Wednesday, November 25, 2009

அடப்போங்க மக்கா....


காட்சி - 1

என்ன அவனுக்கு ஏதாவது வரன் வந்ததா?

எங்க...ஒன்னும் சரியா அமையமாட்டைங்குது.

அவன் ரொம்ப எதிர்பார்க்கிறான். இந்த காலத்தில பெண் கிடைப்பதே ரொம்ப சிரமமாயிருக்கு; அவன் என்னன்னா இப்படி வேண்டாம், இந்த படிப்பு வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கான். அவன் கேட்கிற மாதிரியெல்லாம் பெண் கிடைக்காது. எல்லா விடயங்களும் ஒத்துப்போகாது. ஏதோ ஓரளவு ஒத்துப்போச்சுன்னா அதை முடிச்சிடனும். அதை விட்டுட்டு இப்படித்தான் பெண் வேண்டும்னா இப்படியே இருக்க வேண்டியதுதான் கடைசிவரைக்கும். கல்யாணமே நடக்காது. அவனுக்கு நீங்கதான் எடுத்துச்சொல்லனும்.

எனக்கும் அதுதான் கவலையா இருக்கு.


காட்சி - 2

தம்பி. இன்னைக்கு அவங்க பேசிக்கிட்டிருந்தாங்க.

ஓ...எப்படி இருக்காங்க? என்ன சொல்றாங்க?

அவங்க நல்ல இருக்காங்க. உன் திருமணத்தை பற்றித்தான் விசாரிச்சாங்க.

ஓ...

உன்னோட எதிர்பார்ப்புகள் அதிகமா இருக்காம். அப்படியெல்லாம் எதிர்பார்க்கிற மாதிரி கிடைக்காதாம். வருகின்ற வரன்ல ஏதாவது ஒன்றை முடிக்க சொல்றாங்க.

ம்..இது என்ன கடைக்கு போய் துணி வாங்கவருவது மாதிரி நினைத்து கொண்டு சொல்கிறார்களா? கிடைத்ததை முடிங்கறதிற்கு. துணிகூட பிடித்தால்தான் வாங்கறோம். அப்படி இருக்கும்போது இது வாழ்க்கைத்துணை. அவங்க பிள்ளைகளுக்கெல்லாம் எப்படி பார்த்தாங்கனு நமக்கு தெரியும்ல. அவங்களும் பயங்கர செலக்டிவ்வாதானே இருந்தாங்க/இருக்காங்க. ஒவ்வொரு விடயத்தையும் தேடித்தேடிதானே பார்த்தாங்க/பார்த்துகிட்டிருக்காங்க. எந்த அளவுக்கு சமரசம் செய்துகொண்டாங்க. அவங்க பிள்ளைகளுக்குனா அப்படியெல்லாம் தேடி வரன் பார்க்கலாம். ஆனால், நான் கொஞ்சம் படிப்பிலே செலக்டிவ்வா இருக்கறது தப்பா?

என்ன செய்வது? நீ கேட்கிறது போல கிடைக்க மாட்டைங்குதே. அதான் சொல்றாங்க.

கிடைக்கும், கவலைப்படாதீங்க. வாழ்க்கையில் சமரசம் செய்து கொள்ளலாம்; அதற்கு நான் எப்பவும் தயார். ஆனால் மற்றவர்களுக்காக வாழ்க்கையையே சமரசமா ஆக்கிக்க முடியாது. இந்த விடயத்திலும் நிறைய சமரசம் செய்துவிட்டேனென்று உங்களுக்கே தெரியும். நான் அவர்களின் கல்வித்துறை சார்ந்த விடயத்தில் மட்டும்தான் எதிர்பார்ப்போடு இருந்தேன்/இருக்கேன். அந்த எதிர்பார்ப்பு கூட இருக்கக்கூடாதுனா எப்படி? என்ன, இதனால் வரன் கிடைக்க எனக்கு கொஞ்சம் தாமதமாகுது. காத்திருக்கும் நாட்கள் அதிகமாகுது. அவ்வளவுதான்.

சரி..எப்ப நேரம் வருகின்றதென்று பார்ப்போம்.

கண்டிப்பா வரும். நீங்க தைரியமா நம்பிக்கையோட இருங்க.

(ஏன் இப்படி தம் பிள்ளைகளின் (மகன்/மகள்) எதிர்பார்ப்பு எப்போதும் சரியென்பது போலவும் மற்ற பிள்ளைகளின் எதிர்பார்ப்பு எல்லை மீறியது என்பது போலவும் சிலர் மனதில் எண்ணம் ஏற்படுகின்றது என்று எனக்கு புரியவில்லை. தனக்கொரு நியாயம் பிறர்க்கொரு நியாயமா? அடப்போங்க மக்கா...)

4 comments:

பதி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மணி,

இது ஆவறதுக்கு இல்லை... நான் சீக்கிரம் ஒரு கதை எழுதனும் !!!!!!

சந்தனமுல்லை said...

:-))

கையேடு said...

அடப்போ..மணி...

விக்னேஷ்வரி said...

அனுபவமா நரேன்...