9rf3VFQHHCqvekXa4OkXPLLv0UDxTpOlx-ONOmcE2vkiGB068l-_xZexltUaBxVo5grNnRi4REcUPyxalgGmHGFDv-YQUy-n4nZE8WuDOOWYY6TUlmGSSptE-A8UvPn7A5dZcgqXlPa/s1600/Picture+029.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPM9rf3VFQHHCqvekXa4OkXPLLv0UDxTpOlx-ONOmcE2vkiGB068l-_xZexltUaBxVo5grNnRi4REcUPyxalgGmHGFDv-YQUy-n4nZE8WuDOOWYY6TUlmGSSptE-A8UvPn7A5dZcgqXlPa/s320/Picture+029.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5468263779401353458" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvBcmvIEJY_YYsZGXuAV_ry6vBmfl05sabWymEpub_xT1KC5VySZaGNo_K5GY4YnfQrphqPjRjnObvxePyWNHPmc3Mn-_2_mvLyvl3k8jrzvYgRUPh6wPHpUvG_JpvWoP6PdVf06N7ArTd/s1600/Picture+015.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvBcmvIEJY_YYsZGXuAV_ry6vBmfl05sabWymEpub_xT1KC5VySZaGNo_K5GY4YnfQrphqPjRjnObvxePyWNHPmc3Mn-_2_mvLyvl3k8jrzvYgRUPh6wPHpUvG_JpvWoP6PdVf06N7ArTd/s320/Picture+015.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5468263783041998450" border="0" /></a><br />அங்கிருந்து கிளம்பி நேரே வுட்பிரிட்ஜ் அவன்யுவிலுள்ள ஆலயத்தை அடைந்தோம். ஆலயத்தில் கிட்டத்திட்ட அனைத்து சுவாமி விக்கிரங்களும் இருந்தன. அன்று சங்கடஹர சதுர்த்தி. சனிக்கிழமை வேறு. ஆலயத்தில் நல்ல கூட்டம். அந்த அளவு நம் நாட்டு மக்களை கண்டது ஒருவித மகிழ்ச்சியை தந்தது. என்னதான் எல்லைகள் இல்லையென்று கூறிக்கொண்டாலும், எங்கோ இருக்கும்போது பிறந்த நாட்டு மக்களை யார், எவர் என்று தெரியாமல் இருந்தாலும், அவர்களையெல்லம் ஓரிடத்தில் காண்பது கண்டிப்பாக மகிழ்ச்சியையே அளிக்கின்றது. ஒத்த வயதுடையோர், அவர்களின் குழந்தைகள் மற்றும் பெற்றோர் என பல வயதுடைய மக்கள். பெரும்பாலும் தென்னிந்தியர்கள். சில வயதான பெற்றோர் தங்களின் பேரக்குழந்தைகளுடன் நேரத்தை கழித்துக்கொண்டிருந்தனர். இறை தரிசனமும் நன்றாக கிடைத்தது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixVv3yA2AFcXB_cdWHn1W99e9ZHN_SDgluHmcU28Mr9uNJRMAYI6KbO1hTn9HFm4nt80sLi9yG2rf0tM4rSUUyy_pZ68BbtExtUR1mvoHaOP1MsFDwvAMMxonh1KwyJkjZ56gWBP7gPKOR/s1600/Picture+039.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixVv3yA2AFcXB_cdWHn1W99e9ZHN_SDgluHmcU28Mr9uNJRMAYI6KbO1hTn9HFm4nt80sLi9yG2rf0tM4rSUUyy_pZ68BbtExtUR1mvoHaOP1MsFDwvAMMxonh1KwyJkjZ56gWBP7gPKOR/s320/Picture+039.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5468263788013746114" border="0" /></a><br />சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு உணவருந்த சரவண பவன் நோக்கி கிளம்பினோம். இரவு ஒன்பது மணியளவில் அங்கு சென்று சேர்ந்தோம். அங்கும் வரிசையில் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு வெளியில் சாப்பிடும் நம் நாட்டு உணவு. சுவைத்து சாப்பிட எண்ணுகையில் ஒரு விடயத்தை கூறினான். மணி, அருகில் தமிழ்த்திரைப்படம் திரையிடுகிறார்கள். அதற்கு செல்வோம் என்றான். எனக்கு சற்று அதிர்ச்சி. சாதாரணமாகவே மிக குறைந்த எண்ணிக்கையிலேயே படம் பார்க்கும் பழக்கமுள்ளவன். அதுவும், அவன் கூறிய படம் பற்றி நிறைய திரைப்பார்வைகள் படித்துவிட்டதாலும், அந்த படத்தில் முதலிலிருந்தே விருப்பமில்லாதிருந்ததாலும் வேண்டாம் என்றேன். உணவு பறிமாறப்படவும் காலதாமதமானதால் தப்பித்து விடலாம் என்று நினைத்தேன். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்???? அது எப்படி நீ தப்பிக்கலாம் என்று அவன் கூறி உணவினை முடித்துக்கொண்டு சரியான நேரத்திற்கு படத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டான். எப்பொழுதுமே மகிழ்வாக இருக்க முடியுமா என்ன? அனுபவி ராசா அனுபவி என்று எண்ணியபடியே திரையரங்கினுள் சென்று உட்கார்ந்துவிட்டோம். படம் துவங்கிய முப்பது நிமிடங்களிலெல்லாம் அவனே இப்படி படம் இருக்குமென எதிர்பார்க்கவில்லையே என்று வருந்தினான். வெள்ளியில் சீட்டு வாங்கி போய்யாகிவிட்டது; வேறு வழியில்லை. முழு படத்தையும் பார்த்துவிட்டு இரவு ஒன்றரை மணியளவில் அங்கிருந்து கிளம்பினோம். அப்படி நாங்கள் பார்த்த படம் - சுறா. நாடுவிட்டு நாடு வந்து இந்த படத்தை திரையரங்கினுள் பார்ப்பேன் என்று சற்றும் நான் எண்ணவில்லை.விதி வலியது... வீடு வந்து சேர மணி மூன்றானது.அதன் பிறகு கணிணியில் குடும்பத்தாரோடும், உறவினர்களோடும் பேசிவிட்டு அந்த நாளை முடித்து படுக்கையில் சாய்கையில் அதிகாலை மணி நான்கரை.<br /><br />அடுதத நாள் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்கு இந்த ஊரிலேயே உள்ள ஒரு இந்திய உணவகத்திற்கு சென்று வந்தோம். அதன் பின்னர் சில வாங்க வேண்டிய பொருட்களை வாங்க உதவிசெய்து விட்டு நண்பன் கிளம்பிச்சென்றான்.<br /><br />அந்த வாரயிறுதி எதிர்பாராமல் பல விடயங்களை அளித்து சென்றுள்ளது. இதற்கு முன்பு தனிமை என்ற தலைப்பில், அதன் வலியை உணர்ந்து(ம்), அனுமானமாகவும் கிறுக்கியிறுந்தபோது பல நட்புக்கள் திட்டாத குறையாக திட்டித்தீர்த்தன. அந்த உணர்விலிருந்து விடுப்பட்டு கழித்த சென்ற வாரயிறுதியின் ஒரு நாள், மகிழ்ச்சியை மனதில் ஆழமாக விதைத்துவிட்டு சென்றுவிட்டது. மறுபடியும் அத்தகைய நாள் எப்போது கிடைக்குமோ என்ற கேள்வியையும், ஏக்கத்தையும் எழுப்பியே சென்றுள்ளது.<br /><br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-55111132133778086232010-03-30T07:15:00.003+05:302010-03-30T07:21:25.017+05:30தனிமையாருமற்ற நேரங்களில்<br />தனிமையின் நிசப்தங்களில்<br />செவிகளில் பாய்வது<br />மரணத்தின் ஓலங்கள்.<br /><br />எதை தேடி இந்த பயணம்<br />யாரை ஏமாற்றி இந்த வாழ்வு<br />ஏதேதோ சாக்குபோக்கு கூறினாலும்<br />உண்மையான பதில் கூறியதாய்<br />தெரியவில்லை...<br />கூறத்தெரியவுமில்லை.<br /><br />தோள் சாய யாருமின்றி<br />மொழி பேச நாதியின்றி<br />கரையும் நேரங்கள் கொடிது.<br />நேரில் பேச யாருமில்லாமல்<br />பேசும் சில மனிதர்களுக்காக<br />பல மணிநேரம்<br />கணினி முன் காத்திருந்து<br />சில மணிகளுக்கப்பால் பேச விசயங்களின்றி<br />நேரத்தை கொல்லும் நிலைமை...<br />அனுபவிக்கையில் கொடுமை.<br /><br />என்னியல்பில்லாத குணங்கள் புதிதாய்<br />குடிகொண்டுள்ளன...<br />பொறாமை...<br />பலரின் சொல்லும் செயலும்<br />ஏற்படுத்தும் ஏக்கம்<br />விளைவோ<br />ஏராளமானோர் மீது பொறாமை.<br />எதிர்பாராமல்<br />என்னுள்ளும் பொறாமை.<br />நிலை மறந்த இக்குணத்தால்<br />என் மனமும்<br />கேவலமானவனே என்கிறது...<br />என்னை<br />குற்றவாளியாக்கிவிட்டது.<br /><br />மனம் சஞ்சலத்தில் அலைபாய<br />குற்றயுணர்ச்சியில்<br />மனம் சங்கடப்படுத்துகின்றது.<br /><br />ரசித்த விசயங்கள்<br />சுவையிழந்து போகின்றன<br />அர்த்தமற்றதாகி போகின்றதோ வாழ்க்கை.<br />தொலைத்துக்கொண்டிரிக்கின்றேனோ என்னை...<br />புரியவில்லை.<br />மரணத்திருக்கலாமோ என்கிறது<br />ரணமான மனம்.மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-31505286226664225052010-01-28T09:40:00.003+05:302010-01-28T10:15:22.410+05:30ம்....<div style="text-align: justify;">இறக்கும் நாள் தெரிந்தால் வாழும்நாள் நரகமாகிவிடும் என்று படித்ததுண்டு. அதை போன்றதொரு நிலையில் தற்போது உள்ளது போன்று உணர்கிறேன். நிற்க... எனது இறக்கும் நாள் எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் எனது இரண்டு மாத விடுமுறை முடிந்து இங்கிருந்து நான் கிளம்பும் நாள் முடிவாகிவிட்டது. கிளம்ப இன்னும் நான்கைந்து நாட்கள் உள்ளன. எனினும் கடந்த இரண்டு வாரங்களாகவே மனம் ஏனோ மிகவும் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடன்தான் விடிகின்றது. அடுத்து செல்லப்போகும் இடம் மிகவும் ஆவலுடன் முயன்று, காத்திருந்து செல்ல அனுமதி பெற்ற இடம். சுமார் மூன்றாண்டு கனவு இது. இருந்தும், கிளம்பும் நாள் நெருங்க நெருங்க மனதில் இனம்புரியாத உணர்ச்சி ( வலி, கலவரம்...) பற்றிக்கொண்டு எறிகின்றது. கனவு தேசத்திற்கு கிளம்புகிறாய் என்றும் உனது நெடுநாளைய கனவு பலிக்க போகின்றது என்றும் கலாய்த்த, வாழ்த்திய எனது நெருங்கிய நட்புக்களுக்குகூட தெரியாது எனது மனதில் நான் நடத்திக்கொண்டிருக்கும் இந்த போராட்டம். இந்த பல்கலைகழகத்திற்கு ஓரிரு ஆண்டுகளாவது செல்லவேண்டும் என்ற அவாவுடன் விரும்பி ஏற்றுக்கொண்டதொரு பணியிடம் இது. எனினும், எதனால் என் மனம் இவ்வளவு தடுமாறுகின்றது என்று தெரியவில்லை. இதுவரை புதிய இடத்திற்கு செல்லும்போது இவ்வாறான நிலையில் இருந்ததில்லை. இப்போது ஏன் என்று புரியவில்லை. குடும்ப கூட்டினைவிட்டு மீண்டும் தனிமையை நோக்கி செல்வதாலா என்று தெரியவில்லையே. ம்... எடுத்த பணியினை முடிக்காமல் விடமுடியாது. அதற்காகவாவது சென்றுத்தான் ஆகவேண்டும். இப்போதைய வேண்டுதலெல்லாம் இருக்கும் இந்த இறுதி நாட்கள் மெதுவாக செல்லவேண்டும் என்பதுதான். நேரம் ஒரேமாதிரிதான் செல்லும் என்று தெரியும். மனமாவது மெதுவாக செல்வதுபோல உணரவேண்டும். ம்....உணர்த்த முடியா உணர்ச்சிகளுடன் இங்கே மீதமிருக்கும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றேன்... <br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-42836538917325675342009-12-11T12:02:00.007+05:302009-12-11T12:28:00.856+05:30புறப்பட்டுவிட்டேன்<div style="text-align: justify;">நினைக்கையில் எனக்கே ஆச்சிரியமாக உள்ளது. இப்போதுதான் இந்த நாட்டிற்கு வந்ததுபோல உள்ளது; அதற்குள் ஓராண்டு முடிந்து கிளம்பிவிட்டேன். மனம் மகிழ்ச்சியாய் இருந்தால் நாட்கள் செல்லும் வேகமே தெரியாது என்பர். அதனை இப்போது நான் உணர்ந்தேன். இதற்கு எதிர்மறையாக இதற்கு முந்தைய ஆண்டு சென்றது. அப்போது தென்கொரியா வாசம். அந்த நாட்களில் எப்போது ஒவ்வோரு மாதமும் முடியும், எப்போது அந்த இடத்தை விட்டு வீட்டிற்கு திரும்புவேன் என்று எண்ணாத நாட்களே இல்லை எனலாம். எந்த அளவிற்கு புலம்பியுள்ளேன் என எனது நண்பர்கள் கூறுவார்கள். ஏனோ எந்த விதத்திலும் அந்த நாட்டில் இருந்தபோது மனம் மகிழ்வாகவோ, அமைதியாவோ இல்லை. அதற்கு எனது வேலையில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் ஒரு முக்கிய காரணம் எனலாம். மனதில் எந்நேரமும் ஒருவித பயத்துடன் பழகிய நாட்கள் அவை. எனது நெருங்கிய நட்பு வட்டாரமும், அங்கு கிடைத்த சில அருமையான நண்பர்களாளும் எப்படியோ அந்த ஆண்டை முடித்துக்கொண்டு அதற்கடுத்து பிரான்ஸ் வருவதை உறுதிபடுத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.<br /><br />பிரான்ஸ் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என என் நண்பர்கள் கூறியிருந்ததால் மனதில் ஒருவித நம்பிக்கையுடனே வானூர்தி ஏறினேன். எனினும், மனதில் எந்தவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. பழைய அனுபவம்; எதிர்பார்ப்புடன் வந்து ஏமாற்றமடைய மனதில் தைரியம் இல்லை. ஆனால், இந்த வாழ்க்கை மிகவும் அமைதியாக இருந்தது. இங்கும் எடுத்த பணியில் சிக்கல்கள் இருந்தது. எனினும் அதனை எதிர்நோக்கவும், தவறு செய்யும்போதோ, குழம்பி தவிக்கும்போதோ நல்லவிதமாக ஆலோசனை கூறவும் சுற்றிலும் மக்கள் இருந்தனர். சிக்கல்களை புரிந்து கொண்டனர். அதுவே மிகவும் உற்சாகமூட்டுவதாகவும், தைரியமளிப்பதாகவும் இருந்தது.<br /><br />கிடைத்த மகிழ்ச்சியில் நாட்கள் சென்றதே தெரியவில்லை.ஓராண்டு முடிந்துவிட்டது. இங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரமும் வந்து கதவை தட்டிக்கொண்டிருக்கிறது. நல்லவேளையாக அடுத்து எங்கு, என்ன என்பதற்கு விடை கிடைத்துள்ளது. சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர்கூட தோன்றாத எண்ணம் இப்போது அதிகமாகியுள்ளது. எப்போது வீடு வருவேன் என்ற எண்ணம். இதோ கிளம்பிவிட்டேன். அம்மாவின் சமையலை சுவைக்க, அப்பாவை பல இடங்களுக்கும் அழைத்துச்செல்ல, சொந்தங்களையும், நட்புக்களையும் காண புறப்பட்டு விட்டேன். இந்த தனிமையிலிருந்து சில நாட்களுக்கு விடுதலை. திங்கள் காலை சென்னையில். நினைக்கையில் மகிழ்வாக உள்ளது.<br /><br />வீட்டினை ‘மிஸ்’ பண்ணவில்லையா என்றனர் சிலர். மூன்று வாரங்களுக்கு முன்புவரை ‘மிஸ்’ பண்ணவில்லை. இணையத்தின் வழியாக தினமும் பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்ததால் அதிகமாக ‘மிஸ்’ பண்ணவில்லை. ஆனால், இப்போது மனதிலே எப்போது வீடுவருவேன் என்ற எண்ணம் பரவியுள்ளது. ஐரோப்பாவை ‘மிஸ்’ செய்வேனா என்றனர் நண்பர்கள். ஆம் கண்டிப்பாக ‘மிஸ்’ பண்ணுவேன். பல விடயங்கள் பிடித்திருந்தது; அதற்காக உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு இங்கேயேவெல்லாம் இருக்க முடியாது. இன்னும் சில இடங்களை கண்டுவிட்டு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். முக்கியமாக சுவிட்சர்லாந்து, ரோம் நகரம். அது மட்டும் முடியவில்லை. நேரமும் வாய்ப்பும் அமையவில்லை. அந்த வருத்தத்தை மனதில் சுமந்துக்கொண்டு வேறுவிதமான மகிழ்ச்சியை தேடி சென்னையை நோக்கி செல்கின்றேன்.<br /><br /> <span style="font-weight: bold;">- எழுதியது 29-11-09</span><br /><br /><br />இதோ வந்துசேர்ந்து பத்து நாட்களாகிவிட்டது. சென்னை மழையும் தனது தனித்தன்மையை காட்டிக்கொண்டிருக்கிறது. பலவிதமான பயண அனுபவங்களும் ஆரம்பமாகிவிட்டது. செல்லவேண்டிய இடங்களும், செய்துமுடிக்க வேண்டிய காரியங்களும் இம்முறை சற்று அதிகமாக உள்ளது. எப்போதும்போல மகிழ்வுடன் அவற்றை துவங்கிவிட்டேன். வேறு சில ஆசைகளும் உள்ளது- இணையத்தில் எழுத்துகளாய் மட்டுமே பார்த்த சிலரை கண்டு கலந்துரையாடவேண்டும், தொடர்ந்து வாசிக்கும் <a href="http://www.chennaitrekkers.org/">chennaitrekkers.org</a> குழுவினருடன் சில இடங்களுக்கு செல்ல வேண்டும், இன்னும் சில. எனினும், முடியுமா என்று தெரியவில்லை. எவையெல்லாம் சாத்தியப்படுகின்றது என்று பார்க்கவேண்டும். வாய்ப்புகள் இருந்தாலும் இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை குறைத்துவிடுவேன் என்பது மட்டும் எனக்கு சாத்தியமான ஒன்று. இருக்கும் இந்த சில நாட்களை தனிமையை தவிர்த்து அதிகமாக மக்களோடு செலவழிக்க விரும்புகிறேன். ஏனெனில் இந்த விடுமுறை நாட்களும் எப்போதும் போல வேகமாக சென்றுவிடும்.<br /><br />இப்போதும் ஓராண்டு முடிந்துவிட்டதென்று நம்பமுடியவில்லை...<br /> <br /><span style="font-weight: bold;">- எழுதியது 09-12-09</span><br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-88216861822597126992009-11-25T13:45:00.003+05:302009-11-25T13:45:00.662+05:30அடப்போங்க மக்கா....<div style="text-align: justify;"><br /><span style="font-weight: bold;">காட்சி - 1</span><br /><br />என்ன அவனுக்கு ஏதாவது வரன் வந்ததா?<br /><br />எங்க...ஒன்னும் சரியா அமையமாட்டைங்குது.<br /><br />அவன் ரொம்ப எதிர்பார்க்கிறான். இந்த காலத்தில பெண் கிடைப்பதே ரொம்ப சிரமமாயிருக்கு; அவன் என்னன்னா இப்படி வேண்டாம், இந்த படிப்பு வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கான். அவன் கேட்கிற மாதிரியெல்லாம் பெண் கிடைக்காது. எல்லா விடயங்களும் ஒத்துப்போகாது. ஏதோ ஓரளவு ஒத்துப்போச்சுன்னா அதை முடிச்சிடனும். அதை விட்டுட்டு இப்படித்தான் பெண் வேண்டும்னா இப்படியே இருக்க வேண்டியதுதான் கடைசிவரைக்கும். கல்யாணமே நடக்காது. அவனுக்கு நீங்கதான் எடுத்துச்சொல்லனும்.<br /><br />எனக்கும் அதுதான் கவலையா இருக்கு.<br /><br /><br /><span style="font-weight: bold;">காட்சி - 2</span><br /><br />தம்பி. இன்னைக்கு அவங்க பேசிக்கிட்டிருந்தாங்க.<br /><br />ஓ...எப்படி இருக்காங்க? என்ன சொல்றாங்க?<br /><br />அவங்க நல்ல இருக்காங்க. உன் திருமணத்தை பற்றித்தான் விசாரிச்சாங்க.<br /><br />ஓ...<br /><br />உன்னோட எதிர்பார்ப்புகள் அதிகமா இருக்காம். அப்படியெல்லாம் எதிர்பார்க்கிற மாதிரி கிடைக்காதாம். வருகின்ற வரன்ல ஏதாவது ஒன்றை முடிக்க சொல்றாங்க.<br /><br />ம்..இது என்ன கடைக்கு போய் துணி வாங்கவருவது மாதிரி நினைத்து கொண்டு சொல்கிறார்களா? கிடைத்ததை முடிங்கறதிற்கு. துணிகூட பிடித்தால்தான் வாங்கறோம். அப்படி இருக்கும்போது இது வாழ்க்கைத்துணை. அவங்க பிள்ளைகளுக்கெல்லாம் எப்படி பார்த்தாங்கனு நமக்கு தெரியும்ல. அவங்களும் பயங்கர செலக்டிவ்வாதானே இருந்தாங்க/இருக்காங்க. ஒவ்வொரு விடயத்தையும் தேடித்தேடிதானே பார்த்தாங்க/பார்த்துகிட்டிருக்காங்க. எந்த அளவுக்கு சமரசம் செய்துகொண்டாங்க. அவங்க பிள்ளைகளுக்குனா அப்படியெல்லாம் தேடி வரன் பார்க்கலாம். ஆனால், நான் கொஞ்சம் படிப்பிலே செலக்டிவ்வா இருக்கறது தப்பா?<br /><br />என்ன செய்வது? நீ கேட்கிறது போல கிடைக்க மாட்டைங்குதே. அதான் சொல்றாங்க.<br /><br />கிடைக்கும், கவலைப்படாதீங்க. வாழ்க்கையில் சமரசம் செய்து கொள்ளலாம்; அதற்கு நான் எப்பவும் தயார். ஆனால் மற்றவர்களுக்காக வாழ்க்கையையே சமரசமா ஆக்கிக்க முடியாது. இந்த விடயத்திலும் நிறைய சமரசம் செய்துவிட்டேனென்று உங்களுக்கே தெரியும். நான் அவர்களின் கல்வித்துறை சார்ந்த விடயத்தில் மட்டும்தான் எதிர்பார்ப்போடு இருந்தேன்/இருக்கேன். அந்த எதிர்பார்ப்பு கூட இருக்கக்கூடாதுனா எப்படி? என்ன, இதனால் வரன் கிடைக்க எனக்கு கொஞ்சம் தாமதமாகுது. காத்திருக்கும் நாட்கள் அதிகமாகுது. அவ்வளவுதான்.<br /><br />சரி..எப்ப நேரம் வருகின்றதென்று பார்ப்போம்.<br /><br />கண்டிப்பா வரும். நீங்க தைரியமா நம்பிக்கையோட இருங்க. <br /><br />(ஏன் இப்படி தம் பிள்ளைகளின் (மகன்/மகள்) எதிர்பார்ப்பு எப்போதும் சரியென்பது போலவும் மற்ற பிள்ளைகளின் எதிர்பார்ப்பு எல்லை மீறியது என்பது போலவும் சிலர் மனதில் எண்ணம் ஏற்படுகின்றது என்று எனக்கு புரியவில்லை. தனக்கொரு நியாயம் பிறர்க்கொரு நியாயமா? அடப்போங்க மக்கா...)<br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-72171450379685841102009-11-09T13:45:00.005+05:302009-11-09T13:45:00.678+05:30ஐரோப்பாவில் கோடை விடுமுறை - ஈ<div style="text-align: justify;">பெல்சியம் நாட்டிலுள்ள தோழியை காண இதற்கு அடுத்த வாரயிறுதியில் பயணித்தேன். நான் சென்ற அடுத்த நாள் பெல்சியம் நாட்டின் தலைநகரான புரூசல்ஸ் சுற்றிப்பார்க்க சென்றோம். தோழியின் தாயாரும் வந்திருந்ததால் மூவரும் சென்றோம். இங்கும் சுற்றுலா துறையின் ஹாப் ஆன் – ஹாப் ஆப் பேருந்தில் ஒரு நகர சுற்றுலாவினை முதலில் முடித்தோம். இந்த சுற்றின் கடைசி நிறுத்தமான ராயல் அரச மாளிகை எங்களின் முதல் நிறுத்தமானது. மாளிகையின் உள்ளே சென்று பார்த்தோம். நன்றாக பராமரிக்கின்றனர். உள்ளே புகைப்படங்கள் எடுக்கமுடியாது; ஆகையால் அவற்றை ரசித்து மனதினில் உள்வாங்கிக்கொண்டு வருவதுதான் ஒரே வழி. பல விடயங்கள் பிரம்மாண்டத்தை அளித்தது. அங்கே தொங்கவிடப்பட்டிருந்த சாண்டிலியர் விளக்குகள்கூட பிரம்மாண்டததை அளித்தது என்பது உண்மை. உள்ளேயே அறிவியல் அருங்காட்சியகத்தையும் அமைத்துள்ளனர். குழந்தைகள் செய்து பார்க்கவென தனியாக சில விடயங்களையும் வைத்துள்ளனர். நன்றாக இருந்தது.<br /><br /></div><div style="text-align: justify;"><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNCvhpnnWaYP6P-XTabfH7y53HgKus5mYoaGboY41UsrLETjCgD1ZGPx8LG_TxGHvXeM7vzbnhE47Os5iHUSadO1t9UFtWLBKKnIS9swmuvcqmwfuRRWF5u8I5f9WPMh_9b-ayVMyo-m9l/s1600-h/IMG_5818_Royal+Palace+2.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNCvhpnnWaYP6P-XTabfH7y53HgKus5mYoaGboY41UsrLETjCgD1ZGPx8LG_TxGHvXeM7vzbnhE47Os5iHUSadO1t9UFtWLBKKnIS9swmuvcqmwfuRRWF5u8I5f9WPMh_9b-ayVMyo-m9l/s320/IMG_5818_Royal+Palace+2.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401742486521772626" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi60QX5vuM3LM3E9B2wKwC7-Srg8xjlSRW0tSOuW4RjLcw-TLSCV8plWAKxb21BrZw9ybLtL22Y1GRg_fHmtK5ei38H5CFyqm7QYP_nIMv9l9CGRv8ZmSfNQHiH0gfXx2lXm0jvNln7-Qac/s1600-h/IMG_5820.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi60QX5vuM3LM3E9B2wKwC7-Srg8xjlSRW0tSOuW4RjLcw-TLSCV8plWAKxb21BrZw9ybLtL22Y1GRg_fHmtK5ei38H5CFyqm7QYP_nIMv9l9CGRv8ZmSfNQHiH0gfXx2lXm0jvNln7-Qac/s320/IMG_5820.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401742489812649858" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiRVrWZ39QtjqA6mdRvthFPS2kR-DqcKWhSppMv4SavQBrnbQr99XblEDWXZKiEQV0sXP8zVHR-gCdSRymjJ-kroJsX3HZOe-IItr20AABS3dPWtNNLJ8vYoq56AtV_doeGS6-lvXS5kn5/s1600-h/IMG_5842.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiRVrWZ39QtjqA6mdRvthFPS2kR-DqcKWhSppMv4SavQBrnbQr99XblEDWXZKiEQV0sXP8zVHR-gCdSRymjJ-kroJsX3HZOe-IItr20AABS3dPWtNNLJ8vYoq56AtV_doeGS6-lvXS5kn5/s320/IMG_5842.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401742497676775650" border="0" /></a><br />அங்கிருந்து கிளம்பி கிராண்ட் பிலேஸ் எனும் இடத்திற்கு சென்றோம். நடுவினில் பெரிய வெற்றிடம் விடப்பட்டு அதன் நான்கு பக்கங்களிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கட்டிடங்களான அவை பார்ப்பதற்கு புதியது போல பராமரிக்கப்பட்டு வரப்படுவது அதன் சிறப்பு. அவ்வளவு பழமையானவை என்பதை தோழியின் தாயார் முதலில் நம்பவில்லை. எனினும் அதற்கு சான்றுகளாக அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் கட்டப்பட்ட ஆண்டு பொறிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலுள்ள ஒரு கட்டிடம்தான் நகர மன்றமாக செயல்பட்டு வருகின்றது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfRXtTgqLRkRIcmxkGc7obqNiCTs4wq55cnqUO_Ft4lsA6yAvL6o6VlzYEubN8UM-R62xx3vP8zMaqn4w71PUMZbppNN4rG5h4R3hlkjjwuATYfbCkb5UyAz0BfpdUV0qOG-Xk-1CWzJ90/s1600-h/IMG_5843_Grand+Place+%28Town+Hall%29+1.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfRXtTgqLRkRIcmxkGc7obqNiCTs4wq55cnqUO_Ft4lsA6yAvL6o6VlzYEubN8UM-R62xx3vP8zMaqn4w71PUMZbppNN4rG5h4R3hlkjjwuATYfbCkb5UyAz0BfpdUV0qOG-Xk-1CWzJ90/s320/IMG_5843_Grand+Place+%28Town+Hall%29+1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401742501079413714" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJXemfx7Pma99C_26Bz1njK1Em8I7jGBbBWbVo_XwiTjl8D4KhNmprtzvu1cmENM4EZvCByDc9QNr33yCNAfdfMJpqVHp_mVfwuTsLY0ISJgK5gEAkDkzQuuIC_BR9UX63SL3hklM_izyj/s1600-h/IMG_5852.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJXemfx7Pma99C_26Bz1njK1Em8I7jGBbBWbVo_XwiTjl8D4KhNmprtzvu1cmENM4EZvCByDc9QNr33yCNAfdfMJpqVHp_mVfwuTsLY0ISJgK5gEAkDkzQuuIC_BR9UX63SL3hklM_izyj/s320/IMG_5852.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401743987671628226" border="0" /></a><br />அந்த நகரின் மற்றொரு பார்க்க வேண்டிய இடமாக கூறப்பட்டிருந்த மேனக்கன் பிஸ் என்னும் சிறுவனின் சிலையை கண்டுவிட்டு அங்கிருந்து பார்க் சின்குவாண்டினயர் என்னும் பூங்காவிற்கு சென்றோம். அங்கே கட்டப்பட்டிருந்த நினைவு வளைவு முதல் சுற்றில் பார்த்தபோதே மனதில் இடம் பிடித்துக்கொண்டது. ஆகையால் அங்கே சில நேரம் செலவிட முடிவு செய்தோம். இளைப்பாற நல்லதொரு இடமாக அது அமைந்தது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBvrMhJWDV9M8_RzPXYIXcdB4Kh93zxQNUvlDMXvncFqlipDOfs93n0xfT9qO5TxzbArt7q7p3HbD05e9WHVyYZzRLoDvFvNVYTTs4Eqwuiiq2hQItebGjfhpCMkLuSD7ADMQXhAvJzJl6/s1600-h/IMG_5867_Parc+Cinquantenaire+2.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBvrMhJWDV9M8_RzPXYIXcdB4Kh93zxQNUvlDMXvncFqlipDOfs93n0xfT9qO5TxzbArt7q7p3HbD05e9WHVyYZzRLoDvFvNVYTTs4Eqwuiiq2hQItebGjfhpCMkLuSD7ADMQXhAvJzJl6/s320/IMG_5867_Parc+Cinquantenaire+2.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401743993918377426" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj24Wbpt5OsqUs1EKnJH-JrqUVt84K4rYwhBmNmIbKyurToiAXVgQC3YnPHQhxhEtMdtJ3ceeoquMI7vt0OZhYJlcrEWk_bI3rqee4suFa81IQ5vLHHTL43Z2P3Sc6TmIwPWGjHIaD-PXFC/s1600-h/IMG_5871.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj24Wbpt5OsqUs1EKnJH-JrqUVt84K4rYwhBmNmIbKyurToiAXVgQC3YnPHQhxhEtMdtJ3ceeoquMI7vt0OZhYJlcrEWk_bI3rqee4suFa81IQ5vLHHTL43Z2P3Sc6TmIwPWGjHIaD-PXFC/s320/IMG_5871.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401743996601030114" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIUeD5e73599p_uBL5vzISNjcOcljTpPMyJGa-MvpwiILU-TsZByYKxV0kCxmANru7_p1rGsyd8uVjMATYCcAPYhb_YWMC2NegPoujdDvOj-a0apfKUCoD0__iVB9GRgFwlboSkaDkpwtw/s1600-h/IMG_5780_Brussels+Atomium4.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIUeD5e73599p_uBL5vzISNjcOcljTpPMyJGa-MvpwiILU-TsZByYKxV0kCxmANru7_p1rGsyd8uVjMATYCcAPYhb_YWMC2NegPoujdDvOj-a0apfKUCoD0__iVB9GRgFwlboSkaDkpwtw/s320/IMG_5780_Brussels+Atomium4.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401742481517190418" border="0" /></a><br />அடோமியம் என்னும் இடத்தினை பேருந்திலிருந்தே கண்டோம். அங்கே இறங்கி பார்த்து நேரம் செலவழிக்கவில்லை. அதற்கு பதில் பூங்காவில் சில மணி நேரங்கள் இளைப்பாறினோம். அங்கிருந்து கிளம்பிய பேருந்துதான் அந்த நாளின் கடைசி சுற்றுப்பேருந்தாக இருந்தபடியால் வேறெங்கும் செல்லாமல் அந்த நாளினை முடித்துக்கொண்டு வீட்டினை அடைந்தோம். மறுநாள் தங்கியிருந்த லியுவன் நகரினை சுற்றிக்காண்பித்தார். நகர மன்றங்கள் பல ஊர்களிலும் ஒரே மாதிரியான கட்டிட அமைப்புகளாய் இருந்ததை அங்கே காணமுடிந்தது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjafK4VpOtWTe5pmXq1IJpK4XDp6oLpi_KNNnsRWt6IgX6BNFmyFIl7aMDxGQ_78fZ80KiO8UJLT9l_pFs9FqGNCDMg2iXiJf_kBt92oW4zLkzBdBryaqqxaulF5WNoQA0H2S7Lw_aiHBp2/s1600-h/IMG_5899.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjafK4VpOtWTe5pmXq1IJpK4XDp6oLpi_KNNnsRWt6IgX6BNFmyFIl7aMDxGQ_78fZ80KiO8UJLT9l_pFs9FqGNCDMg2iXiJf_kBt92oW4zLkzBdBryaqqxaulF5WNoQA0H2S7Lw_aiHBp2/s320/IMG_5899.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401744002339638562" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQnbMK-Ho0-QvlEByT_3N5A7hrqFNcdIlH3z6G6ZKM8gyf_smSLimT_1LrcysSDpHBCExKJfsdOn7HRw4KQiQahAXWEb6iF9Iit802o0SZjLzS2Q_BFuRP80f0r9PTTsutuL89Mu83HO4Y/s1600-h/IMG_5897.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQnbMK-Ho0-QvlEByT_3N5A7hrqFNcdIlH3z6G6ZKM8gyf_smSLimT_1LrcysSDpHBCExKJfsdOn7HRw4KQiQahAXWEb6iF9Iit802o0SZjLzS2Q_BFuRP80f0r9PTTsutuL89Mu83HO4Y/s320/IMG_5897.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401744005683908498" border="0" /></a><br />மறுபடியும் சூளிச் சென்று ஒரு வார காலம் தங்கிவிட்டு அந்த வார இறுதியில் எனது இல்லம் வந்தடைந்தேன். பலவகையான இடங்கள், பல்வேறுப்பட்ட மனிதர்கள் என்று நல்ல அனுபவமாக இருந்தது. சில இடங்களை பார்த்தபோதே ஒருவித அமைதியும், மகிழ்ச்சியும் மனதினுள் குடிகொண்டது. அதனோடு நம்மால் ஏன் நமது இயற்கை செல்வங்களை பாதுகாக்க முடியவில்லை, எதனால் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க முடியவில்லை, சக மனிதர்களை அவர்கள் செய்யும் வேலையை பார்க்காமல் மனிதர்களாய் மட்டும் பார்க்கும் மனநிலை வரவில்லை போன்ற பல கேள்விகள் எழுந்ததை மறுக்கமுடியவில்லை.<br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-13634550171731955722009-11-05T13:30:00.004+05:302009-11-05T13:30:04.439+05:30ஐரோப்பாவில் கோடை விடுமுறை - இ<div style="text-align: justify;">சூளிச்சிலிருந்து ஒரு நாள் பயணமாக லக்ஸம்பர்க் நகரத்திற்கு/நாட்டிற்கு சென்று வந்தோம். சூமேக்கர் என்னும் ஒரு பயண ஏற்பாட்டாளர் மூலம் இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்தனர் நண்பர்கள். எனவே பயணம் சிறிதளவு எளிதாக இருந்தது. சுமார் மூன்று மணி நேர பேருந்து பயணம். நாங்கள் சென்றது செவ்வாய்கிழமையாதலால் அதிகம் முதியோர்களை எங்கள் பேருந்தில் பார்க்க முடிந்தது. பயணம் துவங்கிய சிறிது நேரத்திலேயே விருந்தாக பல காட்சிகள் கிடைக்கப்போவது உறுதி என்று மனதில் தோன்றியது. இந்த விடயத்தில் தோன்றியது உண்மையாகவே அமைந்தது. வழியின் இரண்டு பக்கங்களிலும் செழிப்பான பசுமை. கூட்டம் கூட்டமாய் சிறு சிறு காடுகள் போல மரங்களும், புல்வெளி மைதானங்களும், விளை நிலங்களும் என்று மாறி மாறி வழியெங்கும் வியாபித்திருந்தது.<br /></div><div style="text-align: justify;"><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsb3hY8N-SbbS-objxKwQQSEfaQ3JqqFx_ayqGXB_kJEBa0cnXQoBxhBV59BVa3LoZDcWGT0g4Q2IxljUYTFSLI7HX3VeOioHmeMnyKt4AxVAyFhD_o3LWI4IJturUcgPYoHxoMF33Dhv7/s1600-h/IMG_5726.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsb3hY8N-SbbS-objxKwQQSEfaQ3JqqFx_ayqGXB_kJEBa0cnXQoBxhBV59BVa3LoZDcWGT0g4Q2IxljUYTFSLI7HX3VeOioHmeMnyKt4AxVAyFhD_o3LWI4IJturUcgPYoHxoMF33Dhv7/s320/IMG_5726.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400315286834531970" border="0" /></a><br />சுமார் பன்னிரெண்டரை மணியளவில் அந்த நகரின் மையப்பகுதியில் இறக்கிவிடப்பட்டோம். அந்த இடத்தில்தான் எவ்வளவு சுற்றுலா பயணிகள். பல இடங்களிலிருந்தும் பேருந்துகள் வந்து பயணிகளை இறக்கிவிட்ட வண்ணம் இருந்தன. சுற்றுலா துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நகரசுற்றுலா பேருந்தில் சுற்றிப்பார்க்க சென்றோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR7Rwujm08PIW8Ot_efBIVQarxGsY1BDv-VJQ4iDGYqPmzis396FDlIWpMjhO9DHry3PmVZR5YGzR0c9l5OpB5DQF5u5e1Ksw7PjpqTFxDVhu6f4GIHLwsspO6A5BrVDmIBwKtvvR4AoFe/s1600-h/DSC01989.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR7Rwujm08PIW8Ot_efBIVQarxGsY1BDv-VJQ4iDGYqPmzis396FDlIWpMjhO9DHry3PmVZR5YGzR0c9l5OpB5DQF5u5e1Ksw7PjpqTFxDVhu6f4GIHLwsspO6A5BrVDmIBwKtvvR4AoFe/s320/DSC01989.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400315299303613762" border="0" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF-hjW3E7-yqwzPYNSuVbx_xLREtEiUrjxDglzS-RwKbthgU79o4n4QqdpvlOJP3X1kOx36F_cONfEOgLkc9HYnrB3Mc8-hH_5q0UOrYODil5eg8YOwBrgVQAYCUdQc4wQfghMT_mTOd0z/s1600-h/IMG_5690.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF-hjW3E7-yqwzPYNSuVbx_xLREtEiUrjxDglzS-RwKbthgU79o4n4QqdpvlOJP3X1kOx36F_cONfEOgLkc9HYnrB3Mc8-hH_5q0UOrYODil5eg8YOwBrgVQAYCUdQc4wQfghMT_mTOd0z/s320/IMG_5690.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400311113057331314" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGUto77aSqPLmXisy_ZPhk7KTKxyFViviC573HzBpPu2Hxh4GBmgiN0r8L38Sgd_HPOSwhval62Adf05rBlAVBV59xCmarhrWO5oxW4Jrn3H29GRRdt7lmKdRIPu3xvSYBR9d6SKcjyOmd/s1600-h/IMG_5711.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGUto77aSqPLmXisy_ZPhk7KTKxyFViviC573HzBpPu2Hxh4GBmgiN0r8L38Sgd_HPOSwhval62Adf05rBlAVBV59xCmarhrWO5oxW4Jrn3H29GRRdt7lmKdRIPu3xvSYBR9d6SKcjyOmd/s320/IMG_5711.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400315282647424050" border="0" /></a><br />ஹாப் ஆன்-ஹாப் ஆப் என்னும் வசதி கொண்ட பேருந்துகள் இவை. அதாவது எங்கு வேண்டுமானாலும் ஏறி-இறங்கிக்கொள்ளலாம். ஆகையால் நமக்கு விருப்பமான இடங்களை இறங்கி பார்த்துவிட்டு அடுத்த பேருந்தில் வந்து கொள்ளலாம். முதலில் சுமார் ஒரு மணி நேரம் முழுநகரையும் சுற்றி வந்தோம். அப்போதே எங்கெல்லாம் திரும்ப வரவேண்டுமென முடிவு செய்துகொண்டோம். நான்கிலிருந்து ஐந்து மணி நேரங்கள் மட்டுமே இருந்ததால் அரச மாளிகை, பூங்கா, கோட்டை என்று முக்கியமான சிலவற்றை மட்டுமே காண முடிந்தது. மாளிகையின் உள்ளே செல்லவும் அந்த நேரம் உகந்தபடியில்லாததால் வெளியிலிருந்து சுற்றிப்பார்த்தோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOP7-jlsC5nFXpPv2cX1W_MHabZ8M2-SNll32qipmT5tHTU1crB2cmwzXVjhehz3r9-IVBIMdccQX93TTU7QoDuLzIuvnQt9XRkc5cMRV6jIclRTrh2ALizj2tzDBvH0ZI1oMQlqnIibo_/s1600-h/IMG_5628.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOP7-jlsC5nFXpPv2cX1W_MHabZ8M2-SNll32qipmT5tHTU1crB2cmwzXVjhehz3r9-IVBIMdccQX93TTU7QoDuLzIuvnQt9XRkc5cMRV6jIclRTrh2ALizj2tzDBvH0ZI1oMQlqnIibo_/s320/IMG_5628.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400311087603463778" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT2ekCxZi-W7_RcMFfcxTXLZGsaRM0LGeBLAbaS8p6kVG8BNk6uuK3s4afJi40TXsCq6Boc9ThB3Xv-Q8oqWciD8ArUVbiUA_lzumBbSVwuSaRqD2cG0vhkOd8E53SnLsI5voSGntxpAkp/s1600-h/IMG_5630.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT2ekCxZi-W7_RcMFfcxTXLZGsaRM0LGeBLAbaS8p6kVG8BNk6uuK3s4afJi40TXsCq6Boc9ThB3Xv-Q8oqWciD8ArUVbiUA_lzumBbSVwuSaRqD2cG0vhkOd8E53SnLsI5voSGntxpAkp/s320/IMG_5630.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400311092558367954" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSea3FocYzGoAMD4AjQJztWoyTYxPs2ooUFGFAbObRMp49OfsafITpBs07xOvHWJVZ3ibKlM9motiwCp7n0dlGQGEI-c48B32JFTzlzsL7eASC81Suh_mFQVjz68usopwrg8ntrX-Y4ckO/s1600-h/IMG_5655.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSea3FocYzGoAMD4AjQJztWoyTYxPs2ooUFGFAbObRMp49OfsafITpBs07xOvHWJVZ3ibKlM9motiwCp7n0dlGQGEI-c48B32JFTzlzsL7eASC81Suh_mFQVjz68usopwrg8ntrX-Y4ckO/s320/IMG_5655.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400311100771064994" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8ffenkwSoZ4PuYfxtL_7JTyEgFHm5oQKgT5L5wYZzfqMx-BdPRS9H_dHhZVoB0cLUADEsWhdCo7LvSyefNQQrTHBjpR_i7cCpL1OGlBTlg4sTwRGL5iiZSI7krQHWz_pEmAPPyMadhIED/s1600-h/IMG_5660.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8ffenkwSoZ4PuYfxtL_7JTyEgFHm5oQKgT5L5wYZzfqMx-BdPRS9H_dHhZVoB0cLUADEsWhdCo7LvSyefNQQrTHBjpR_i7cCpL1OGlBTlg4sTwRGL5iiZSI7krQHWz_pEmAPPyMadhIED/s320/IMG_5660.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400311107943885170" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCArSKqNa1P1XnG9iAxrSSlKfN4Gt2T2R5Ngpq3IFx26Fhi1t5fAsE9KNyb6zca4YKOLLLQx6gpadDki2pKlWkOgcdzuYcyr_X1CDAtNraKztOEf6srZNJIJRegW1n13PVqM0LW9WN6DHW/s1600-h/DSC01932.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCArSKqNa1P1XnG9iAxrSSlKfN4Gt2T2R5Ngpq3IFx26Fhi1t5fAsE9KNyb6zca4YKOLLLQx6gpadDki2pKlWkOgcdzuYcyr_X1CDAtNraKztOEf6srZNJIJRegW1n13PVqM0LW9WN6DHW/s320/DSC01932.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400315294793398946" border="0" /></a><br />வார்த்தைகளால் விவரிக்க முடியாத விடயங்களையும் படங்கள் விவரித்துவிடும். எனவே புகைப்படங்களில் அங்கே கண்ட அழகை கையகப்படுத்திக்கொண்டோம். அங்கே கண்ட அழகினைவிடவும் மிகவும் கவர்ந்தது அங்கு சென்ற வழியில் கண்ட பசுமைதான் என்றால் மிகையாகாது. திரும்பி வரும்போது நகரின் வெளியே பேருந்தினை சில நிமிடங்கள் நிறுத்த இயற்கையை ஆற-அமர்ந்து இரசிக்க ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது. கண்டவற்றை அசைபோட்டுக்கொண்டே அந்த நாள் இனிதே நிறைவுற்றது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitvHJZ7U_XBn3gQw3qz6Bpunr2_R2iQ7poEndmlvPmmZrsVVqaS_XDOG7b1ws9S78_2_tZ6dCocfA0ASop2DoqWK7ao0w7RDB0QzdaIeDmRz9EOK6JYS9Ai8Ww-7uAvMXjU341wyLFlLfq/s1600-h/IMG_5744.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitvHJZ7U_XBn3gQw3qz6Bpunr2_R2iQ7poEndmlvPmmZrsVVqaS_XDOG7b1ws9S78_2_tZ6dCocfA0ASop2DoqWK7ao0w7RDB0QzdaIeDmRz9EOK6JYS9Ai8Ww-7uAvMXjU341wyLFlLfq/s320/IMG_5744.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400315292649793122" border="0" /></a><br />ஹான்னோவரிலுள்ள இரண்டு நண்பர்களை காண ஒரு வார இறுதியில் நாங்கள் மூவரும் சென்று வந்தோம். பயணத்தில் அதிக நேரம் செலவானது. அங்கு இருந்ததோ சுமார் 27 மணி நேரங்கள்தான். எனினும் மிகவும் மகிழ்வாக இருந்தது. நாங்கள் ஐவரும் சில வருடங்களுக்கு பின்னர் ஓரிடத்தில் சந்திக்கின்றோம். ஆகையால் பல விடயங்களை அசைபோட்டு, பேசி என்று மகிழ்வாக சென்றது. நினைவில் என்றும் நிலைத்திருக்கும் தருணங்களில் இவையும் ஒன்றாக அமையும்.<br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-13399577244234580302009-10-29T13:33:00.005+05:302009-10-29T13:33:00.604+05:30ஐரோப்பாவில் கோடை விடுமுறை - ஆ<div style="text-align: justify;">கொலோன் நகரிலிருந்து போன் நகரையடுத்த பேட்ஹானாப் என்னும் இடத்திலுள்ள நண்பனை காண சென்றேன். அந்த நகரை சுற்றிப்பார்க்க அடுத்த நாள் கிளம்பிப்போனோம். அந்த ஊரின் வழியே ரைன் நதி ஓடிக்கொண்டிருக்கின்றது. நதியின் இக்கரைக்கும் அக்கரைக்கும் நடுவே பாலம் எதுவும் கண்ணில்படவில்லை. மாறாக படகுகளையே மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர். மக்கள் பெரும்பாலும் மகிழுந்து வைத்துள்ளனர். கரை தாண்டி செல்ல விரும்புவோர் தங்கள் மகிழுந்துகளை எப்படி எடுத்து செல்வார்கள் என்று யோசிக்கும்போதுதான் அந்த படகின் தன்மை புரிந்தது. வாகனங்கள் வைத்திருப்போர் தங்கள் வாகனத்தினூடேயே படகுகளில் சவாரி செய்கின்றனர். படகு ரொம்ப பெரிசுதான். பாலம் கட்டி பணத்தை செலவுசெய்யாமல் ஒருவித வருமானமாக இதனை பார்க்கிறார்களோ என்று தோன்றியது.<br /></div><div style="text-align: justify;"><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAuPgWqPAIByMDY0YQ2vApGpnIXI2hCNWuV0Vw570sR_g-LdzehnXwjzwg84DvpbrmDigMf5McTwQZ6gaIGrbT348GxuqlHe1O6x0e2YVaHH2YuoYUc2I_dmWPGQpk_O2D-ERWbMtgs8uS/s1600-h/IMG_5365.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAuPgWqPAIByMDY0YQ2vApGpnIXI2hCNWuV0Vw570sR_g-LdzehnXwjzwg84DvpbrmDigMf5McTwQZ6gaIGrbT348GxuqlHe1O6x0e2YVaHH2YuoYUc2I_dmWPGQpk_O2D-ERWbMtgs8uS/s320/IMG_5365.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5397751160827255106" border="0" /></a><br /><br />கரையையொட்டியே நடந்துகொண்டிருந்தோம். மறுகரையிலிருந்தே ஒரு பாழடைந்த கோட்டைசுவற்றை கண்டிருந்ததால் அதனை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். அதற்கு செல்லும் வழியை கண்டுபிடிக்க சிறிது சிரமப்படவேண்டியிருந்தது.ஒருவழியாக அது அமைந்திருந்த சிறுகுன்றின் அடிவாரத்தை கண்டுபிடித்துவிட்டோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO2jgXGi3ORRuZAM7OOJpnR3cymcJWiXAQ8bldcd09swRkqOMVlq32uoWTC4ZAjjJ-Y7PX18tjECvHXDepbivB-marILcepsYDOW4L6nDdWQoKPWRJPWBTLRBZqN_Aob5B6wJAgfCI70gd/s1600-h/IMG_5371.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO2jgXGi3ORRuZAM7OOJpnR3cymcJWiXAQ8bldcd09swRkqOMVlq32uoWTC4ZAjjJ-Y7PX18tjECvHXDepbivB-marILcepsYDOW4L6nDdWQoKPWRJPWBTLRBZqN_Aob5B6wJAgfCI70gd/s320/IMG_5371.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5397749052552359458" border="0" /></a><br />அங்கிருந்து பார்த்தபோது அது ஏதோ ஒரு தோட்டத்திற்குள் செல்வதுபோல இருந்தது. எனினும் வேலிகள் எதுவும் இல்லை.அந்த இடத்தில் எந்தவொரு சரியான அறிவிப்பு பலகையோ அல்லது கேட்டுச்செல்ல மனிதர்களோ இல்லை. தொடர்ந்து செல்வதா வேண்டாமா என்ற குழப்பம் சிறிது நேரம். பின்னர் போய்தான் பார்ப்போமே என்று அந்த பாதைவழி ஏற ஆரம்பித்தோம். அருகில் சென்றபோதுதான் அங்கே இருபுறமும் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது என்பதை கண்டோம்; அது ஒரு வைன்யார்ட் என்று புரிந்தது.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN8OESLDtWuQCrToGaG-PF_5Ppo6h4R4bYBUtcCXs5Gcax0sTB_GnfuapZfOHcAEwRZHoJtekrht_zk2eoVX8ajNRGdFDUY9q0v3tF1SWZpP9OE_Y9U2FgyeiZseneNo8sNiHzc2JGl34y/s1600-h/IMG_5335.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN8OESLDtWuQCrToGaG-PF_5Ppo6h4R4bYBUtcCXs5Gcax0sTB_GnfuapZfOHcAEwRZHoJtekrht_zk2eoVX8ajNRGdFDUY9q0v3tF1SWZpP9OE_Y9U2FgyeiZseneNo8sNiHzc2JGl34y/s320/IMG_5335.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5397747705534969826" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6Y-EXjRL1PQCWkYerCya87azPKEXgTjFn6bRA_QoGrYw_K9BFCyckhQYYoOvbJLI8yhXyfuw-mvssqBVyD-vwydrbFROQ439Bwi1mDyreZgA6V66rr88t5uycT66N2CmoPBcNihLP-yF3/s1600-h/IMG_5350.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6Y-EXjRL1PQCWkYerCya87azPKEXgTjFn6bRA_QoGrYw_K9BFCyckhQYYoOvbJLI8yhXyfuw-mvssqBVyD-vwydrbFROQ439Bwi1mDyreZgA6V66rr88t5uycT66N2CmoPBcNihLP-yF3/s320/IMG_5350.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5397747717109894450" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlON9hKeQGmdYYHRh4hnLvTxO9vdeCimdQ8MpaBMhrnjQdkZqJMYYOVRNDmaOd6eenEa6EQEv7e_I3dKiSM7qfhQmc79QqQ96cq98t2ODPJcIkbGz5vCfZg11M_GIZrl0KjA4FYu0Ols_U/s1600-h/IMG_5336.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlON9hKeQGmdYYHRh4hnLvTxO9vdeCimdQ8MpaBMhrnjQdkZqJMYYOVRNDmaOd6eenEa6EQEv7e_I3dKiSM7qfhQmc79QqQ96cq98t2ODPJcIkbGz5vCfZg11M_GIZrl0KjA4FYu0Ols_U/s320/IMG_5336.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5397747707877194162" border="0" /></a><br />ஓரளவு தூரம் சென்றதும் ஒரு பாதை காட்டுக்குள் செல்வதாக விளம்பரப்பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆகையால் அந்த பாதையை தவிர்த்து மற்ற பாதையில் சிறிதுதூரம் சென்றோம். கோட்டைக்கு செல்லும் வழி சரியாக புலப்படவில்லை. ஆகையால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குமேல் செல்லாமல் நின்றுவிட்டோம். அங்கிருந்து கண்ட காட்சிகள் கண்களுக்கு விருந்தாக இருந்தன. சிறிது நேரம் அங்கிருந்து அந்த காட்சிகளை கண்டுரசித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அடிவாரம் நோக்கி திரும்பிவிட்டோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTmuaozgusfQy3v3ImrBL0p4APer-qlbvLYpEirGp660LmOBzIEbaUioDgdyWRso6OHA8Dcua43EL58HGDcv6XKuCrRwwfv32o508m7MX5MMtrIEEaj7W2Y_6k1u9HErYSyMMgzdZHh035/s1600-h/IMG_5385.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTmuaozgusfQy3v3ImrBL0p4APer-qlbvLYpEirGp660LmOBzIEbaUioDgdyWRso6OHA8Dcua43EL58HGDcv6XKuCrRwwfv32o508m7MX5MMtrIEEaj7W2Y_6k1u9HErYSyMMgzdZHh035/s320/IMG_5385.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5397751165752618834" border="0" /></a><br /><br />அடுத்த நாள் போன் நகரை சுற்றிப்பார்க்க சென்றோம். முதலில் சென்றது இசைமேதை பீத்தோவனின் இல்லம். அவர் பிறந்து வளர்ந்த வீட்டை அருங்காட்சியகமாக பராமரித்து வருகின்றனர். அவர் வாழ்க்கை வரலாற்றை அங்கே பார்த்தபோது மிகவும் மகிழ்வாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. இசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ?அவரது இசையை அங்கே கேட்கும் வாய்ப்பும் அமைந்தது. ஒலி ஒளி காட்சிகளாக குறிப்பிட்ட நேரங்களில் அங்கேயே உள்ள ஒரு காட்சியரங்கில் திரையிடுகிறார்கள். முதல்முறையாக அவரது இசையை கேட்டேன். எனினும் என்னை அதனுள் இழுத்துக்கொண்டது என்றால் மிகையாகாது.அவர் இயற்றியிருந்த இசைதொகுதியொன்றிற்கு லேசர் மூலம் ஒளி வடிவம் கொடுத்து நன்றாக செய்திருந்தனர். நான் ரசித்து அமர்ந்திருந்த அந்த இருபது நிமிடங்கள் என்னை எங்கோ இழுத்துச்சென்றது எனலாம்.இசை செய்யும் மாயங்களே கணக்கிட முடியாதது.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5r3g-6Ghfnxiby4DOXIXXOZB37k8OaIjdiZCqR2rb9tjXTXCQjbmLmlFyZO5FRiNDqfCHcHFi7OXQblkYajNlVjY-TEbQF4wHUlzkA1-4noz1cIYAWFsAMlz6cEH5wS4hAppjnvxkYmB7/s1600-h/IMG_2874.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5r3g-6Ghfnxiby4DOXIXXOZB37k8OaIjdiZCqR2rb9tjXTXCQjbmLmlFyZO5FRiNDqfCHcHFi7OXQblkYajNlVjY-TEbQF4wHUlzkA1-4noz1cIYAWFsAMlz6cEH5wS4hAppjnvxkYmB7/s320/IMG_2874.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5397747699082157378" border="0" /></a><br />உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால் அங்கே சென்றுவந்ததை பறைசாற்றும் வகையில் அந்த இல்லத்தின் வெளியே புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP-ido3n0Mo2y1WPS420FBY6bUKDbrMCnd_rva8OvW_llruFbnT9tp02hBUjhmm4ZqKLHowaAYFCIX8PsQ8o4NKAaxL2wf6xWI1SABC3XnoFE-R7EbPrtlLY807j50siAPXqZz5meV69Lh/s1600-h/IMG_5413.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP-ido3n0Mo2y1WPS420FBY6bUKDbrMCnd_rva8OvW_llruFbnT9tp02hBUjhmm4ZqKLHowaAYFCIX8PsQ8o4NKAaxL2wf6xWI1SABC3XnoFE-R7EbPrtlLY807j50siAPXqZz5meV69Lh/s320/IMG_5413.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5397749060842050482" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwcKDZUd6M8CUyXTQIVcXgZSpOq_JSPJXzQTPQlSvOYtyRBvrq88gVfIHq0PyxxRnVYJvSToPGaaWZ2SqnoSVQHzwXIckl0a-2PskbHmIfYzg0KqL2YJweMmEmKdK-0rA7bcdxNi0URcUk/s1600-h/IMG_5448.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwcKDZUd6M8CUyXTQIVcXgZSpOq_JSPJXzQTPQlSvOYtyRBvrq88gVfIHq0PyxxRnVYJvSToPGaaWZ2SqnoSVQHzwXIckl0a-2PskbHmIfYzg0KqL2YJweMmEmKdK-0rA7bcdxNi0URcUk/s320/IMG_5448.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5397749059513097522" border="0" /></a><br />அதன் பின்னர் அந்த நகரில் ஒரு பூங்காவை மட்டும் சுற்றிவிட்டு பல மலர்களை ரசித்துவிட்டு மனை வந்து சேர்ந்தோம். மறுநாள் மறுபடி சூளிச் பயணம்.</div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-49552015698512051522009-10-23T13:00:00.006+05:302009-10-23T13:43:22.943+05:30ஐரோப்பாவில் கோடை விடுமுறை - அ<div style="text-align: justify;">மூன்று வார விடுமுறையில் மூயிரண்டு நட்புக்களை காண முடிவெடுத்து மேற்கொண்ட மூன்று நாடுகள் பயணம் முத்தாய்ப்பாய் அமைந்தது. ஐரோப்பாவில் இருப்பதில் ஒரு முக்கிய வசதி ஒரு நுழைவிசைவு (Visa) வைத்துக்கொண்டு மனிதனால் வரைப்படங்களில் வரையப்பட்ட பல கோடுகளை தாண்டிச்செல்ல முடியும். செர்மனியில் மேற்கு பகுதியிலுள்ள சூளிச் (Juelich) என்னும் இடத்தில் உள்ள நண்பன் வீட்டினை அடித்தளமாக முடிவு செய்து அங்கு செல்வதற்காக ஏற்பாடுகளை செய்து முடித்தேன்.</div><div style="text-align: justify;"><br />திசான் – பாரி – ஆகன் – தியூரன் - சூளிச் (Dijon-Paris-Aachen-Duren-Juelich) என்பது இரயில் பயண பாதையானது. பயணங்களில்தான் எத்தனை விதமான அனுபவங்கள் நமக்கு கிடைக்கின்றன. இங்கே காணும் சில விடயங்கள் நமக்கு ஆச்சிரியத்தையும், ஆனந்தத்தையும் அளிக்கும். பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஒவ்வொரு பயணியிடமும் பயணச்சீட்டு வாங்கிப்பார்ப்பதற்கு முன்னர் ஒரு வணக்கத்தையும் பின்னர் நன்றியையும் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நான் இதுவரை பார்த்த அனைத்து பரிசோதகர்களும் அனைத்து பயணிகளிடமும் இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பது ஆச்சிரியம்தான். நமது ஊரிலும் பலமுறை பயணித்துள்ளேன். இவ்வாறான நடவடிக்கைகளை பார்ப்பது மிக மிக அரிது. இங்கே இதனை ஒப்பிட்டு பார்த்தலில் உள்ள ஒரே நோக்கம், நாம் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதாக கூறுவது இவ்வாறான நல்ல பண்புகளை விடுத்து மற்றவற்றை கற்றுக்கொள்வதால் ஏற்படும் கோபமும், வருத்தமுமே. முதல் வகுப்பில் சென்றதால் உணவும் பரிமாறப்பட்டது. அதனை செய்த அந்த நபரின் கவனிப்பும் கவர்ந்தது. என்னதான் அது அவர் வேலையென்றாலும் அந்த வேலை மீது அவர் காட்டிய ஒரு ஈடுபாடு இன்றும் அவரை மறவாமல் இருக்கச்செய்கிறது. அவரது பெயர் அந்தோனி என்று அவரது முத்திரையில் பார்த்த நியாபகம்.<br /><br />பயணம் நல்லவிதமாக அமைந்தது. என்னை அழைத்துச்செல்ல இரண்டு நட்புக்கள் ஆகன் வந்து காத்துக்கொண்டிருந்தனர். சிறிதுநேரம் ஆகன் நகரை சுற்றிவிட்டு சூளிச் நோக்கி புறப்பட்டோம். சூளிச் ஒரு கிராமம் என்று முன்னரே நண்பன் கூறியிருந்தான். தியூரன் – சூளிச் இரயில் பயணம் சுமார் 25 நிமிடங்கள்.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-qS8OtH9sd42w-_Wz07vxXsJt586m9YBXDNXO4ZRxxGIOzXRbFvsXvcsBpVp9K23FkRH706A6DZ_dz0eae_YLmWKNv_BkTA86avV1Z3apgOZSwifc41mKsl8H-yQKBzIXTUlbH6QEkLqP/s1600-h/IMG_5926.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-qS8OtH9sd42w-_Wz07vxXsJt586m9YBXDNXO4ZRxxGIOzXRbFvsXvcsBpVp9K23FkRH706A6DZ_dz0eae_YLmWKNv_BkTA86avV1Z3apgOZSwifc41mKsl8H-yQKBzIXTUlbH6QEkLqP/s320/IMG_5926.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395515745554424098" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQbgPxepQji1CWarIstGs2jJG-gYZup50OSAcJpe2fs1JETF4HCfeHzE3JJuXcvBUS8ZnS9fSF1I2hIULkImztSQP1bPBKfAHO2N31VA2noaGd2hfzaxUT31LmLsxAeyzLymeq7VOb5I4D/s1600-h/IMG_5977.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQbgPxepQji1CWarIstGs2jJG-gYZup50OSAcJpe2fs1JETF4HCfeHzE3JJuXcvBUS8ZnS9fSF1I2hIULkImztSQP1bPBKfAHO2N31VA2noaGd2hfzaxUT31LmLsxAeyzLymeq7VOb5I4D/s320/IMG_5977.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395515747189471778" border="0" /></a><br /><br />அந்த வழி நெடுகவும் விளை நிலங்கள்தான் காட்சியளித்தன. வரப்புகளை எளிதில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவரும் பெருவாரியான நிலங்களை வைத்துள்ளனர். பலவற்றில் கோதுமை சாகுபடி முடியும் தருவாயில் இருந்தது. சிலவற்றில் கிழங்குகள் சாகுபடியும் நடந்து கொண்டிருந்தது. இவ்வாறான காட்சிகள் நம் ஊரில் திருச்சி-தஞ்சை-குடந்தை வழியிலும், திருச்சி-கோவை வழியிலும் கண்ட நியாபகம். அங்குகூட இப்போதெல்லாம் அவ்வளவு தெடர்ச்சியாக விளை நிலங்களை காண முடிவதில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் விடயம்.<br /><br />அடுத்த நாள் கலோன் நகர் சென்றோம். இரயில் நிலையத்திலிலிருந்து வெளியில் வந்ததும் கண்டது ஒரு தேவாலயம். UNESCO அமைப்பினால் பாரம்பரிய சின்னமாக மதிப்பிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது அந்த தேவாலயம். உள்ளே சென்று பார்க்க அப்போது தருணம் அமையவில்லை. எனினும், செர்மனியிலிருந்து பிரான்சு திரும்பும்போது உள்ளே சென்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5pIOdhwLNNVnvrHRb9Tl7TssaSVfHUe_Jx8V50o8noIhk1oi_R022qVpnYZlg0uXzrMjIb-LQ3wwcTfdoiamgkeIDbULYHRUrvrQk4fioJtYwQ4XMCxcvk39Tc-IFBXxIUsXY9tOXnZ4n/s1600-h/IMG_5308.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5pIOdhwLNNVnvrHRb9Tl7TssaSVfHUe_Jx8V50o8noIhk1oi_R022qVpnYZlg0uXzrMjIb-LQ3wwcTfdoiamgkeIDbULYHRUrvrQk4fioJtYwQ4XMCxcvk39Tc-IFBXxIUsXY9tOXnZ4n/s320/IMG_5308.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395514074608578722" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYQCiJrPiEGffCcdxoGov1DzJG2ZtH7e-WXFWZLGCovqSQq0Rf698MaTsKS4DT-uYTjyXs9ZcxmrYLzBHNaWilnCDM4ZFFFfNl9uLOyG6kzSz3M7BQLyD-UYDoGghDYBF2Ju9cDd2zOAN-/s1600-h/IMG_6024.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYQCiJrPiEGffCcdxoGov1DzJG2ZtH7e-WXFWZLGCovqSQq0Rf698MaTsKS4DT-uYTjyXs9ZcxmrYLzBHNaWilnCDM4ZFFFfNl9uLOyG6kzSz3M7BQLyD-UYDoGghDYBF2Ju9cDd2zOAN-/s320/IMG_6024.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395514078203855122" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZX4QXuyyutkjqj3XiAGpz_PA9_Hgemjy3UBesvmR-QtHUUCbHp3Pz9IisCEDwptrC-FCkkE4xyEfaSEDXH2R16fLA1ToS4jaS0I8lutSY5pASplysWSfptChlqkKewJe01QTyY3Pc3B00/s1600-h/IMG_5260.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZX4QXuyyutkjqj3XiAGpz_PA9_Hgemjy3UBesvmR-QtHUUCbHp3Pz9IisCEDwptrC-FCkkE4xyEfaSEDXH2R16fLA1ToS4jaS0I8lutSY5pASplysWSfptChlqkKewJe01QTyY3Pc3B00/s320/IMG_5260.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395512195527290786" border="0" /></a><br />அன்று பின்னர் சென்று பார்த்த இடம் உயிரியல் பூங்கா. நன்றாக அமைத்திருந்தனர். சில மணி நேரங்கள் அங்கே செலவழித்தோம்.<br /><br /><br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpCfKhp7AkVHzv333BCTI-HQQyjwLqNPNBrj7ogso1uvvqDKLOGlZv3J_MwW9gj4cXLl90fUkNBB4XN0ghxmiPowwUsNs2X-lbLbuua_RspLtiHS5I3KDKlLhZC1tulMrC81KsNfKvIj8I/s1600-h/IMG_5135.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpCfKhp7AkVHzv333BCTI-HQQyjwLqNPNBrj7ogso1uvvqDKLOGlZv3J_MwW9gj4cXLl90fUkNBB4XN0ghxmiPowwUsNs2X-lbLbuua_RspLtiHS5I3KDKlLhZC1tulMrC81KsNfKvIj8I/s320/IMG_5135.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395699882107480258" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgh0yUOAts3JyNW9kvC52ChPiau6U7R2w7MTzX_OSoWabtVwNKu5gS12KIyg6WNSa8h99qv6LPQc5uzrNmasZqxLli476h-fQBJUppGHCEF2D3oLFaHEJ4YQOOIr9uJ0WK8Bk9S8CopdEwo/s1600-h/IMG_5164.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgh0yUOAts3JyNW9kvC52ChPiau6U7R2w7MTzX_OSoWabtVwNKu5gS12KIyg6WNSa8h99qv6LPQc5uzrNmasZqxLli476h-fQBJUppGHCEF2D3oLFaHEJ4YQOOIr9uJ0WK8Bk9S8CopdEwo/s320/IMG_5164.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395699891593264050" border="0" /></a> (உயிரியல் பூங்காவில் யானைகள் கூடாரத்தில் நேபாள நாட்டு அரசு சார்பில் அளிக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது)<br /></div><br />எப்போதுமே நமக்கு அருகில் இருப்பதை பார்க்க நேரம் ஒதுக்குவது கிடையாது. சென்னையில் தாம்பரத்தை சுற்றியே வாழ்ந்து வந்திருந்தாலும் இதுவரை வண்டலூர் பூங்கா சென்றதில்லை. பலமுறை அதன் வழியே சென்றதுண்டு; எனினும் உள்ளே சென்றதில்லை. எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்ததால் இதுவரையிலும் அங்கே செல்லாமலேயே காலம் சென்றுவிட்டது. இன்றோ அயல்நாட்டிற்கு வந்து சென்றது உயிரியல் பூங்கா. நினைக்கையில் சிரிப்பாகதான் வருகிறது.<br /><br />அங்கிருந்து வெளியே வரவே மதியம் இரண்டு மணியாகிவிட்டது. எங்களின் திட்டம் ரைன் நதியில் படகு சவாரி செல்வதாகும். சவாரி 3.30 மணியளவில் இருந்ததால் பூங்காவிலிருந்து நேரே படகுத்துறைக்கு வந்துவிட்டோம். ஒரு மணிநேரம் செல்லவும் அதே நேரம் திரும்பி வரவும் என மொத்தம் இரண்டு மணி நேரங்கள் அழகான அனுபவமாக இருந்தது. சிறிது தூரம் சென்றவுடனேயே இரண்டு கரைகளிலும் பசுமையான மரங்களை காண முடிந்தது. ஆங்காங்கே வயது வரம்பின்றி மக்களையும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து, படுத்து, சாய்ந்து என தங்களுக்கு விருப்பமான முறைகளில் கரைகளில் பொழுதினை அனுபவிப்பதை காணமுடிந்தது. நீர் விளையாட்டுகளிலும் சிலர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXfBXRVw7a93fRPKWwoWyKCbrR7pN6OaVRxmdoO6vcIUCa8iI80CwWu9Xa_fJK2EdPpc3aeT-hIXP60cjPO71BqOBBmFtsT8w8qhEq8sIA6fnmgroWgOgUhZd0PfA1N64ADcBufIXP6Yhd/s1600-h/IMG_5209.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXfBXRVw7a93fRPKWwoWyKCbrR7pN6OaVRxmdoO6vcIUCa8iI80CwWu9Xa_fJK2EdPpc3aeT-hIXP60cjPO71BqOBBmFtsT8w8qhEq8sIA6fnmgroWgOgUhZd0PfA1N64ADcBufIXP6Yhd/s320/IMG_5209.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395514079899912450" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFCPMdWdvDwSXW5xMAoFqixtkslTFRoTSW81s1wSRzJcQQsa0B5PAZ_vO6BzKQShbsK3Px9dCRmI7ErRQzpcGN9PORfCHid8DQEjSiIaBoagBFFwFT5xrn90-ASX_ZZ7WtlgT8AbJ0f7v1/s1600-h/IMG_5238.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFCPMdWdvDwSXW5xMAoFqixtkslTFRoTSW81s1wSRzJcQQsa0B5PAZ_vO6BzKQShbsK3Px9dCRmI7ErRQzpcGN9PORfCHid8DQEjSiIaBoagBFFwFT5xrn90-ASX_ZZ7WtlgT8AbJ0f7v1/s320/IMG_5238.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395512193467189458" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlMriv76wgvHOdHOx_J9CC-vxXmVU34xOZt91vPz4cFefGOkg0YWpTzSyCI6NZ3ZaXtHhstuurFmAliY7JguLwhAppbsRvCzATimfYd71YBMnICYeNMfHfjHN3RHYV475h2PjrzVJPx8C1/s1600-h/IMG_5230.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlMriv76wgvHOdHOx_J9CC-vxXmVU34xOZt91vPz4cFefGOkg0YWpTzSyCI6NZ3ZaXtHhstuurFmAliY7JguLwhAppbsRvCzATimfYd71YBMnICYeNMfHfjHN3RHYV475h2PjrzVJPx8C1/s320/IMG_5230.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5395512187250427042" border="0" /></a><br /><br />சாந்தமாக ஓடிக்கொண்டிருக்கும் நதியால் அந்த பூமி செழிப்புடன் இருப்பதை காணமுடிகின்றது. ஏனோ நம் நாட்டில் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணம் சங்கடத்தை அளிக்காமல் இல்லை. அயல்நாட்டினர் தங்களின் வளங்களை பாதுகாத்து வருகின்றனர். ஆனால் அவர்களை பார்த்து ஆச்சிரியப்படும் நாமோ இருப்பதை அழித்துக்கொண்டிருக்கின்றோம். அது என்னமோ தெரியவில்லை, நம் மக்களில் பலருக்கு மேலை நாட்டு மோகமும், அவர்களின் வாழ்வியல் முறை மீதும் ஒரு இனம் புரியாத ஈடுபாடு உள்ளது. ஆனால் அவர்களிடம் உள்ள நல்ல விடயங்களை எடுத்துக்கொள்வதில் மட்டும் ஒருவித தடுமாற்றம், பிற்போக்குத்தனம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த நாள் அங்கிருந்த இயற்கை அழகை ரசிப்பதில் சென்றது.<br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-49716939577481917452009-10-07T13:00:00.005+05:302009-10-07T13:05:10.139+05:30அடப்போங்க மக்கா....<div style="text-align: justify;"><span style="font-weight: bold;">காட்சி 1</span><br /><br />எங்காளு ஐம்பத்தைந்து சதவிகிதம்தான் எடுத்திருக்கான், என்றேன்.<br /><br />இரண்டாம் ஆண்டு மதிப்பெண்களா? என்றார் அவர்.<br /><br />ஆமாம்.<br /><br />அடப்போடா! கல்லூரி வந்தாச்சு. சும்மா மதிப்பெண் வாங்கலைனு இன்னமும் அவனை போட்டு இம்சை பண்ணாதீங்கடா. இப்ப இது ஓக்கே. எல்லாம் வாங்கிடுவான். அவனை நிம்மதியா விடுங்கடா.<br /><br />எனக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றார்.<br /><br /><br /><span style="font-weight: bold;">காட்சி 2</span><br /><br />என்ன தம்பி, பரிட்சை மதிப்பெண்கள் வந்துடுச்சா? என்றார் தன் பிள்ளையிடம்.<br /><br />இன்னைக்குதான் கொடுத்தார்கள்; இந்தாங்க விடைத்தாள்கள்.<br /><br />பார்த்த நொடியில் அவருக்குள் கோபம்பொங்கி அவனை கரித்துக்கொட்டிக்கொண்டிருந்தார். எனக்கோ அதிர்ச்சி. அந்த பிள்ளை மிகவும் நன்றாக படிப்பவன். எதுக்குடா அவங்க இப்படி திட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்று அவனது விடைத்தாள்களை வாங்கி பார்த்தபோது அவனது மதிப்பெண்கள் அறிவியலில் தொண்ணூற்றி ஐந்து என்று இருந்தது.<br /><br />அடிப்பாவி பெண்ணே என்று மனதில் நினைத்துக்கொண்டு, இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியிருக்கான், எதுக்கு அவனை திட்டிக்கிட்டிருக்கீங்க?<br /><br />ஐந்து மதிப்பெண்களை கோட்டை விட்டுட்டு வந்துள்ளான். இவன் வகுப்பு தோழிகளெல்லாம் இவனைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பார்கள். இவன் பாரு என்ன பண்ணியிருக்கானு. இப்பவே இப்படினா போக போக படிப்பிலே நாட்டமே போய் பத்தாவதுலே நல்ல மதிப்பெண்கள் வாங்க மாட்டான் என்றும் உருப்பிட மாட்டான் என்றும் ஒரே புலம்பல். அவன் அப்போது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் நியாயமாக யோசிக்க சொல்லி பார்த்தேன். பயன் இல்லை. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா என்று கேட்க வேண்டும் போல இருந்தது. என்னைவிடவும் வயதில் பெரியவர்கள்; ஆகையால் அவ்வாறு கேட்க முடியவில்லை. சில பெற்றோர்கள் சிறிதும் யோசிக்கமாட்டார்கள் என்று நன்றாக புரிந்தது. அந்த பிள்ளையின் நிலை கண்டு வருத்தப்பட்டுக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.<br /><br />மனதில் அவர்கள் என்னிடம் முன்னர் கூறிய சொற்கள் வந்துபோனது. கல்லூரி ஐம்பத்தைந்தை விட ஏழாம் வகுப்பின் காலாண்டுத்தேர்வின் தொண்ணூற்றி ஐந்து குறைவான மதிப்பெண் என்று எனக்கு அதுவரை தெரியாமல் போயிற்று. அடப்போங்க மக்கா....<br /><br /><br />பி.கு: பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையும்,பொதுநல நோக்கும் இருக்கும் சில மக்களிடமும் ஒரு சிறு அளவாவது தன்னலம் இருக்கின்றதோ என்று யோசிக்க வைத்த சில நிகழ்வுகளை இந்த வரிசையில் பதிய முயல்கிறேன்.<br /><br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-7089319451294931142009-09-07T13:16:00.011+05:302009-09-07T13:16:00.450+05:30விடுமுறை இறுதியில் கண்டுகளித்தவை<div style="text-align: justify;">தற்போது நான் வசிக்கும் இந்த திசான் (Dijon) நகரில் ஆகஸ்ட் மாத இறுதியில் Dijonfest எனப்படும் நாட்டிய-இசை விழா ஒருவார காலம் நடந்தது. இதில் பல நாடுகளின் பாரம்பரிய நடன/பாடல் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இந்தியாவின் சார்பில் கேரளத்து கதக்களி நடனம் நடைப்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விழா முடிவடையயிருந்த இரண்டு நாட்கள் முன்னர்தான் விழா பற்றிய செய்தியையே நான் அறியப்பெற்றேன். அதனை காண சென்றபோது எடுத்த சில புகைப்படங்களையும், சில காணொளிகளையும் இதில் காணலாம். இரண்டும் மிகவும் திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல; ஆகையால் அவற்றில் குறைகள் இருக்க வாய்ப்புள்ளது.<br /></div><div style="text-align: justify;"><br />கதக்களி நடைபெறுவதாய் இருந்த இடத்திற்கு சென்றோம். முதலில் தென் ஆப்பிரிக்க நடனம், தொடர்ந்து இந்தியாவின் கதக்களி மற்றும் இறுதியாக போர்த்துகீசிய நடனம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் முப்பது நிமிடங்கள் நடப்பதாக இருந்தது. ஏனோ நாங்கள் சென்ற அன்று கதக்களி நடைபெறவில்லை. அதனால் மற்ற இரண்டு குழுக்களும் கூடுதல் நேரம் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தனர்.<br /></div><br /><br />தென் ஆப்பிரிக்க குழு<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmO95lhpCo41e7bCLjkEqoVYizmCXpSn52yVkruCjJ-tDjnBK8MMTLlFIHunZGLdEvE3ryegjyuXHdUUdQG15607F-4AFn2sjkR7j1bfjmjkz0y798X1AnvW5kIvLwnDH4nS4MyOLvAdBR/s1600-h/IMG_6043.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmO95lhpCo41e7bCLjkEqoVYizmCXpSn52yVkruCjJ-tDjnBK8MMTLlFIHunZGLdEvE3ryegjyuXHdUUdQG15607F-4AFn2sjkR7j1bfjmjkz0y798X1AnvW5kIvLwnDH4nS4MyOLvAdBR/s320/IMG_6043.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5378419709793327874" border="0" /></a><br />அவர்களின் குழு நடனம்<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWNfmb3CDo8ez5JqZ1Y9GWNcnkZHTofX0EG9nCN_lEzRA7UzYks3IZG9mRdz_Ii-N_HY7zb81VXhTF7QfxxSXdDFgi9apN8q1Mg5wAW6xDrtJHObMpDC6q4I5ooW73gtVw25HaDAHok23g/s1600-h/IMG_6047.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWNfmb3CDo8ez5JqZ1Y9GWNcnkZHTofX0EG9nCN_lEzRA7UzYks3IZG9mRdz_Ii-N_HY7zb81VXhTF7QfxxSXdDFgi9apN8q1Mg5wAW6xDrtJHObMpDC6q4I5ooW73gtVw25HaDAHok23g/s320/IMG_6047.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5378419715505623538" border="0" /></a><br />தனித்து நடனமாடிய குழந்தை<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJh1W2DzidnFlv9F2a1TNnOTasV8rcO3HZyQk8m40_YENusOPjPpm1Xr3mggQAQcSMb48e5NrdF8WXNqU7Qr2hYdWZxyvBP0GKNDKndUj5tqOjayOfZ9erE76RfDVtDxJcKPyaTv-cRYUO/s1600-h/IMG_6052.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJh1W2DzidnFlv9F2a1TNnOTasV8rcO3HZyQk8m40_YENusOPjPpm1Xr3mggQAQcSMb48e5NrdF8WXNqU7Qr2hYdWZxyvBP0GKNDKndUj5tqOjayOfZ9erE76RfDVtDxJcKPyaTv-cRYUO/s320/IMG_6052.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5378419725752555154" border="0" /></a><br /><br />போர்த்துகீசிய இசைக்குழு<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_HxCtsqY0zYRlsPoqDZnrmHzB7CpgZ4t8j_AYD-oCUXyduWPG-yDuJTyMrX8ujonnX2Wjop5NIZbdWW1jAtfIr3AEc38vgbSwvrjfQhtrZFuM4PMwOxyPoeXJ7wp6UOLNnK-1cWR4zqAA/s1600-h/IMG_6069.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_HxCtsqY0zYRlsPoqDZnrmHzB7CpgZ4t8j_AYD-oCUXyduWPG-yDuJTyMrX8ujonnX2Wjop5NIZbdWW1jAtfIr3AEc38vgbSwvrjfQhtrZFuM4PMwOxyPoeXJ7wp6UOLNnK-1cWR4zqAA/s320/IMG_6069.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5378419730394332898" border="0" /></a><br />அதில் நடனமாடுபவர்களின் ஒரு பகுதி<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw26kBvMBXneZeQ3-XLE6ri_BEmiffkAt3y8hWRed28Sc4GfrlN12GOhKE9gSEIb4GIvaIGrTbS2VJQo_4xsE8oS85m9AQe2PRN0M_O4uAm4KBVEptQvmmDM3Z6UZUo8eeT7fzMhGhSvUz/s1600-h/IMG_6073.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw26kBvMBXneZeQ3-XLE6ri_BEmiffkAt3y8hWRed28Sc4GfrlN12GOhKE9gSEIb4GIvaIGrTbS2VJQo_4xsE8oS85m9AQe2PRN0M_O4uAm4KBVEptQvmmDM3Z6UZUo8eeT7fzMhGhSvUz/s320/IMG_6073.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5378419737143243042" border="0" /></a><br />அவர்களின் குழு நடனம்<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5uPnxz1N127IQspZ_mAJjNKJ1SD_rWZJgnu0TFh-clG2437XM__f2dRfJmY1SLEnzuGnCCTtSd7UUwPbn8Kfpu7leGE_kquUcseLC0kypuGzW9atOznpPhA3ATuwGnt_Y97iYNqH34wzh/s1600-h/IMG_6085+copy.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 166px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5uPnxz1N127IQspZ_mAJjNKJ1SD_rWZJgnu0TFh-clG2437XM__f2dRfJmY1SLEnzuGnCCTtSd7UUwPbn8Kfpu7leGE_kquUcseLC0kypuGzW9atOznpPhA3ATuwGnt_Y97iYNqH34wzh/s320/IMG_6085+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5378453609386232578" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3lcTG3QxT5lW-OiWLAwp0L_-zLGFfOr6wcWUZwuUd8eEn2mNsSmZ6rFIIo9s66LvO2Bi0vc1S3g2sXi9joQtKgFW-IeFWO7ghTnHt5ROKpgBXAFN-pN330UxYvplIxwll3ISnSbVjFsC1/s1600-h/IMG_6080+copy.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 162px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3lcTG3QxT5lW-OiWLAwp0L_-zLGFfOr6wcWUZwuUd8eEn2mNsSmZ6rFIIo9s66LvO2Bi0vc1S3g2sXi9joQtKgFW-IeFWO7ghTnHt5ROKpgBXAFN-pN330UxYvplIxwll3ISnSbVjFsC1/s320/IMG_6080+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5378446375764778450" border="0" /></a><br /><br />மற்றொரு இடத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த பிரான்சு நாட்டின் போர்கோன் பகுதியின் நடனம்<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipdR7hhUImp_vZKYWY7J6hgY1WRomEL00oCz5fLARjU9U0WNQRrHg48sWisEUC3lhXQBJF0vpGNQeg9MOsdEqj1qgwQGdYJrRgvDeTXlRvqEd3YlXr7fTkB_UoGxrA3F0k2SYY4lpy4cgE/s1600-h/IMG_6099.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipdR7hhUImp_vZKYWY7J6hgY1WRomEL00oCz5fLARjU9U0WNQRrHg48sWisEUC3lhXQBJF0vpGNQeg9MOsdEqj1qgwQGdYJrRgvDeTXlRvqEd3YlXr7fTkB_UoGxrA3F0k2SYY4lpy4cgE/s320/IMG_6099.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5378428446421126210" border="0" /></a><br /><br />தென் ஆப்பிரிக்க நடனம்<br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/xFNFTSrWTMk&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/xFNFTSrWTMk&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><br />முடிவில் ஒரு தென் ஆப்பிரிக்க பாடல்<br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/CC2EY0SQEXE&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/CC2EY0SQEXE&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><br />போர்த்துகீசிய நடனத்தின் துவக்கம்<br /><br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/SBDwGFGqWtQ&hl=fr&fs=1&"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/SBDwGFGqWtQ&hl=fr&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"></embed></object>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-88191191096443044922009-07-17T12:45:00.005+05:302009-07-17T12:45:00.791+05:30இமயம் - கங்கோத்திரி - கேதார்தல் பயணம் - இ<div style="text-align: justify;"><a href="http://maninaren.blogspot.com/2009/07/blog-post.html">(பகுதி அ)</a><a href="http://maninaren.blogspot.com/2009/07/blog-post_13.html"> </a><br /><a href="http://maninaren.blogspot.com/2009/07/blog-post_13.html">(பகுதி ஆ)</a><br /><br />மறுநாள் மலைமீது விடியல் கண்டோம். நான் நன்றாக உறங்கியிருந்தேன். என் நண்பரிடம் விசாரித்தபோது அவர்கள் படுத்திருந்த இடத்தில் தண்ணீர் கசிந்துகொண்டே இருந்ததால் சரியான உறக்கம் இல்லையென்றும் நானெல்லாம் நன்றாக குறட்டைவிட்டு உறங்கியதாகவும் புலம்பினார். என்ன செய்வது??எதுவும் நான் மனமுவந்து செய்த தவறல்ல.;)<br /></div><div style="text-align: justify;"><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirh7NxNEr3y2jcQbcISixOCjvHBt-_rDQJy-6W2MmFuTT-qu0owWaMtsIQ56W90XKwBPq5LToLwbecRWmyhvMl6hHhmesbTGQxSTK0ENEHPtPjybpDMCbdAR4Y9-HUsOBrNjEQWaOUphhM/s1600-h/Picture+100.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirh7NxNEr3y2jcQbcISixOCjvHBt-_rDQJy-6W2MmFuTT-qu0owWaMtsIQ56W90XKwBPq5LToLwbecRWmyhvMl6hHhmesbTGQxSTK0ENEHPtPjybpDMCbdAR4Y9-HUsOBrNjEQWaOUphhM/s320/Picture+100.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5359099043528722914" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT6SfL1oNN1NnxhaDV7nswN0EclzDt7Lh1lINxKGVdEweeAAL83iC067rZnRlyUZVt5eARw3DoSq9wG15dduXSmhvX3qGfj_8zqyi86XjFF5MSHDHGeoFqSi6c_ub7CBwMX0QlgzTqoe7H/s1600-h/Picture+113.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT6SfL1oNN1NnxhaDV7nswN0EclzDt7Lh1lINxKGVdEweeAAL83iC067rZnRlyUZVt5eARw3DoSq9wG15dduXSmhvX3qGfj_8zqyi86XjFF5MSHDHGeoFqSi6c_ub7CBwMX0QlgzTqoe7H/s320/Picture+113.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5359099048486378050" border="0" /></a><br />நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பார்த்தால் இரண்டு மலை சிகரங்கள் பனிபடர்ந்து காட்சியளித்தன. ஒன்றினை கண்டபோது நந்தியை போன்ற உருவம் கொண்டதாக கண்ணில்பட்டது. இரண்டாம் சிகரத்தை தாண்டினால்தான் கேதார்தல் ஏரி வரும் என்றார் நண்பர். சிறிது நேரம் காலைபொழுதினை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்புவது என்று முடிவு செய்தோம். நாங்கள் தங்கிய இடத்திலேயே எங்கள் உடைமைகளை வைத்துவிட்டு பாரமின்றி செல்வது என்று பேசிக்கொண்டோம். முதல் நாள் கண்ட பெரிய நிலச்சரிவு ஒருசிலரை கலங்க வைத்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் இருவருக்கு முதல்நாள் சிறிது உடல்நிலை ஒத்துழைப்பு அளிக்காததால், மூவர் தொடர்ந்து வரவில்லை என்றும் வேண்டுமெனில் மற்றவர்கள் சென்று வரவும் என்றும் கூறினர். எங்கள் நால்வரில் என்னுள்ளும் சிறிது பயம் இருந்தது உண்மையே. ஆனாலும் ஆசை. இருவர் சென்றுவருவோம் என்று கூற நாங்கள் நான்கு பேர் பயணத்தை தொடர்ந்தோம்.<br /><br />நாங்கள் எதிர்கொண்ட நிலச்சரிவு சுமார் இருநூறு அடியாவது இருந்திருக்கும். ஓரளவு அனுபவமுள்ள நண்பர் முதலில் வழிகாட்டி செல்ல, அவரை தொடர்ந்து நாங்கள் செல்வது என்று எண்ணினோம். முதலாமவர் சிறிது சென்றதை பார்த்தபோதே என்னுள் பயம் அதிகமாகியது. ஏனெனில், இரண்டு அடி முன்னே கால்களை வைப்பதற்குள், கீழ்நோக்கி சுமார் நான்கு அடிகள் சரிந்து போய்கொண்டிருந்தார். முழுவதும் கீழே போய் பின்னர் மேலே ஏறி வருவது என்பது அந்த இடத்தில் இயலாத காரியம். மிகவும் தடுமாறி தடுமாறி முன்னே செல்ல முயன்று கொண்டிருந்தார். அந்த இடத்தை தாண்டி நோக்கினாலும் நிலச்சரிவுகள் தொடர்ச்சியாக கண்ணில் தென்பட்டன. அந்த நொடியில் மனதினுள் பயம் சூழ்ந்துக்கொண்டது. கண்டிப்பாக தாண்டி செல்ல வேண்டுமா என்று நானும் கேட்டுவிட்டேன். அவர்கள் சிறிது முயன்று பார்க்கலாமே என்று கூற இறுதியில் இரண்டு பேர்மட்டுமே செல்வது என்ற நிலையானது. அதுவும் எளிதாக இல்லை. அந்த சூழலில் அவர்களும் எங்களுக்காக மேற்கொண்டு செல்லும் எண்ணத்தை கைவிட்டனர். அவர்களுக்கு சிறிது வருத்தம்தான். ஒருவிதத்தில் எல்லோருக்கும்; ஏனெனில், எங்களின் குறிக்கோள் கேதார்தல். அதனை அடைய அதே வழியில் மேலும் சிறிது தூரம் செல்லவேண்டும். அதனை அடைய முடியாது, ஒருவகையில் பார்த்தால் எங்களின் பயணம் தோல்வியில் முடிகின்றது. மறுபடியும் வரவேண்டும் என்று இருவரும் கூறிக்கொண்டிருந்தனர். அந்த நொடியில் மறுபடியும் வருவது பற்றி எனக்குள் மிகுந்த யோசனை (சந்தேகம் என்றே சொல்லலாம்) இருந்தது. அந்த இடத்தில் மட்டும் நதிக்கரையில் கைநினைக்க சிறிது வழி இருந்தது. ஆகையால் சிறிது நேரம் நதிக்கரையில் செலவிட்டோம். நதியின் மறுபக்கம் பார்த்தால் செங்குத்தான மலைச்சரிவுதான் காட்சி தந்தது. அந்த திசையில் எவ்வாறு மேலே ஏறுவது என்றே வழி புலப்படவில்லை. வழிசொல்லாத மலைகளாக இருந்தன.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS2DVEwv9wkQD4gBd1oMp0lEb4zVwfs9cZi-XVO4boLROtzP-PRhMp4QuzelgRsqBWzbK6zG5HXxyty_8N421OJsuquJvexhyphenhyphenb0PYQR_usie4t3jf5Ad8fJBCOOmOEIvQ0z1PHn4pZydxL/s1600-h/Picture+117.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS2DVEwv9wkQD4gBd1oMp0lEb4zVwfs9cZi-XVO4boLROtzP-PRhMp4QuzelgRsqBWzbK6zG5HXxyty_8N421OJsuquJvexhyphenhyphenb0PYQR_usie4t3jf5Ad8fJBCOOmOEIvQ0z1PHn4pZydxL/s320/Picture+117.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5359099051364900946" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitDn0OAXeXZp6MRI-jnF9FL9KAPMmHI7e0ClsNo0UpSvwYxE2CDnVus6KbZQ7AZU4HVBo1EUTHqyuF5MfmOTIOMy-d1tneUddh9e1_zz6tAdvGeoi9XMhPa-0RSyev9YEGB62DqYvvXCps/s1600-h/Picture+120.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitDn0OAXeXZp6MRI-jnF9FL9KAPMmHI7e0ClsNo0UpSvwYxE2CDnVus6KbZQ7AZU4HVBo1EUTHqyuF5MfmOTIOMy-d1tneUddh9e1_zz6tAdvGeoi9XMhPa-0RSyev9YEGB62DqYvvXCps/s320/Picture+120.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5359100064171694610" border="0" /></a><br />நேரம் சென்றுகொண்டே இருந்தபடியால் திரும்பிவருவதற்கு தயாரானோம். வந்த வழியிலேயேதான் செல்லவேண்டும்; வேறு வழியில்லை. முதல்நாள் கடந்துவந்த பாதையை நினைத்தபோது மனதினுள் சிறிது பயம் ஏற்பட்டது என்பது உண்மை. எனினும், முதல்நாள் எப்படி வந்தோமோ அப்படியே சென்றுவிடமுடியும் என்று தோன்றியது. இருந்த இடத்திலிருந்து காட்சியளித்த மலை சிகரங்களை இறுதியாக மனதினுள் உருவமாக பதித்துக்கொண்டும், புகைப்படங்களாய் கைப்பற்றிக்கொண்டும் வந்தவழியிலேயே நடையினை தொடர்ந்தோம். அந்த இடம் சிறிது நேரத்தில் மேகமூட்டமாகியது. நல்ல நேரமாக மழை வரவில்லை.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8RADj7phtmK6MsX1ExiknZx1Rcq2EdlJOyKqIO4STnMHklfZqSrfSw3WdeibCN5Rl_BKD7S7S0e3Ruf-O78nJ_XRlGCGnCUXaqa6-5t3x1z0Ck9kc1LQ7UOAvPTwcBNkrrPtqXo30PZmS/s1600-h/Picture+124.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8RADj7phtmK6MsX1ExiknZx1Rcq2EdlJOyKqIO4STnMHklfZqSrfSw3WdeibCN5Rl_BKD7S7S0e3Ruf-O78nJ_XRlGCGnCUXaqa6-5t3x1z0Ck9kc1LQ7UOAvPTwcBNkrrPtqXo30PZmS/s320/Picture+124.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5359099055878475874" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy6Pc-LRU2b9Ryr_50NG0XaWKPz1Gie_q6aSbd_kX3Y2InGWu3eRPhWhQmPaAWWpEQRoK80gJs-xixwVLiWmmYYXP6ugTe0RUlg2UUXCLpIY-wKBLWOw0OekhPVROzhopf0u8zv0pqwrpu/s1600-h/Picture+126.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy6Pc-LRU2b9Ryr_50NG0XaWKPz1Gie_q6aSbd_kX3Y2InGWu3eRPhWhQmPaAWWpEQRoK80gJs-xixwVLiWmmYYXP6ugTe0RUlg2UUXCLpIY-wKBLWOw0OekhPVROzhopf0u8zv0pqwrpu/s320/Picture+126.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5359099061563454434" border="0" /></a><br />வந்த வழியிலேயே நடந்ததால் அன்றைய நடையில் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. கால்கள் சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் பனி படர்ந்த சரிவினை அடைந்தோம். முதல்நாள் அளவிற்கு சிரமம் இல்லை; எனினும் சிறிது நேரம் எடுத்தது என்னவோ உண்மைதான். சில இடங்கள் தொடக்கபுள்ளிக்கு அருகில் வந்துவிட்டது போன்று தோன்றும்; ஆனால் அதிலிருந்து மேலும் அதிக தூரம் நடக்க வேண்டியதாயிருக்கும். எல்லாம் ஒரே மாதிரி இருந்ததால் ஒரே நாளில் பாதையில் பார்த்த பல விடயங்கள் மறந்துபோயிருந்தன. முதல் நாள் தொடக்கத்தில் தடுமாறிய சிறுகுன்று வந்தபோது அதற்குமேல் எவ்வாறு செல்வது என்று புரியவில்லை. பலருக்கும் எப்படி வந்தோம் என்று நினைவில்லில்லை. சிறிது யூகத்தின் அடிப்படையில் வழியினை தொடர்ந்து மனிதநடமாட்டம் உள்ள இடத்தினை வந்தடைந்தோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxIVV3rvltrItfKk5Gd1bxjFlNnA5T84f_vJTfPJkYGCDzL7t0E9p4pwyY5da1CzFInK-kpF0-L1lMRbxs4cCArFaqEkLVdx8-5IGEcJV75oTjN4uEPMP95eEirCRhjvm6ufPPU4FebZz5/s1600-h/Picture+146_1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxIVV3rvltrItfKk5Gd1bxjFlNnA5T84f_vJTfPJkYGCDzL7t0E9p4pwyY5da1CzFInK-kpF0-L1lMRbxs4cCArFaqEkLVdx8-5IGEcJV75oTjN4uEPMP95eEirCRhjvm6ufPPU4FebZz5/s320/Picture+146_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5359100061919564114" border="0" /></a><br />எங்கள் அறையில் சிறிது இளைப்பாறிவிட்டு, கங்கோத்திரி ஆலயம் சென்று வழிபட்டோம். இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாததால் இரவு உணவினை சீக்கிரமே முடித்துக்கொண்டோம். மறுநாள் ரிசிகேசம் வந்துசேர பொதியுந்துவை ஏற்பாடு செய்துவிட்டு, கடைத்தெருவில் சிறிது சுற்றிவிட்டு தங்கும் அறை வந்து சேர்ந்தோம். மறுநாள் காலை மீண்டும் பொதியுந்து பயணம். வழியில் சில இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலும் சில மண்சரிவுகளையும் வழியில் கண்டோம். ரிசிகேசம் வந்துசேர மாலை ஏழு மணியாகிவிட்டது. எங்கள் திட்டப்படி நாங்கள் நால்வர் மறுநாள் காலை புதுதில்லி புறப்படுவது என்றும், மற்ற மூவர் வேறு இடங்களுக்கு தங்கள் பயணத்தை தொடர்வது என்றும் முடிவாகியிருந்தது. நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன?? எங்களுக்கு பெங்களூரு செல்ல இரயிலில் முன்பதிவு (டட்கால்) செய்ய நண்பனின் நண்பனிடம் சொல்லியிருந்தோம். அவனோ அலைபேசியில் அழைத்து முன்பதிவு கிடைக்கவில்லை என்று கூறி பீதியை கிளப்பிவிட்டான். அதன் காரணமாக அன்றிரவே பேருந்துபிடித்து அதிகாலை மூன்று மணியளவில் தில்லி இரயில் நிலையம் வந்து, காலை ஏழு மணியளாவில் புறப்படும் இரயிலில் முன்பதிவு செய்யாதோர் பெட்டியில் முண்டியடித்து இடம்பிடித்து எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். எங்கள் பயணதிட்டத்தை ஒருநாள் முன்னராக மாற்றியதால் முன்பதிவு செய்து வைத்திருந்த பயணசீட்டை கிளம்பும்முன்னர் ரத்து செய்து விட்டோம். நல்ல வேளையாக, அதிக சிரமமில்லாமல் இரண்டு நாள் பயணத்தை அந்த பெட்டியில் முடித்து பெங்களூரில் கால் வைத்தபோது மனதினுள் எதையோ சாதித்த உணர்வு குடிகொண்டது.<br /><br />எங்களின் உண்மையான இலக்கினை அடையமுடியவில்லை. எனினும், இமயத்தை காணவேண்டும் என்ற ஆவல் பூர்த்தியானது. பூர்த்தியானது என்பதைவிட மேலும் சென்று கண்டுகளிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிட்டது என்றே கூறவேண்டும். மீண்டும் செல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செல்லவேண்டும். அந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கின்றேன். என் மனதில் என்றும் நீங்காத இடத்தை இந்த பயணமும் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.<br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-65239108090475768892009-07-13T17:20:00.017+05:302009-07-13T18:27:53.023+05:30இமயம் - கங்கோத்திரி - கேதார்தல் பயணம் - ஆ<div style="text-align: justify;"><br />(<a href="http://maninaren.blogspot.com/2009/07/blog-post.html">பகுதி அ </a><a href="http://maninaren.blogspot.com/2009/07/blog-post.html"> )</a><br /><br />மறுநாள் காலை எட்டு மணியளவில் எங்கள் நடைபயணத்தை துவங்கினோம். முதல் நாள் கால்நனைத்த கங்கையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தை தாண்டிய சிறு நிமிடங்களிலெல்லாம் மனித நடமாட்டத்தை விட்டுச்செல்ல ஆரம்பித்தோம். இதுநாள்வரை காணாத இடம் நோக்கி, வழியில் என்னவெல்லாம் ஆச்சிரியங்கள் இருக்குமோ என்றறியாமல் எங்கள் பயணத்தை நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் துவங்கினோம். ஏற்கனவே மக்கள் சென்று வந்த தடங்களாக ஒற்றை அடிபாதை இருந்தது. அதிலேயே நடந்து கொண்டிருந்த எங்களுக்கு முதல் தடைக்கல்லாக நின்றது சிறிய மலைக்குன்று. அந்த இடத்தில் பாதை முடிந்து அதன் பின்னர் எப்படி செல்வது என்று தெரியவில்லை. பின்னர் எங்கள் நண்பர்கள் குன்றின் மேலேறி சென்றால்தான் வழியிருக்கும் என்று கூற சிறிது யோசனையுடன் அந்த குன்றினில் ஏறி தாண்டினோம். எதிர்பார்த்தபடியே அதன் பிறகு பாதை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த பாதையிலேயே பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தோம்.<br /></div><div style="text-align: justify;"><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT05alCNt-AVRH8KhkC4Umhz99vBbPGPsRMpVFNbLgdR8PmNIofsbBbUmib_R4oTlQUjsQ7y5WuG3YjJyxmeZzKBNV5ACooiVho0CteV-H8OYHGAqnwii8-nz6SdekpAl8gH_3G4MTl8pA/s1600-h/Picture+049.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT05alCNt-AVRH8KhkC4Umhz99vBbPGPsRMpVFNbLgdR8PmNIofsbBbUmib_R4oTlQUjsQ7y5WuG3YjJyxmeZzKBNV5ACooiVho0CteV-H8OYHGAqnwii8-nz6SdekpAl8gH_3G4MTl8pA/s320/Picture+049.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5357905425260401986" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbKGJEnLh5OWMn2vs3lkw6Nv2s1R0zm-if3zc-7XJpu4_t9NmxM0Ehzo9Cj-1yqhAijKTbVDA4nq26gOYNV2l9ZHn4R_uxbJFhgO01Hn0kzMkAuoT8U6tgAHa9ueh4aPtFgrPhRp8ktYTK/s1600-h/Picture+052.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbKGJEnLh5OWMn2vs3lkw6Nv2s1R0zm-if3zc-7XJpu4_t9NmxM0Ehzo9Cj-1yqhAijKTbVDA4nq26gOYNV2l9ZHn4R_uxbJFhgO01Hn0kzMkAuoT8U6tgAHa9ueh4aPtFgrPhRp8ktYTK/s320/Picture+052.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5357911679231588834" border="0" /></a><br />வழியெங்கும் ஏற்ற இறக்கங்களாக மாறிமாறி வந்துகொண்டிருந்தது. எங்கள் பின்னால் இருந்த மலைத்தொடர்கள் சிறிது சிறிதாக எங்களை விட்டு விலகி சென்றுகொண்டிருந்தது. எங்களின் இடப்புறம் ஆறு எதிர்திசையில் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு மறுபக்கமும் தொடர்ச்சியாக மலைத்தொடர்கள்தான். எங்களுக்கு பல ஆச்சரியங்கள் அளிக்க காத்துக்கொண்டிருப்பதாக கூறி நீண்டுகொண்டே சென்றுகொண்டிருந்தன. நாங்கள் நடந்து கொண்டிருந்த ஒற்றையடி பாதையின் இடப்புறம் பெரும்சரிவு மட்டுமே இருந்தது. அதாவது, வலப்புறம் அதிகம் ஏற முடியாதவாறு சரிவான மலைத்தொடரும், பாதைக்கு இடப்புறம் ஆற்றை நோக்கிய சரிவும் இருந்தது. கீழே போய்விட்டால் மேலே வருவது மிகவும் கடினம். ஆகையால், மிகுந்த கவனத்தோடு அந்த பாதையில் ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டிருந்தோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAPZSERFl0r5aJbmrm1Q0iBWJGsvVvTMstDqKYwvyuifs87RF0ESxioJ9zkyi3K-R6M8JI1WcYJl9_rHkU85AAsDSrxI0l96zmwxql_OWW5SpU3bb8MAPiMwxUu-dUDFi0L77AknGDPTGA/s1600-h/Picture+065.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAPZSERFl0r5aJbmrm1Q0iBWJGsvVvTMstDqKYwvyuifs87RF0ESxioJ9zkyi3K-R6M8JI1WcYJl9_rHkU85AAsDSrxI0l96zmwxql_OWW5SpU3bb8MAPiMwxUu-dUDFi0L77AknGDPTGA/s320/Picture+065.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5357905433022068354" border="0" /></a><br />தொடர்ந்து சென்று கொண்டிருந்த எங்களுக்கு அடுத்த முட்டுக்கட்டையாக வந்தது பாதையை மறைத்து மேலிருந்து கீழ்வரை சென்ற ஒரு நிலச்சரிவு. சுமார் ஐந்து அடிகள்தான் இருக்கும்; எனினும் அதனை கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை. என்னதான் எளிதில் தாண்டிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும், மனதில் ஒரு பயம் குடிகொண்டு ஒவ்வொரு அடியையும் அதிக கவனத்துடன் வைக்கச்சொல்லி, நம் நம்பிக்கையை குலைத்துவிடும். அதுவே அப்போதும் நடந்தது. நான் அதனை தாண்ட தடுமாறினேன் என்று சொல்லவேண்டும். அந்த இடத்தில் உதவிய என் நண்பரை மிகவும் சிரமப்படுத்திவிட்டேன். மற்றவர்கள் அவ்வளவு தடுமாறவில்லை. அந்த இடத்தை தாண்டி சிறிதுதூரம் சென்று பார்த்தால் எங்கள் முன்னர் தெரிந்தது சிறிது காலத்திற்கு முன்னர் ஏற்பட்டிருந்த நிலச்சரிவு. எப்படி அந்த இடத்தை கடப்பது என்று யோசித்து கொண்டிருந்தபோது எங்கள் கண்ணில் பட்டது சரிவினை ஒட்டிய ஒரு பாதை. மிக மிக கவனத்துடன் செல்ல வேண்டியிருந்தது. சிறிது காலினை மாற்றி வைத்தாலும் ஆற்றுபடுகைக்கு போக வேண்டியதுதான். ஒருவர் மற்றவருக்கு துணையென மிகுந்த கவனத்துடன் அந்த இடத்தை தாண்டினோம். எங்களுக்கான ஆச்சரியங்கள் அப்போதுதான் தொடங்கியிருந்தது என்பதை நாங்கள் முழுமையாக அறியவில்லை.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid8yzC1l85RPO4Baw1sX1TVtQBN44Urw1DZP525yl4JDg4q3_aecizOfgzEGNyPnB_fL3qtS1Oo9PP4OTyPb1fZRAGyzU-1vmmCkTJ-L1rxa4f3K_qfeJfhgrRgI3kp5rtewtjs2y7UwUp/s1600-h/Picture+070.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid8yzC1l85RPO4Baw1sX1TVtQBN44Urw1DZP525yl4JDg4q3_aecizOfgzEGNyPnB_fL3qtS1Oo9PP4OTyPb1fZRAGyzU-1vmmCkTJ-L1rxa4f3K_qfeJfhgrRgI3kp5rtewtjs2y7UwUp/s320/Picture+070.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5357906454330738930" border="0" /></a><br />நிலச்சரிவினை கடந்து வந்துவிட்டோமென மகிழ்வாக நடந்து கொண்டிருந்தோம். அது அதிக நேரம் நீடிக்காது என்று எங்களுக்கு அப்போது தெரியாது. ஒரு மேட்டினை தாண்டி சென்று பார்த்தபோது எங்களுக்கான அதிர்ச்சி காத்திருந்தது. நாங்கள் கண்டது சுமார் இருபது அடி நீலமுள்ள பாதையை வெட்டிச்சென்ற செங்குத்தான சரிவை. வெறும் சரிவாக இருந்தாலே தாண்டுவது சிரமமாக இருக்கும். ஆனால் இதுவோ முழுதுமாக பனியினால் மூடப்பட்டிருந்தது. எனது கனவில் இருந்த பஞ்சுபோன்ற பளீர் வெண்மைநிற பனியாக அது இல்லை. மாறாக நமது குளிர்சாதனபெட்டியில் இருக்கும் அழுத்தமான பனிக்கட்டி போல அது இருந்தது. கால்களை வைத்து சோதித்து பார்த்தபோது மிகவும் வழுக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்தது. சிறிது தவறுதலாக வைத்தால் சுமார் இருபது அடிக்கும் மேலான ஆழத்திலுள்ள ஆற்றுப்படுகையில் சென்று விழவேண்டியதுதான்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYm6zlsO1yLOsAmuVULQXlx6ssCclNMUPCpz75X86dw_R958_nxruSZt52Dt7mmFHh0w8a-nEVBVVmKEa6AQRjNLf3hNxdgCOe3rdFpqZaHtwQ5AH8qAnTqKex947-MzwWtUUA9R7e-lOA/s1600-h/Picture+075.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYm6zlsO1yLOsAmuVULQXlx6ssCclNMUPCpz75X86dw_R958_nxruSZt52Dt7mmFHh0w8a-nEVBVVmKEa6AQRjNLf3hNxdgCOe3rdFpqZaHtwQ5AH8qAnTqKex947-MzwWtUUA9R7e-lOA/s320/Picture+075.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5357905414868212002" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6lGQgDUc4p_rB17knyGNHnERPifSuPA0jt7nhpCd5j-D4za_4SktyMYPGdcHOsDnFilUbAnoZi7rRLlZH6W4CeWDi0YTjnWLLYbGa9nzWgSiGqVxIoyXACcd0hFhd932Ty_X8JmnBqwRD/s1600-h/Picture+076.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6lGQgDUc4p_rB17knyGNHnERPifSuPA0jt7nhpCd5j-D4za_4SktyMYPGdcHOsDnFilUbAnoZi7rRLlZH6W4CeWDi0YTjnWLLYbGa9nzWgSiGqVxIoyXACcd0hFhd932Ty_X8JmnBqwRD/s320/Picture+076.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5357905419530633410" border="0" /></a><br />இங்கேதான் எங்களை வழிநடத்திச்சென்ற எங்கள் நண்பரின் முன்னனுபவம் கைகொடுத்தது. அவரது யோசனையின்படி முதலில் பாதையை காலால் ஏற்படுத்திக்கொண்டு அவர் செல்வது என்றும் நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக அவரை சரியாக பின்தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படியே முதலில் அவர் செல்ல ஆரம்பித்தார். அது அவ்வளவு எளிதாக இல்லை. ஒரு காலால் வழி ஏற்படுத்த முயலும்போது மறுகாலால் பனிக்கட்டியை அழுத்தி நின்றிருக்க வேண்டும். சிறிது தவறு செய்தாலும் அடிபடுவது உறுதி. மேலும் கைகளில் பிடிக்க நாங்கள் வைத்திருந்த கோல்தான் துணை. வேறு எதனையும் பிடிக்க முடியாது. பனிக்கட்டிக்குள் கோல் எவ்வளவு வலுவாக சென்று பிடித்துக்கொள்கின்றதோ அவ்வளவு பிடிமானம் நமக்கு. கைகளும், கால்களும் மிகவும் ஒத்துழைத்து செல்லவேண்டிய பாதை. மெதுவாக முதல் நண்பர் சென்றுவிட நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக செல்ல ஆரம்பித்தோம். கீழே பார்க்கவும் மனதில் பயம். கண்கள் நேரே பாதையை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது. எப்போது அந்த தூரத்தை கடப்போம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. வெற்றிகரமாக அந்த இடத்தை தாண்டி முடித்தபோது ஏற்பட்ட நிம்மதிக்கு அளவே கிடையாது. இனி எப்படிப்பட்ட இடத்தையும் தாண்டிவிடலாம் என்ற அசட்டு தைரியமும் வந்துவிட்டது. எங்களுக்கு இந்த இடத்தை தாண்டதான் அதிக நேரம் பிடித்துக்கொண்டது. தாண்டும்போது எங்கள் நண்பர்கள் தங்கள் கையிலிருந்த ஒரு கழியையும், ஒரு உறங்கும் பையையும் பனிசருக்கிலும், பல்லத்திலும் தவறுதலாக போட்டுவிட்டனர். கழி போனால் பரவாயில்லை; ஆனால் உறங்கும் பை இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் முதலில் வழி காட்டிய நண்பரே கயிற்றின் துணைக்கொண்டு கீழிறங்கி அவற்றை எடுத்து வந்தார்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxWlNMjc03MpOX3cksLnnGK8uQtPu7EUNtzxd5vCoVfRq4FcPCCpFzsXPj1XPnI_6KA3icRQQHKu1CQkxNjXPGmrc5PlgpK2sjVR7TU-xxW2sfUCOMxK4JXtZo2JVQj8Y72flAyuwELZhx/s1600-h/Picture+078.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxWlNMjc03MpOX3cksLnnGK8uQtPu7EUNtzxd5vCoVfRq4FcPCCpFzsXPj1XPnI_6KA3icRQQHKu1CQkxNjXPGmrc5PlgpK2sjVR7TU-xxW2sfUCOMxK4JXtZo2JVQj8Y72flAyuwELZhx/s320/Picture+078.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5357906465461966162" border="0" /></a><br />எங்களின் கண்களின் பசிக்கு தீனியாக பலவற்றை இயற்கை விருந்தாக்கி படைத்துக்கொண்டிருந்தது. கண்களின் பசி தீர்ந்துகொண்டேயிருந்தது. ஆனால் வயிற்று பசி எட்டிப்பார்த்தது. அமர்ந்து விருந்து சாப்பாடெல்லாம் சாப்பிட முடியாது. அதற்கு பதிலாக, சில இடங்களில் நின்று கடலை உருண்டையும், ரொட்டிகளும், மிட்டாய்களும், ஊறவைத்த அவலுமாக வயிற்று பசியை போக்கிக்கொண்டோம். இவையெல்லாம் உண்மையிலேயே பசி தாங்கியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து நடக்க உடலுக்கு தேவையான சக்தியையும் அளித்தது. அதற்கு பின்னும் எங்கள் நடை தொடர்ந்தது. அந்த வழியில் திடீரென்று மலைமீது பார்த்தபோது ஏதோ சில உயிரினங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. என்னவென்று உற்றுநோக்கியபோது ஒருசில மான்கள் இருந்ததை கண்டோம். அந்த நேரம்வரை எங்களை தவிர வேறெந்த நடக்கும்/பறக்கும் உயிரினங்களையும் காணவில்லை. சிறிது ஆச்சிரியமாகவும், மகிழ்வாகவும் இருந்தது. நாங்கள் சென்ற வழியில் சில இடங்களில் பாதை நன்றாகவும், சில இடங்களில் அச்சம் அளிக்கும் வகையிலும் இருந்தது. ஆற்றின் அந்த பக்கம் பார்த்தபோது பல இடங்களில் மலை செங்குத்தாக இறங்கியிருந்தது. அதாகப்பட்டது பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1lBkBGU5bc68ZEkxuVSeYi8AIL_aGaIeLAi-1rSo85C4-Al3oDpkXdaNgrLlGDhVbLQH3DCFyGziYb8nJWcPs42s89hFxKROGAjRijVziw19tobS4v8-qsAXPiE7SKerc459evSF7gmL9/s1600-h/Picture+085.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1lBkBGU5bc68ZEkxuVSeYi8AIL_aGaIeLAi-1rSo85C4-Al3oDpkXdaNgrLlGDhVbLQH3DCFyGziYb8nJWcPs42s89hFxKROGAjRijVziw19tobS4v8-qsAXPiE7SKerc459evSF7gmL9/s320/Picture+085.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5357906467920293986" border="0" /></a><br />சுமார் ஐந்தரை மணியளவில் நாங்கள் எதிர்கொண்டது எங்கள் வழியில் இருந்த பெரும் நிலச்சரிவை. அதனை தாண்டுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் அதற்கு பல மணி நேரங்கள் பிடிக்கும் என்றும் உணர்ந்தோம். ஆகையால் அதற்கு முன்னர் இருந்த ஒரு சமதரையில் தங்கி, மறுநாள் காலை பயணத்தை தொடர்வது என்று முடிவுசெய்தோம். நாங்கள் எங்களுடன் கூடாரம் அமைக்க தேவையானவற்றை எடுத்து சென்றிருந்தபடியால் அதனை அமைக்கும் பணி கூட்டுமுயற்சியில் நடந்துகொண்டிருந்தது. அதுவரை ஓரளவு நன்றாக இருந்த வானிலை சிறிதுமாறி மழை தூறல் ஆரம்பித்துவிட்டது. மழை சிறிது வலுபெற ஆரம்பித்துவிட்டதால், வேகவேகமாக கூடாரத்தை முடிந்தவரை அமைத்துக்கொண்டு எங்கள் படுக்கை பையினுள் எங்கள் உடல்களை சிக்கவைத்துக்கொண்டோம். மணியோ மாலை ஆறரைதான் ஆகியிருந்தது. வானிலை நன்றாக இருந்திருந்தால் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால் மழையின் வேகம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. மழையை ரசித்துக்கொண்டே உறக்கம் எப்போது வரும் என்று காத்துகொண்டிருந்தோம். சில நேரங்களில் ஏதோ சரிந்துஓடுவது போன்ற சப்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. மனதினுள் ஏற்பட்ட சிறிது பயத்தினை ஏதோ நம்பிக்கையில் அடக்கிக்கொண்டே எப்படியோ உறங்கிப்போனோம்.</div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-65041637872872048682009-07-08T13:00:00.006+05:302009-07-08T13:00:01.849+05:30இமயம் - கங்கோத்திரி - கேதார்தல் பயணம் - அ<div style="text-align: justify;">மண்ணும் இமயமலை எங்கள் மலையே என்று பெருமை கொள்ளும் மக்கள் நாம். பாரதி அழகாகவும், ஆசையை தூண்டும் விதமாகவும் “வெள்ளிப்பனிமலையின் மீதுலவுவோம்” என்றும் கூறினான். அவன் தீர்க்கமாக கூறிச்சென்ற பலவற்றுள் இமயத்தை கண்டு, அதன் மீது உலவி வரவேண்டும் என்ற ஆசை என்னுள் நெடுநாளாக இருந்தது. ஆசை இருந்தாலும் வழி தெரியவேண்டுமே; தகுந்த நேரம் வரவேண்டுமே! எனது நெடுநாள் காத்திருப்பு நிறைவடையும் நேரமும் வந்தது. எங்கள் அறிவியல் கழகத்திலிருந்து நண்பர்கள் சிலர் கங்கோத்திரி செல்லமுடிவெடுத்து ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். கங்கோத்திரி செல்லும் பலர் அங்கிருந்து தபோவன் – கோமுக் ஆகிய இடங்களுக்கு டிரெக்கிங் என்று சொல்லப்படும் நடைபயணம் மேற்கொள்வார்கள். கோமுக் என்பது கங்கையின் பிறப்பிடமாக அறியப்படுகிறது. இவர்களின் திட்டம் அந்த வழியில் செல்லாமல் அதற்கு எதிர்திசையில் உள்ள கேதார்தல் என்னும் ஏரி நோக்கி செல்வதாக இருந்தது. அதிகம் மக்கள் செல்லாத இடம் அது. ஆகையால் சிறிது பயம் என் மனதினுள் இருந்தது. இதனால் என்னால் முதலில் அவர்களுடன் செல்வது பற்றி முடிவெடுக்க முடியவில்லை. பின்னர் அவர்களுள் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக தனது பயண முடிவை மாற்றிக்கொண்டார். அவருக்காக ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட ஒரு இருக்கை இருப்பதாகவும், நான் வர சம்மதமா என்றும் கேட்டனர். விதிகளின்படி மாற்றி பயணிக்க கூடாது. புதியதாக பதிவு செய்ய இருக்கைகளும் இல்லை. ஆசை....இமயத்தை பார்க்க ஆசை. கூட்டமாக செல்வதால் பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கையுடன் வீட்டில் சிறிது போராடி அனுமதி வாங்கி அவர்களுடன் செல்ல முடிவெடுத்து ஆயத்தமானேன்.<br /></div><div style="text-align: justify;"><br />எங்கள் பயண திட்டத்தின்படி பெங்களூரிலிருந்து தில்லி சென்று, அங்கிருந்து ரிசிகேசம் செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து கங்கோத்திரி செல்ல திட்டம். அந்த நாளும் வந்தது. நாங்கள் நடக்கபோகும் பாதையில் உணவெல்லாம் கிடைக்காது. ஆகையால் அவற்றை இங்கிருந்தே எடுத்து செல்லவேண்டிய கட்டாயம். அதிகமாக சுமையும் எடுத்துக்கொண்டு செல்ல முடியாது. ஏனெனில், நாங்கள் அந்த சுமைகளை சுமந்துக்கொண்டு இரண்டு நாட்கள் மலைகளில் செல்ல வேண்டும். சிறிது கடினமான பாதையாதலால் மற்றவர்களுக்கு சுமைதூக்கி உதவுவது எளிதாக இருக்காது. அவரவர் சுமந்து சென்றால்தான் இலக்கை அடைய முடியும். மேலும் மலை நடுவே ஓர் இரவு தங்கவேண்டியுள்ளதால் அதற்கு தேவையான தூங்கும் பை (sleeping bag) வாங்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் வாங்கி பைகளில் எடுத்து வைப்பதே பெரிய வேலையாகிபோனது.<br /><br />எல்லோரும் மகிழ்வுடன் ரயில் நிலையம் நோக்கி கிளம்பினோம். பயணம் நல்ல விதமாக துவங்கியது. மறுநாள் காலை செகந்திராபாத் இரயில் நிலையத்திற்கு எங்கள் குழுவிலிருந்த நண்பரின் குடும்பத்தினர் எங்கள் அனைவருக்கும் பயணத்திற்கான உணவு கொண்டுவந்து அளித்தனர். அருமையான உணவு. அவர்களுக்கு நன்றி கூறிகொண்டு பயணம் தொடர்ந்தது. மறுநாள் மதியம் தில்லி சென்றடைந்தோம். அங்கே இன்னொரு நண்பரின் நண்பர் வந்திருந்தார். அவரிடம் எங்கள் ரிடர்ன் (மறு பயணத்தை) மாற்றி முன்பதிவு செய்ய சொல்லிவிட்டு ரிசிகேசம் நோக்கிய பேருந்து பயணத்தை மேற்கொண்டோம்.<br /><br />கங்கோத்திரி உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ளது. இமய மலைத்தொடர்களில் கார்வால் மலைத்தொடர் பகுதியில் இது அமைந்துள்ளது. ரிசிகேசத்திலிருந்து உத்திரகாசி வழியாக சுமார் 220 கி.மீ. தூரத்தில் உள்ளது. முழுதும் மலைத்தொடர்களினூடேயே பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் ரிசிகேசம் சென்றடைய இரவு சுமார் பத்து மணியாகிவிட்டது. கங்கோத்திரி செல்ல பேருந்து சீட்டு மறுநாள் காலை சுமார் நான்கு மணிக்கெல்லாம் வாங்கிக்கொண்டு உடனேயே பேருந்தில் செல்ல வேண்டும் என்று நண்பர் சொன்னார். எங்களுக்கோ சிறிது அசதியாக இருந்தது. எப்படியும் உணவருந்திவிட்டு உறங்க நடுநிசி ஆகிவிடும் என்று தெரியும். ஆகையால் நாங்கள் தங்குவதற்கு அறை எடுத்த இடத்திலேயே தனியாக பொதியுந்து ஏற்பாடு செய்துகொண்டோம்.<br /><br />அடுத்த நாள் காலை சுமார் 6.30 மணியளவில் கங்கோத்திரி நோக்கி புறப்பட்டோம். சுமார் பத்து நிமிடங்கள்தான் சமதரையில் பயணம். அதன் பின்னர் முழுதுமாக மலைப்பயணம்தான். ஆரம்பத்தில் பயணம் சுகமாகத்தான் இருந்தது. எனினும், மலைகளில் செல்ல செல்ல ஓரிருவர் மிகவும் சங்கடப்பட்டனர். வளைந்து வளைந்து பாதை இருந்ததால் தலைசுற்றல் மற்றும் சில உபாதைகள் அவர்களை வாட்டியது. நல்ல உடல்நிலை உள்ளவர்கள்தான்; எனினும், பயண பாதை அவர்களுக்கும் சிறிது சங்கடத்தை அளித்தது. வேறு பாதைகளும் இல்லை. அவர்கள் எப்படியோ சமாளித்துகொண்டு பயணத்தை தொடர்ந்தனர். இதில் நாங்கள் பாராட்டியது பின்புறம் பக்கவாட்டில் அமர்ந்து, முழு பயணமும் செய்த இரண்டு நண்பர்களைதான். ஏனெனில், அந்த இருக்கையை தவிர்க்க நாங்கள் ஐவர் முயன்று வென்றோம் என்றே சொல்ல வேண்டும். அங்கே அமர்ந்து பயணிக்கும் தைரியம் எங்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்.<br /><br />பயணம் தொடர்ந்தது. ஒரு பக்கம் உயர்ந்த மலைகளும், மறுபக்கம் ஆழ் பல்லத்தாக்குகளும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே சில சிறிய ஊர்கள் வந்துசென்றன. பல காட்சிகள் இதமாக வந்துசென்றாலும், தெஹரி என்ற இடம் முதன்முதலில் மனதில் நீங்காத இடமாக குடிகொண்டது. அணை கட்டப்படும் இடம் என்று ஓரிடத்தில் எங்கள் ஓட்டுனர் வண்டியை நிறுத்தினார்.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAO-kvlXpy2z5jyLV85hYCi-rwi2rq52zAhIg5EfIC8qEwfHe4bi-ipgvzO4NPvDmsCKofy311ttj-Sal7ew5siuuqDq1yXPt-X4AfGUKgFkSOub7OVWfIkaZPOPSsaHjps1yFv0z8zdVc/s1600-h/Picture+014.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAO-kvlXpy2z5jyLV85hYCi-rwi2rq52zAhIg5EfIC8qEwfHe4bi-ipgvzO4NPvDmsCKofy311ttj-Sal7ew5siuuqDq1yXPt-X4AfGUKgFkSOub7OVWfIkaZPOPSsaHjps1yFv0z8zdVc/s320/Picture+014.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355807120144902866" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje9o18c-YmRIc9sKTagggmxltOpwulZhJ5AsTXaQGgfaUJg-DZ4kp7Wl7aYlJ1SjQIJjIxvxegSRAqg-W8tu4yWdFj3r0IhS1H3UIKExIxXmGBYDZfA7I7RjPYuNL8PtwoGSAOWIEz0XTi/s1600-h/Picture+015.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje9o18c-YmRIc9sKTagggmxltOpwulZhJ5AsTXaQGgfaUJg-DZ4kp7Wl7aYlJ1SjQIJjIxvxegSRAqg-W8tu4yWdFj3r0IhS1H3UIKExIxXmGBYDZfA7I7RjPYuNL8PtwoGSAOWIEz0XTi/s320/Picture+015.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355807120548739938" border="0" /></a><br /><br />இரண்டு மலைகளுக்கும் நடுவே ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அந்த உயரத்திலிருந்து பார்த்தபோது ஆறு பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. ரசித்து பார்த்துக்கொண்டிருந்தோம். ஆற்றின் ஓரத்தில் இருக்கும் பல ஊர்கள் மூழ்கிவிடும் என்று கேள்விபட்டபோது மனம் வருந்தியது. சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். பல காட்சிகளை எங்களுக்கு இயற்கை விருந்தாக்கி படைத்து கொண்டிருந்தது. மலைகளில் ஏறுவதும், இறங்குவதுமாக மாறி மாறி பாதை சென்றுகொண்டிருந்தது. சில நேரங்களில் கங்கை நதி சாலையின் அருகிலேயே எங்களுக்கு எதிர்திசையில் ஓடிக்கொண்டிருந்தது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirxXxeSbIWElkYs4oV_at87ybfNNTt0AFVXsILzPrc9b0GUBrfHY2BaX1Nnm9d4m8fVHylcnkJ_uK97rmxdM6h9ouFWFxyMu12W4-5gP0e1oU3uZLblFuUeD9HLnV5A4zvgi1BAh21zMZb/s1600-h/Picture+031.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirxXxeSbIWElkYs4oV_at87ybfNNTt0AFVXsILzPrc9b0GUBrfHY2BaX1Nnm9d4m8fVHylcnkJ_uK97rmxdM6h9ouFWFxyMu12W4-5gP0e1oU3uZLblFuUeD9HLnV5A4zvgi1BAh21zMZb/s320/Picture+031.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355807126485771170" border="0" /></a><br /><br />தராசு வழியாக உத்திரகாசி சென்றடைந்தோம். அங்கிருந்து சுமார் 100 கி.மீ. தூரம் செல்லவேண்டும். அதன் பின்னர் சென்ற பாதை மிகவும் பிரம்மிக்க வைத்தது என்றே சொல்லவேண்டும். அவ்வாறான மலை பிரதேசங்களில் மலைகளை குடைந்து சாலைகள் அமைத்து அதனை பராமரிப்பதே மிகப்பெரிய விடயம். அதனை செய்துகொண்டிருக்கும் பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேசன் (BRO) பாராட்டப்பட வேண்டியவர்கள். பயணித்த வழியில் சில மண்சரிவுகளையும் கண்டோம்; ஒரு சில இடங்களில் சாலை வேலையும் நடந்து கொண்டிருந்தது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVZynNm0tv69gB6hPkrS4uBh0gdqJJ8KBMPSVEmZD0fjAc-IkAvaxR5jP7C3EFJi2pte9viP1Ik6FmgpxLKDNDAdfGt1UXdFoiyvFdvFBxiELv3S5NJhKwbFincv9joq2iqkvYZ0xQsOw-/s1600-h/Picture+032.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVZynNm0tv69gB6hPkrS4uBh0gdqJJ8KBMPSVEmZD0fjAc-IkAvaxR5jP7C3EFJi2pte9viP1Ik6FmgpxLKDNDAdfGt1UXdFoiyvFdvFBxiELv3S5NJhKwbFincv9joq2iqkvYZ0xQsOw-/s320/Picture+032.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355807130227978610" border="0" /></a><br /><br />என்னதான் மலைகளில் காலைமுதல் சென்றுகொண்டிருந்தாலும், இமயத்திற்கான அடையாளமான பனிபடர்ந்த மலையுச்சியின் தரிசனம் எங்களுக்கு மதியம் சுமார் மூன்றறை மணியளவில் கிடைத்தது. தூரத்திலிருந்து அந்த காட்சியை கண்டவுடன் எனது உள்ளம் ஆனந்தநடமாடியது. இதனை காணதானே இத்துனை நாட்கள் காத்துக்கொண்டிருந்தேன். அங்கே இறங்கி ரசித்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அந்த அழகை அருகில் ரசிக்க எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். மாலை சுமார் ஐந்தரை மணியளவில் கங்கோத்திரியை அடைந்தோம்.<br /><br />அங்கே தங்குவதற்கு பல விடுதிகள் உள்ளன. அதில் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, முதல் வேலையாக கங்கையில் குளித்து வரலாமென புறப்பட்டு சென்றோம். தெளிந்த நீராக இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு காலை முதற்கொண்டே மண்னின் நிறத்திலேயே காட்சியளித்து வந்தாள். இந்த இடத்தில் எப்படியிருக்கும் என்றெண்ணிக்கொண்டு சென்றேன். இங்கும் மண்னை அடித்துகொண்டுவருவது போலவே அந்த நிறத்திலேயே ஓடிக்கொண்டிருந்தாள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdavZ7UE3VXjeMwiiE6phSWWxidCWKWIEh6HzkIRrCvOGpp1mBAn0ela4LeN8V13IUoNNAqYfOSQ7t0jVh2HkTpk8z_YrTCLnoK87x02I950zv71Ay4cVW9iCLmQOSMEfAiR5W_euQHCbN/s1600-h/Picture+041.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdavZ7UE3VXjeMwiiE6phSWWxidCWKWIEh6HzkIRrCvOGpp1mBAn0ela4LeN8V13IUoNNAqYfOSQ7t0jVh2HkTpk8z_YrTCLnoK87x02I950zv71Ay4cVW9iCLmQOSMEfAiR5W_euQHCbN/s320/Picture+041.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355807134729336610" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHBNRxooAVNhUv8_S6Y9DIDPqZwX41vwFonvwDav9Sp2k1BArYKghR_BEgfV-POU1KsfiPU2U4wx8PE2J31RxSn9yPlJsT9yFhpMF_9qbf2PAek_Wi0M5ikVzPpicS8Tz9YQHU-aQZspoe/s1600-h/Picture+044.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHBNRxooAVNhUv8_S6Y9DIDPqZwX41vwFonvwDav9Sp2k1BArYKghR_BEgfV-POU1KsfiPU2U4wx8PE2J31RxSn9yPlJsT9yFhpMF_9qbf2PAek_Wi0M5ikVzPpicS8Tz9YQHU-aQZspoe/s320/Picture+044.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355807571681360050" border="0" /></a><br />நிறம் எவ்வாறு இருந்தால் என்ன, கங்கையில் குளிப்பதுதான் முக்கியம் என்றெண்ணி ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தோம். ஆசையாக கால் வைத்த எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி கிடைத்தது. காரணம், அந்த நீரின் வெப்பநிலை. நாங்கள் சென்றதோ வெயில் வாட்டிஎடுக்கும் மே மாதம். காற்றில் வெப்பம் சிறிது இருந்ததால், நீரில் குளிர்ச்சி அதிகம் இருக்காது என்று நினைத்திருந்த எங்களுக்கு முதல் அதிர்ச்சியை அளித்தது கங்கை நதி. குளிர்சாதன பெட்டியிலுள்ள ஃபிரீசர் (freezer-ல்) தண்ணிர் எந்த வெப்பநிலையில் இருக்குமோ, அதற்கு ஒப்பான குளிர்ச்சியில் கங்கை ஓடிக்கொண்டிருந்தது. பனிக்கட்டி இல்லாதது மட்டுமே வித்தியாசம். எப்படி இருந்தாலும் அங்கே குளிப்பது என்று முடிவுசெய்து கொண்டோம். குளிரில் உடல் நடுநடுங்க, பற்கள் பலமாக தாளம்போட வேகவேகமாக ஆற்றில் குளித்து முடித்தோம். என்னதான் குளிரடித்தாலும் ஆற்றுநீர் குளியல் அளித்த சுகமே தனிதான். பகல் முழுதும் பயணம் செய்த அயர்ச்சி நீங்கி ஒரு புத்துணர்ச்சி பெற்றோம் என்றே சொல்லவேண்டும். இரவு நன்றாக பசியாறிவிட்டு அடுத்த நாள் ட்ரெக்கிங் பயணத்திற்கு தேவையானதை சரியாக எடுத்துவைத்துவிட்டு உறங்கபோனோம்.<br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-69770365743041625402009-06-19T12:30:00.002+05:302009-06-19T12:52:44.162+05:30அந்த 40 மணிநேரங்கள்<div style="text-align: justify;">அவள் என் வாழ்க்கையில் வந்ததிலிருந்து என்னுள் ஒரு அங்கமாகியிருந்தால். அதிலும் சமீப காலமாக அவள் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாமல் போனேன். அவளின்றி நானில்லை என்றானது என் நிலை. சில காலமாக அவள் ஒரு விடயத்தில் சற்று சங்கடப்பட்டுக்கொண்டிருந்தால். அவளது பிரச்சினையை ஊரில் இருந்தபோதே சரி செய்து கொண்டு வரவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக முடியாமல் போனது. அவளும் சிறிது சங்கடப்படுவாள்; பின்னர் ஓரளவு தேறிவிடுவாள். ஆகையால் அடுத்த முறை ஊர் செல்லும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நானும் விட்டுவிட்டேன். ஒரு நாள் நாமே ஏன் அவள் பிரச்சினையை சரிசெய்யக்கூடாது என்று தோன்றியது. அவளுக்கு தீர்வு எங்கு வேண்டுமானாலும் கிடைக்காத நிலை. குறிப்பிட்ட சிலரால்தான் அவளது பிரச்சினைக்கு சரியான தீர்வு அளிக்க முடியும். அவளுக்கு ஒரு நல்ல முடிவு தர எண்ணி ஓரளவு அவளது பிரச்சனை பற்றி அறிவுள்ள என் நண்பனிடம் இணையம் மூலம் எவ்வாறு இதனை சரிசெய்யலாம் என்று தெளிவாக கேட்டு வைத்துக்கொண்டேன். சிறிது பயமிருந்ததால் அப்போதைக்கு நானாக ஒன்றும் செய்யவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.<br /><br />வெகு நாட்கள் கழித்து ஓர் இரவில் உனது பிரச்சனையை சரிசெய்கிறேன் என்று அவளை அழைத்து எனது கேள்வி ஞானத்தால் பெற்ற மருத்துவமுறையை அவள் மீது கையாண்டுபார்த்தேன். தடுமாறி தடுமாறி பேசிக்கொண்டிருந்தவள் சிறிதுநேரத்தில் மயக்கநிலைக்கு போனாள். சரி, மயக்கம்தானே தெளிந்துவிடும் என்று சிறிது நேரம் விட்டிவிட்டேன். சில மணித்துளிகள் சென்று அவளை எழுப்பி பார்க்கிறேன், எழுந்திரிக்கவில்லை. எனக்கு மனதில் பகீர் என்றது. என்ன ஆனது இவளுக்கு என்றெண்ணி எழுப்ப என்னால் முடிந்த அனைத்து வழிகளையும் முயன்றேன். முடியவில்லை. அப்படியே படுத்திருக்கிறாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியும் தாங்கவில்லை. அவள் இல்லாத வாழ்வை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. அதுவோ சனியன்று இரவு நேரம். இருப்பதோ புதிய ஊர். ஒருசிலரை மட்டுமே தெரியும். யாரை உதவிக்கு கூப்பிட என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் எவரும் வரமாட்டார்கள் என்று தெரியும். நாமேதான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று புரிந்தது. இல்லையேல் பலமணி நேரங்கள் காத்திருக்கவேண்டும். வேறு வழியேயில்லை. ஒருபக்கம் பயம், சோகம் சேர்ந்துகொண்டு அழுகைவர முற்பட, மறுபக்கம் நான் ஏன் இதனை செய்தேன் என்று கோபமும் சேர்ந்துகொண்டது. இனி என்றுமே இந்த தவறை, தெரியாத வைத்தியத்தை செய்யகூடாது என்று முடிவு செய்துகொண்டேன். இந்த ஒரு முறை அவள் விழித்துக்கொண்டால் போதும் என்று மனம் வேண்டிக்கொண்டது.<br /><br />அந்த நேரத்தில் அருகிலிருந்த எனது அலுவலகத்திற்கு சென்று எனக்கு யோசனை கூறிய என் நண்பனை தொடர்புகொள்ள முடிவு செய்தேன். நான் தொடர்பு கொள்ளும் நேரம்தான் அவனுக்கு விடிந்திருக்கும். எனது நேரம்......ஒவ்வொரு வாரமும் அந்த மணிதுளிகளில் இணையத்தில் இருக்கும் அவன் அன்று இல்லை. இது என்னடா புது சோதனை என்று மனதில் நினைத்துக்கொண்டேன். எப்படியும் வருவான் என்று சில மணிநேரங்கள் காத்துக்கொண்டிருந்தேன்....இல்லை, வரவில்லை.அன்று அவன் வரவில்லை ..அடப்பாவி என்று மனதில் திட்டிக்கொண்டே ஒரு மின்னஞ்சல் எழுதி அனுப்பினேன். அந்த மின்னஞ்சலை கண்டவுடன் என்னை தொடர்புகொள்ளுமாறு கூறியனுப்பினேன். அதற்குள் இந்நாட்டிலேயே இருக்கும் மற்றொரு நண்பரிடம் விவரம் கூறி வழி கேட்டேன். அவருக்கும் இதனை சரிசெய்யும் வழிகள் நிரம்ப தெரியும். அவர் கூறிய யோசனைகளை ஏற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்து முயன்றுபார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. அவள் அப்படியே கிடந்தால். நேரமும் ஓடிக்கொண்டிருந்தது. மின்னஞ்சல் அனுப்பப்பட்ட நண்பனும் தொடர்பு கொள்ளவில்லை. அடுத்த நாள் செய்யவென்று பலவற்றை எண்ணியிருந்தேன். எதுவும் அந்த சூழலில் முடியாது என்று தோன்றியது. ஒழுங்காக விவரம் தெரியாமல் உன்னை யார் என்மீது கை வைக்க சொன்னது என்று அவள் என்னை கேட்பது போலிருந்தது. என்ன செய்வது. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்...அந்த பழமொழிதான் நினைவில் வந்தது. அமைதியாய் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளை பார்த்துக்கொண்டே நானும் உறங்கிப்போனேன்.<br /><br />காலை வேலைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு நண்பனிடமிருந்து ஏதெனும் மின்னஞ்சல் வந்துள்ளதா என்றறிய அலுவலகம் சென்றேன். அந்தோ..... ஒன்றும் வரவில்லை. ஒரே வழி மாலைவரை காத்திருப்பதுதான். வீட்டினர்களிடம் நிலையை சொன்னேன்.. கொஞ்சுவார்களா என்ன?? அவள் என்ன நினைத்திருப்பாளோ அதையேதான் சொன்னார்கள். என்னவொன்று, சிறிது நம்பிக்கை அளித்தார்கள். மாலையில் நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது. புதிய பிரச்சினையை கூறினேன். அவனும் யோசித்துவிட்டு குணப்படுத்த பல வழிகள் கூறினான். மிகவும் துரதிருஷ்டமான விடயம்....அவன் சொன்ன எந்த வழியும் செயல்படவில்லை. என்ன செய்தாலும் அவள் அப்படியே கிடந்தால். நண்பனுக்கும் ஒன்றும் புரியவில்லை. இணையத்திலெல்லாம் வழி தேடிபார்கிறான்; பலரும் அவளது பிரச்சினைக்கு வழி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எதுவும் அவளிடம் பலிக்கவில்லை. அவளால் எழ முடியவில்லை. இரவு வெகு நேரம்வரை முயன்றுவிட்டோம்; எந்த பலனுமில்லை. இறுதியாக மறுநாள் அருகிலுள்ள நண்பனிடம் குணமாக்கும் வழி (அவனால் முடிந்ததோ இல்லை தீர்வு கிடைக்கும் இடத்திற்கு அனுப்புவதோ) கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். அந்த நேரத்தில் வேறு வழிதெரியவில்லை.<br /><br />மறுநாள் ஏதேனும் வழியில் அவளை குணமாக்க முடியுமா என்று அருகிலிருந்த நண்பனிடம் கேட்டேன். அவனுக்கு வைத்தியம் தெரிந்திருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. அவன் முயன்று பார்பதாக கூறினான். அவளுக்கு கொடுக்கவேண்டியதை தயாரிக்க சொல்லிச்சென்றான். அதனை தயார் செய்து கொடுத்து பார்த்தோம். நாங்கள் கொடுத்தை அவள் எடுத்துக்கொள்ள மறுத்தாள். அவன் வேறுவிதமாக வைத்தியம் செய்யலாம் என்று கூறி, அதற்கு வேண்டியதை தயார் செய்து எடுத்து வந்தான். அவனது வழியில் புதிய மருந்தினை கொடுத்து பார்த்தான். என் இதயதுடிப்போ அதிகரித்திருந்தது. எப்படியாவது அவள் பழைய நிலைக்கு வந்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். கண்கள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தன. என்ன ஆச்சரியம்...அவள் உயிர் பெற்றாள். திடீரென அவளிடம் பழைய அசைவு தெரிந்தது. என்னுள் நம்பிக்கை பிறந்தது. சுமார் நாற்பது மணிநேரங்கள் என்னை தவிக்க வைத்தவள் புத்துயிர் பெற்று அவளை தீண்டச்சொல்லி கண்ணடித்து கூப்பிட்டால், எனது காதலியாகிபோன என் மடிக்கணினி.<br /><br />(பி.கு : லைனக்ஸ் மற்றும் விண்டோஸ் இருந்த எனது மடிக்கணினியில் வேகம் குறைவாக இருந்ததால், நான் பயன்படுத்தாமல் வைத்திருந்த லைனக்ஸ் பகுதியை நீக்கமுயன்று, தவறாக நீக்கி, அதன் காரணமாக என் கணினி செயலற்று போனது. அந்த நாற்பது மணிநேரங்கள் நான் அனுபவித்த சங்கடத்தை வேறுகோணத்தில் கணினியை காதலியாய் பாவித்து எழுத முற்பட்டுள்ளேன். வேதனைகள் உண்மை; அனுமானம் சும்மா...) <br /><br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-67214661099234224952009-06-15T14:00:00.011+05:302009-06-19T01:56:53.530+05:30இப்போதெல்லாம்...<div style="text-align: justify;">இப்போதெல்லாம்....<span style="display: block;" id="formatbar_Buttons"><span class="" style="display: block;" id="formatbar_JustifyFull" title="Justify Full" onmouseover="ButtonHoverOn(this);" onmouseout="ButtonHoverOff(this);" onmouseup="" onmousedown="CheckFormatting(event);FormatbarButton('richeditorframe', this, 13);ButtonMouseDown(this);"><br /></span></span><ul><li>வாழ்க்கை ரொம்ப சிறியது; வாழப்போகும் காலம் சில ஆண்டுகளே; இருக்கும்வரை அனைவரும் அன்பு பாராட்டி, மகிழ்வாக இருப்போமே என்று <span style="font-weight: bold;">அதிகம்</span> எண்ணவும், கூறவும் ஆரம்பித்துவிட்டேன்.</li></ul><ul><li>வாழ்வில் குறைந்தது கடந்த பத்து ஆண்டுகளை வீணடித்துவிட்டது போல தோன்றுகிறது.</li></ul><ul><li>இன்றும் வாழ்க்கையை இழந்து/தொலைத்து கொண்டிருக்கின்றேனோ என்றே தோன்றுகிறது.</li></ul><ul><li>என்னில் என்னவோ தவறாக இருப்பது/நடப்பது போலவே மனதில் படுகிறது (something is wrong with me).<br /></li></ul><ul><li>மற்றவர்கள் செய்யும் செயல்களில் உள்ள சிறுசிறு தவறுகளும் கண்ணில் பூதாகாரமாய் தெரிகிறது.<br /></li></ul><ul><li>கணினி இல்லாமல் முழுதாக ஒரு நாளாவது இருக்கமுடியாதா என்று ஏங்குகிறது.</li></ul><ul><li>யாராவது வந்து பேசிக்கொண்டிருக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கின்றது.</li></ul><ul><li>என்னை எப்போதும் இணையத்தில் ஆன்லைனில்(online) இருப்பதாக புகார் கூறும் நண்பர்களுக்கு அவர்களே தேடும்படி கணினியில் அதிக நேரம் செலவழிக்க முடியாத அளவிற்கு ஓய்வில்லாமல் இருக்கும் நாள் வராதா என்று மனம் கேட்கிறது.<br /></li></ul><ul><li>முழுமையாக இருந்த இறைநம்பிக்கை குறித்து மனதில் பல கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளது.<br /></li></ul><ul><li>நியாயமான வன்முறையும் தவறில்லை என்று தோன்றுகிறது.<br /></li></ul><ul><li>வாழ்க்கையில் மிகுந்திருந்த நம்பிக்கையைவிட குழப்பங்களும், பயமும் அதிகமாகிவிட்டது.</li></ul><br /><br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-89750440962229985192009-06-05T15:00:00.006+05:302009-06-05T15:07:13.024+05:30இறைநம்பிக்கை - என் மனதின் ஓட்டம்<div style="text-align: justify;">மனதினுள் சில காலங்களாக எழும் கேள்வி. எழுதி வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இறை நம்பிக்கை பற்றியது. நான் கடவுளை நம்புபவனே. ஆனால் அதற்காக எனக்கு நீ இதை செய்தால் நான் உனக்கு இதையெல்லம் தருவேன் என்று இறையிடம் பேசுவதில் எனக்கு நம்பிக்கையில்லை; பழக்கமுமில்லை. இது எனது கொள்கை. இறை நம்பிக்கை தனிமனித விருப்பம்/சிந்தனை என்றே எண்ணுகிறேன். சென்ற வாரம் விஜய் தொலைக்காட்சியில் கண்ட நீயா நானா நிகழ்ச்சி இந்த இடுகையை எழுத மேலும் ஊக்கப்படுத்திவிட்டது. கடவுளின் பெயரால் அனைத்தையும் செய்யும் பெற்றோருக்கும், அதற்கு எதிர்மாறான சிந்தனையுள்ள பிள்ளைகளுக்கும் இடையேயிலான வாக்குவாதம். பெற்றோரின் வாக்குவாதம் இறைநம்பிக்கை இல்லாமல் போனால் பிள்ளைகள் செய்யும் எதுவும் உருபடாது; அதோடு அவ்வாறான பிள்ளைகள் அவர்களை பொறுத்தவரை சமூகத்தில் கெட்ட பிள்ளைகளாக பார்க்கப்படுவர் என்கின்ற விதத்திலேயே சென்றுகொண்டிருந்தது. கொடுமையோ கொடுமை!!!! சிறிது ஆழ்ந்து யோசித்து பார்த்தால் அவர்களின் எண்ணத்தில் உள்ள அடிப்படை தவறு புலப்படும். ஆனால் அவர்கள் கண்களுக்கு அது தவறாக தெரிவதில்லை. எவருக்குமே தாம் செய்வது சரியே என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும்; விளைவு, மற்றவர் கூறும் கருத்திலுள்ள நல்லது தெரியாமலேயே போய்விடும்.<br /><br />கடவுளை நம்பாதவர்கள் எல்லாம் கெட்டவர்களுமல்ல, வாழ்க்கையில் கெட்டு போனவர்களும் அல்ல. வளர்ந்த பல மேலைநாடுகளில் பலர் எந்தவொரு கடவுளையோ, மதத்தையோ நம்புவதில்லை. அதற்காக அவர்களை இறை நம்பிக்கையுள்ளவர்கள் கட்டாயப்படுத்துவதில்லை. அது தனிமனித விருப்பம். நம்பினால் வழிபட்டுக்கொள்; இல்லையேல் அவரவர் வழியில் போய்கொண்டேயிருங்கள். இதுதான் அவர்கள் கோட்பாடு. விடயம் அதோடு முடிந்தது. இதன் காரணமாக தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. மனிதர்களுக்கிடையே உள்ள அன்பு குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. அன்பினை இழந்து இறைநம்பிக்கை வளர்த்து ஒரு பயனுமில்லை. அதனை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். அவர்களிடமிருந்து பலவற்றை பின்பற்ற நினைக்கும் நம் பெரும்பான்மை மக்களுக்கு இவ்வாறான நல்ல குணங்கள் கண்ணிற்கு தெரியவே தெரியாது.<br /><br />நம்பிக்கை மனதிலிருந்து வரவேண்டும்; வெளியிலிருந்து கட்டாயமாக திணித்தால் அதற்குரிய பலன் இருக்காது. ஆழ்ந்த இறைஞானம் உள்ளவர்கள் இறைவன் தாயைபோன்ற கருணை கொண்டவன் என்றே கூறுவார்கள். ஒரு தாய் என்பவள் தனது பிள்ளை அவளை மறந்தாலும், அவளை விட்டகன்றாலும் இல்லை அவளை தூற்றினாலும் அவள் பிள்ளைக்கு தண்டனையெல்லாம் தரமாட்டாள். அதனைபோலவே கருணையுள்ளம் கொண்டவன் இறைவன் என்று நம்புவோர், அவனை நம்பாதவர்களை இறைவன் தண்டிப்பான் என்று கூறுவது எவ்வாறு சாத்தியமாகும். இறைவன் என்னும் ஒரு சித்தாந்தத்தின் ஆனிவேரையே பிடுங்கி எறிவது போலல்லவா உள்ளது. மனதிலிருந்து எழும் நம்பிக்கைக்கே ஊறு விளைவிக்கும் ஒரு செயலாகும். இதற்கு ஒரு காரணாமாக நான் எண்ணுவது தெளிவில்லாத மனபயம்.<br /><br />தனி மனித நம்பிக்கை சார்ந்த ஒன்றை பயம் என்னும் திரையின் மூலமாகவே பார்க்க பழகிக்கொண்டனர். ஒரு காரியத்தை செய்யவில்லை என்றால் சாமி கண்ணை குத்திவிடும் இல்லையெனில் தண்டித்துவிடும் என்றுதான் குழந்தை பருவத்திலிருந்து பெற்றோர்களால் சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். பக்தியை வளர்க்கிறேன் என்று நினைத்துக்கொண்டு பயத்தை வளர்த்துவிடுகின்றனர். உண்மையில் பக்தியையும் நம்பிக்கையும் வளர்க்க விரும்பினால் இறைவன் அன்பானவன், அருளுள்ளம் கொண்டவன் என்று சொல்லி வளார்க்கலாமே? அன்பினை போன்றதோர் பினைப்பு சக்தி வேறெதுவும் உலகில் இல்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட பல மதங்களும் அதைதானே போதிக்கின்றது. அன்பின் மூலமாக இறைநம்பிக்கை ஊட்டப்பட்டால், நம்பிக்கை இல்லாதவன்கூட போகிறபோக்கில் கடவுளை பார்த்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு செல்வான். இறைவனுக்கு தினமும் பூசை செய்பவரைதான் பிடிக்கும் என்றில்லை. இறை பெயரை சொல்லி தீமைகள் செய்பவர்களைவிடவும் அவனை திட்டிக்கொண்டோ இல்லையெனில் அவனை பற்றி யோசிக்காமலேயே இருந்து மற்ற உயிர்களுக்கு மனதாலும், உடலாலும் நல்லது செய்பவனைதான் அந்த இறைவனுக்கு பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தவகையான கருத்தையெல்லாம் பலரும் எடுத்துக்கூறமாட்டார்கள்; தங்கள் செயலுக்கு எது ஒத்துவருமோ அதனை மட்டும்தான் மற்றவர்களிடம் கூறுவார்கள். அப்படியிருந்தால் நம்பிக்கை வராது; வெறுப்புதான் வளரும். புரிந்துகொள்வார்களா? தெரியவில்லை... <br /><br />அதோடு, இன்று அறிவியல் மனிதன் கொண்டிருந்த பல நம்பிக்கைகளை தவிடுபொடியாக்குகின்றது. அண்டத்தின் துவக்கத்திலிருந்து அதன் தாக்கம் ஆரம்பிக்கின்றது. பலவிடயங்களுக்கு அதன் மூல காரணங்களை ஆய்ந்தறிந்து தெளிவாக பட்டியலிட்டுவிட்டது. பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் நன்றாக அறிவியல் படிக்க வேண்டும்; ஆனால் அதில் கூறப்பட்டுள்ள தங்கள் நம்பிக்கைக்கெதிரான விடயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது. உதாரணமாக அண்டத்தின் பூர்வீகத்தையே எடுத்துக்கொள்ளலாம். அறிவியலின்படி பிக் பேங் என்பதின் மூலம் இந்த பிரபஞ்சம் உருவானது. ஆனால் இன்னமும் இறைவன் படைத்தான் என்றுதான் வீடுகளில் சொல்லிகொடுக்கப்படுகிறது.<br /><br />இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் இந்திய அறிவியல் வல்லுனர்களில் பலரும் இறைவனால்தான் ஒவ்வொன்றும் நடப்பதாக கூறியுள்ளனர். அவர்கள் கற்றுத்தெரிந்துகொண்ட அறிவியல் சான்றுகள் கூடவும் இறைவனால்தான் அளிக்கப்படுவதாக கூறியுள்ளனர். இதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்?? ஒன்று அவர்களுக்கே அவர்கள் படித்த, அறிந்துகொண்ட அறிவியல் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்கொள்ளலாம். அவ்வாறெனில், அவர்கள் மற்றவர்களுக்கு அறிவியல் போதிக்க முற்படகூடாது. மற்றொரு காரணம் பயமாக இருக்கும். இறைவன் இல்லை என்று சொல்ல பயம். ஒரு இடுகையில் படித்ததுபோல ஒருவர் மிகுந்த சங்கடங்களுக்கு ஆளாகும்போது தஞ்சமடைய இருக்கும் ஒரே இடம் இறைவன் என்ற ஒன்றுதான். இறைவன் இல்லை என்று சொல்லி அதனையும் இழக்க மக்கள் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.<br /><br />இறைவன் என்பதே ஒரு நம்பிக்கை சார்ந்த விடயம். ஆனால், அந்த சக்தியிடமும் பயத்தினால், ஒருவித எதிர்பார்பினால்தான் சரணாகதி; அன்பினாலோ, ஆத்மாத்தமான நம்பிக்கையினாலோ இல்லை என்பதுதான் பெருவாரியான இடங்களில் நடக்கின்றது. பக்தி பயத்தினால் உயிர்பெற்று வாழ்கின்றது.<br /><br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-20076357432756241162009-06-05T11:00:00.002+05:302009-06-05T11:00:02.341+05:30பகிர்ந்துகொள்ளாத வருத்தங்களும், கோபங்களும்<div style="text-align: justify;">அவன் தாய்க்கோ அவளை சுற்றியிருக்கும் சொந்தங்கள் மீது கோபம். மற்ற பிள்ளைக்கோ தாய் மீது கோபம். தனையனுக்கோ தன் தங்கை மீது வருத்தம். நாத்தனாருக்கோ அண்ணியார் மீது வருத்தம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உறவுகளின் மீது கோபம். ஆனால் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டால் வருத்தத்தையோ, கோபத்தையோ காட்டிக்கொள்ள மாட்டார்கள். நமுத்த பட்டாசைபோல போக வேண்டிய ஒன்றை மனதினுள் அனுகுண்டு போல வெடித்துக்கொண்டிருப்பர். இவர்களை நினைத்து அழுவதா, சிரிப்பதா இல்லை கோபப்படுவதா என்று அவனுக்கு தெரியவில்லை. உறவுகளுக்குள்தான் எத்தனை எத்தனை பகிர்ந்துக்கொள்ளாத உணர்வுகள். மகிழ்ச்சியையும் முழுமையாக கூறமாட்டார்கள்; சங்கடங்களையும் கொட்டி தீர்த்துக்கொள்ளமாட்டார்கள். அவரவர் மனதினுள்ளேயே வைத்துக்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருப்பார்கள். சொந்தபந்த கோபமே மேலோங்கி இருக்க சமுதாய கோபம் அவர்களுக்கு இருக்குமா? மற்றவர் பிரச்சனைகள் பற்றி அவர்கள் வருந்துவார்களா என்று எண்ணிப்பார்க்கிறான். சரி, அவனுக்கு யார் மீது கோபம்? உறவுகள் மீதா, நட்புகள் மீதா, சமுதாயம் மீதா? அவனுக்கு ஒன்று நன்றாக உரைத்தது; அனைத்தையும்விட அவனுக்கு தன் மீதுதான் மிகுந்த கோபம். பகிர்ந்துகொள்ளவும் மறுக்கிறார்கள்; எவரேனும் அப்படியே பகிர்ந்துகொள்ள முற்பட்டாலும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அதனை உணர்த்த முற்பட்டால் உணர மறுக்கிறார்களே; அவர்களுக்கு புரியவைக்க முடியவில்லையே என்ற கோபம். தோற்றுவிட்டதால் எழுந்த கோபம். மாற்றமுடியும் என்ற நம்பிக்கை அழிந்துகொண்டே போவதால் வளர்ந்துகொண்டே இருந்தது அவனது கோபம். அவனை பொறுத்தவரை இறுதிவரை மாறாமல் இருக்கப்போவது மற்ற மனிதர்களும், அவனது கோபமும்.<br /><br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-77780802477547577452009-06-04T13:00:00.001+05:302009-06-04T13:00:01.653+05:30குடகு மலைப்பயணம் - 2ஈ<div style="text-align: justify;">மூன்றாம் நாள் காலை வீராச்பெட்டில் நல்லவிதமாக விடிந்தது. சாலையின் இருபக்கங்களிலும் காப்பித்தோட்டங்கள் வேலியாய் அமைந்துவர, நாங்கள் முதலில் சென்ற இடம் துபாரே யானைகள் முகாம். அந்த இடத்தில் வனத்துறை மூலம் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. பிரசித்தி பெற்ற மைசூர் தசராவிற்கும் அங்குதான் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன; விழாவில் இராசநடை போட்டு அவைகளும் வலம்வருகின்றன. காலை நேரத்தில் யானைகள் நதிக்கரைக்கு அழைத்து வரப்பட்டு யானைபாகர்களால் குளிப்பாட்டப்படும். ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தினால் பொது மக்களாகிய நாமும் அவற்றை குளிப்பாட்டலாம். இந்த வாய்ப்பெல்லாம் எப்போதாவதுதான் கிடைக்கும்; ஆதலால் நாங்கள் அவற்றை குளிப்பாட்ட பணம் செலுத்தி யானைகளின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தோம்.<br /></div><div style="text-align: justify;"><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAZM6RLf2gk1oM62HFNA8sBGJW3g1p6EFhkCSx2Yrt12vTJ5wERZAOOP07D0QgFwyms7OWXC8TR7CxtY4cw88JPUUJVLh9HEobaIDGY0_50hftw4-AFxWmSNkkxakRtphfBcR0HmoHy_Uv/s1600-h/IMG_0611.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAZM6RLf2gk1oM62HFNA8sBGJW3g1p6EFhkCSx2Yrt12vTJ5wERZAOOP07D0QgFwyms7OWXC8TR7CxtY4cw88JPUUJVLh9HEobaIDGY0_50hftw4-AFxWmSNkkxakRtphfBcR0HmoHy_Uv/s320/IMG_0611.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340617262641901330" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpX04GUxX__sSH6tzPUxhSp6fSrYeRiNgO0EPhvfMQO0tVTwWHTyE0Cq5RCD7UfnhvuWpOtj-eMbwnFeaz3tnmd9nRdOyt_jbf4l0N6zB2B7utHr68zpr8H9SjWIhvEry9M9TKU5oQDoPF/s1600-h/IMG_0614.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpX04GUxX__sSH6tzPUxhSp6fSrYeRiNgO0EPhvfMQO0tVTwWHTyE0Cq5RCD7UfnhvuWpOtj-eMbwnFeaz3tnmd9nRdOyt_jbf4l0N6zB2B7utHr68zpr8H9SjWIhvEry9M9TKU5oQDoPF/s320/IMG_0614.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340617261152736770" border="0" /></a><br />மாமிச மலைகளும் வந்தன. அவ்வளவு அருகில் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. யானை பாகர்கள் மற்றும் வனத்துறை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் சரியான இடத்தில் நின்றுகொண்டு அவற்றை குளிப்பாட்டி மகிழ்ந்தோம். குட்டி யானைகளை கண்டபோது அதிக மகிழ்ச்சியாக இருந்தது. குட்டிகள் தங்கள் தாய்களோடு முட்டிமுட்டி விளையாடுவது பார்க்க விருந்தாக இருந்தது. அவை நம்மை நோக்கி ஒடிவராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவை மெதுவாக முட்டினாலும் நம்மால் வலி தாங்கமுடியாது. குளியலிற்கு பின்னர் உணவு அளிக்கும் நேரம். அவற்றை யானைபாகர்கள் மட்டும்தான் அளிக்க முடியும்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipHTJmpUIHiBQ82D9Hsi9FR-mAZ2x48lcNEw6HFUa8sUwx-7Ru4pfMsEZ9KO0Z1ZvzzmnJyMCGy5ndkCsWu8UIK4x1Idl4DJcsSPXnBJ7HwKTVgpU3SA31Qb3CHvIEQuPEYDqgv2ylyszw/s1600-h/IMG_0620.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipHTJmpUIHiBQ82D9Hsi9FR-mAZ2x48lcNEw6HFUa8sUwx-7Ru4pfMsEZ9KO0Z1ZvzzmnJyMCGy5ndkCsWu8UIK4x1Idl4DJcsSPXnBJ7HwKTVgpU3SA31Qb3CHvIEQuPEYDqgv2ylyszw/s320/IMG_0620.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340617267391177042" border="0" /></a><br /><br />களி உருண்டைகளை அவைகள் ஆனந்தமாக முழுங்கிக்கொண்டிருந்தன. சுதந்திரத்தை பறிகொடுத்ததால் மனிதன் அளிக்கும் உணவைதான் அவை உண்ணவேண்டும். தங்கள் விருப்பம்போல எங்கும் சென்று வேண்டியதை செய்ய முடியாது.<br /><br />துபாரே முடித்து நாங்கள் சென்றது காவேரி நிசர்கதாமா என்னும் இடம். இந்த இடத்தில் மான்களும், முயல்களும் இன்னும் பிற உயிரினங்களும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. ஏனோ இந்த இடம் மனதில் நிறைவாக நிற்கவில்லை. மதிய உணவை மட்டும் அங்கே முடித்துக்கொண்டு இறுதி இடமாகிய திபெத்திய மடமுள்ள பயிலக்குப்பே நோக்கி சென்றோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijj2e28nxmBF7FJAGasdVHMR1mxMdd79muzzwiPk-Sb3wRaThA5kNHNM-J3vQWhtiOiTedriDobCiP_3EZvonRsqOVsCLmWSQAw3boKDVF3djJ4LdQTYFFukJJmn24uCrJrVYDd1lHwKdU/s1600-h/IMG_0640.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijj2e28nxmBF7FJAGasdVHMR1mxMdd79muzzwiPk-Sb3wRaThA5kNHNM-J3vQWhtiOiTedriDobCiP_3EZvonRsqOVsCLmWSQAw3boKDVF3djJ4LdQTYFFukJJmn24uCrJrVYDd1lHwKdU/s320/IMG_0640.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340617272019317794" border="0" /></a><br />இந்த இடத்தை பற்றி முதல்முறை சென்றபோதே குறிப்பிட்டுள்ளேன். இம்முறை மக்கள் நெரிசல் மிகவும் குறைவாக இருந்தது. சில மணிநேரங்கள் அங்கே கழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.<br /><br />மூன்று நாட்கள் நிறைவுபெறும் நிலையில் இருந்தது. பல முக்கிய இடங்களை மூன்று நாட்களில் காணமுடிந்தது. ஒரு சில இடங்கள் விடுபட்டுவிட்டன. அவைகளை மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்க்க முடியும் என்கின்ற நம்பிக்கை இருந்தது. எத்துனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் குடகிற்கு நான் செல்வேன் என்பதையும் உறுதியாக நம்புகின்றேன். சுகமான பல நல்ல அனுபவங்களை அளித்த குடகிற்கு மானசீகமாக நன்றிகூறிக்கொண்டு பெங்களூரு நோக்கி பயணத்தை துவங்கினோம். இரண்டாம் குடகு பயணமும் நிறைவாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.<br /><br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-73115530272439375272009-06-03T13:00:00.005+05:302009-06-03T13:04:15.545+05:30குடகு மலைப்பயணம் - 2இ<div style="text-align: justify;">தடியண்டமோல் – குடகு மலையிலுள்ள உயர்ந்த மலைஉச்சி ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இடம். நடந்துதான் செல்ல முடியும். உச்சிக்கு சென்றுவர சாதாரணமாக ஆறு மணிநேரமாவது ஆகும். மழைகாலமாக இருந்தால் வழியெங்கும் இரத்தம் சுவைக்கும் அட்டை பூச்சிகள் நிறைந்திருக்கும். அவற்றை நினைத்தாலே மனதினுள் பயம் எப்போதுமே உண்டு. நல்லவேளையாக நாங்கள் சென்ற காலத்தில் அவை எதுவும் இல்லை என்று கேள்விபட்டதால், நிம்மதியாகவும், ஆசையாகவும் உச்சி நோக்கி நண்பர்களுடன் செல்ல ஆரம்பித்தேன். இதற்கு முன்னர் எங்கள் நண்பர் ஒருவருக்கு உடல் நலமில்லாமல் சென்றுவிட்டது. ஆகையால் செல்லும் வழியில் சிறிய மருத்துவமனையில் ஓய்வும், மருந்துகளும் கொடுத்து உடல் நிலையை தேற்றி தடியண்டமோல் நோக்கிய பயணத்தை தொடர்ந்தோம்.<br /></div><div style="text-align: justify;"><br />மலை அடிவாரத்தில் உள்ள பேலேஸ் எஸ்டேட் என்னும் இடத்தில் எங்கள் விசையுந்துகளை நிறுத்திவிட்டு, அவர்களிடம் செல்லும் வழிகேட்டு அறிந்துகொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அப்போதே மதியம் மணி மூன்றாகிவிட்டது. உச்சி சென்றுவர ஆறு மணி நேரமாவது ஆகும் என கேள்விபட்டுள்ளோம். இருளில் சென்றுவருவது என்பது மிகவும் சிரமமான விடயமாகும். ஆகையால் எவ்வளவு விரைவாக சென்றுவர முடியுமோ அவ்வளவு விரைவாக சென்றுவர முடிவு செய்து வேகவேகமாக மலையேர துவங்கினோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzXllGh2IgZBJCPAIgisp2dwfUT6Cf80kUZ8ASyI6f0bgkwrsJPs-Sha8pfRYP09QTNZuWknY9M8XnCDBpGOxqnLpzFb81cRf5a-9XXQSTyAzKLaepxq-QxoSD2nD-kp_9BsaVe-qahOTq/s1600-h/IMG_0590.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzXllGh2IgZBJCPAIgisp2dwfUT6Cf80kUZ8ASyI6f0bgkwrsJPs-Sha8pfRYP09QTNZuWknY9M8XnCDBpGOxqnLpzFb81cRf5a-9XXQSTyAzKLaepxq-QxoSD2nD-kp_9BsaVe-qahOTq/s320/IMG_0590.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340613946784412002" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfper3YWcJdL56EL0UNboArWeSiwr4AN1JlJZuECprpW_4bYerFu-AxKQ1u-kA_uTza5CzKvrGKkAbPIiLweXQHBDybCxw8_NKqLU9i22kGSca2vaFGjpRxodXy8c7XMNXEjhLD8FZCOdk/s1600-h/IMG_0588.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfper3YWcJdL56EL0UNboArWeSiwr4AN1JlJZuECprpW_4bYerFu-AxKQ1u-kA_uTza5CzKvrGKkAbPIiLweXQHBDybCxw8_NKqLU9i22kGSca2vaFGjpRxodXy8c7XMNXEjhLD8FZCOdk/s320/IMG_0588.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340613950784791634" border="0" /></a><br /><br />அழகான காட்சிகள் கண்முன் விரிந்த வண்ணம் இருந்தன. ரசித்து கொண்டே ஏறிக்கொண்டிருந்தோம். எங்கள் மலையேறும் ஆசையில் சுமார் 60 சதவிகிதம்தான் முடித்திருப்போம். நேரம் பார்க்கையில் இருள்வர ஒரு மணிநேரம்தான் இருந்தது. இதற்கு மேலும் மலையில் ஏறிக்கொண்டிருந்தால் கீழிறிங்க முடியாது என்று தோன்றியதால், சிறிது நேரம் அந்த உயரத்திலேயே அமர்ந்து அழகினை ரசித்து கொண்டிருந்தோம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwFzua-cLMsoNJfUh8M0OlaEtMgDJ8tNdbPkyDvrqDlRa4T4mLcGdTDRscW-GPZzuk6dPVeIw8jYqh3sV4TEvpsmGpdrsavgL85oxp-UNE3pbwb3Y6RR9RwHQinIhrkS2f6KOhf-4MuRKT/s1600-h/IMG_0592.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwFzua-cLMsoNJfUh8M0OlaEtMgDJ8tNdbPkyDvrqDlRa4T4mLcGdTDRscW-GPZzuk6dPVeIw8jYqh3sV4TEvpsmGpdrsavgL85oxp-UNE3pbwb3Y6RR9RwHQinIhrkS2f6KOhf-4MuRKT/s320/IMG_0592.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340613954874775234" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlutUcD85jlGBXgKjQHm5DWu2qeOgcJE6DpbjZBBxmRZo14477R7x1JmKCVMxbBo6f4IrNhM1tgRSOZHRsfZdi4DvhMcroBJT2NEukuuUXaRnoAydl61iF4o5ksREgMul_l3KQ7H2Rl2_S/s1600-h/IMG_0603.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlutUcD85jlGBXgKjQHm5DWu2qeOgcJE6DpbjZBBxmRZo14477R7x1JmKCVMxbBo6f4IrNhM1tgRSOZHRsfZdi4DvhMcroBJT2NEukuuUXaRnoAydl61iF4o5ksREgMul_l3KQ7H2Rl2_S/s320/IMG_0603.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340613957755463426" border="0" /></a><br /><br />அனைவருக்கும் அந்த அழகினை காண்பிக்க பல புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம். சில மணித்துளிகள் மகிழ்வாக அங்கே கழித்துவிட்டு கீழிறங்க ஆரம்பித்தோம். எஸ்டேட் வந்துசேரும்போது இருட்டியேவிட்டது. இன்னும் இரண்டு மணிநேரங்கள் கிடைத்திருந்தால் உச்சிக்கு சென்று வந்திருக்கலாம். சில காரணங்களால் சில மணித்துளிகள் எங்களுக்கு விரயமானது.மற்றொரு முறை அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது. அந்த எஸ்டேட்டில் இரண்டு நாட்கள் தங்கிச்செல்ல மும்பையிலிருந்து வந்திருந்த ஒரு வயதான தம்பதியோடு அளவளாவிக்கொண்டிருந்தோம். அங்கு வந்ததில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர். அந்த சூழலும், அமைதியும் ஒரு புத்துணர்ச்சி அளிப்பது போல இருப்பதாக கூறினார்கள். அதுவும் உண்மைதான். அங்கு நிலவும் நிசப்தமும் நமது வாழ்க்கைக்கு ஒரு புதுவித அர்த்தத்தை அளிக்கின்றது. இயந்திர வாழ்விலிருந்து விடுபட அந்த மாதிரியான சூழல் மிகவும் சிறந்ததாகும். பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வீராச்பெட் நோக்கி பயணமானோம்.<br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8081350227454745352.post-30888604283890635962009-05-29T12:45:00.001+05:302009-05-29T12:45:02.062+05:30குடகு மலைப்பயணம் - 2ஆ<div style="text-align: justify;">கிழக்கே கடற்கரையில் காலை சூரிய உதயத்தை பார்ப்பது வெகு அழகு. சென்னையில் இருந்தாலும் வெகு குறைவான எண்ணிக்கையிலேயே அவ்வாறான உதயத்தை காணும் வாய்ப்பு பெற்றுள்ளேன். அதற்கு பதிலாக, இம்முறை மேற்கே மலைத்தொடர்களின் நடுவினில் வித்தியாசமான அழகுடன் கூடிய சூரியோதயம் காணும் வாய்ப்பு கிடைத்தது. முகத்தில் அறைந்தார்போல வீசிய சில்லென்ற காற்றும், அதிகாலை சூரியனும் அந்த உயரத்தில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சியை மனதினுள் அளித்தது என்றால் அது மிகையாகாது.<br /></div><div style="text-align: justify;"><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpVJ51HFPVOVC4cv5UjSek6YE85fCuJ70Z6iqtD6btCt7jngju3tVEuRsJLlbVxDc2_wqoGSQdb4eKZtUTn0DFfDwR56eJ3_hEpVbvKEn6Mo0z0j5U25kSjO9dPgRJxK7LkcvjkgxJHy0L/s1600-h/IMG_0493.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpVJ51HFPVOVC4cv5UjSek6YE85fCuJ70Z6iqtD6btCt7jngju3tVEuRsJLlbVxDc2_wqoGSQdb4eKZtUTn0DFfDwR56eJ3_hEpVbvKEn6Mo0z0j5U25kSjO9dPgRJxK7LkcvjkgxJHy0L/s320/IMG_0493.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340607296538384786" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6j6MeQy_Q01TtEEDymZ28-DGf4o_e0YHiZMDxqAkPbrgJs3DgyoqgLyCnfSQBe3i0SHtKK4mmWoAaJbBHXrBoXRR1vK8M3yLUJ077aPankflGOVIcQAIHVNBykbxBJArB1BzM7X_3SUPA/s1600-h/IMG_0513.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6j6MeQy_Q01TtEEDymZ28-DGf4o_e0YHiZMDxqAkPbrgJs3DgyoqgLyCnfSQBe3i0SHtKK4mmWoAaJbBHXrBoXRR1vK8M3yLUJ077aPankflGOVIcQAIHVNBykbxBJArB1BzM7X_3SUPA/s320/IMG_0513.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340607300040722338" border="0" /></a><br />மெல்ல மெல்ல பசுமை காட்சிகள் கண்முன் விரிந்துகொண்டிருந்தது. இருளில் ஒரு மலைத்தொடராக தெரிந்தவை, வெளிச்சம் வரவர பல அடுக்கு தொடர்களாக தங்கள் உண்மை நிலையினை எங்கள் சிறு கண்களுக்கு காட்டத்தொடங்கின. இயற்கையின் படைப்பில் மனிதர்கள் நாமெல்லாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை அந்த அதிகாலை காட்சிகள் உணர்த்தியது.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhksOhzQF3flTPDsejmu2AoiLtoxZd1m-QpTxWDn5j9H1n-RX11Am_UCAbIH2Bt_NUtM2evBUK0hEdY7KWF4pXGX5mZ_5gaOw75ztLH26TtnG5q7qXhBtGUk9wsfNCFIAwKwyOt_jpyNgqT/s1600-h/IMG_0554.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhksOhzQF3flTPDsejmu2AoiLtoxZd1m-QpTxWDn5j9H1n-RX11Am_UCAbIH2Bt_NUtM2evBUK0hEdY7KWF4pXGX5mZ_5gaOw75ztLH26TtnG5q7qXhBtGUk9wsfNCFIAwKwyOt_jpyNgqT/s320/IMG_0554.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340607310395804754" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQTM4t2a8z_C1XNm5iaC1L2OdFbL1sAqZceQht_zZkGkU2d1kG4zPMSLEbsaB8v8JSqpaSLyj_u6uGYcUxb8aM982I93JexggDqeZWquww9kfmPFouXF-WMGMdD_SeDXd0sNP0508kYacU/s1600-h/IMG_0543.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQTM4t2a8z_C1XNm5iaC1L2OdFbL1sAqZceQht_zZkGkU2d1kG4zPMSLEbsaB8v8JSqpaSLyj_u6uGYcUxb8aM982I93JexggDqeZWquww9kfmPFouXF-WMGMdD_SeDXd0sNP0508kYacU/s320/IMG_0543.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340607305469334402" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl5M1FsfflHyDkLmPZvQqBNyiaTYcnHPA2GDFyvc8YxDJJ0wzpZI1cc8LwzMKRIKlKgv1aRBfhW7eJJo11mYWaKPxucjOjwn4GjDhMEhRKr2n96NiCFUaFQaCYFQQoXQx3l8B5eSfmheoU/s1600-h/IMG_0557.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl5M1FsfflHyDkLmPZvQqBNyiaTYcnHPA2GDFyvc8YxDJJ0wzpZI1cc8LwzMKRIKlKgv1aRBfhW7eJJo11mYWaKPxucjOjwn4GjDhMEhRKr2n96NiCFUaFQaCYFQQoXQx3l8B5eSfmheoU/s320/IMG_0557.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340607311811512866" border="0" /></a><br />அந்த அழகினை ரசித்து கொண்டிருக்கவே தோன்றியது; நேரம் பார்க்க தோன்றவேயில்லை. ஆசைதீர அந்த இடத்தில் காலைப்பொழுதினை கழித்தோம். அந்த ஆனந்தமெல்லாம் அனுபவிக்க வேண்டும்; எந்தவிதமான வார்த்தைகளும் அதனை வெளிப்படுத்த இயலாது. வெகு நேரம் அங்கிருந்துவிட்டு, தடியண்டமோல் நோக்கி பயணமானோம்.<br /><br /></div>மணிநரேன்http://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.com4