அவன் தாய்க்கோ அவளை சுற்றியிருக்கும் சொந்தங்கள் மீது கோபம். மற்ற பிள்ளைக்கோ தாய் மீது கோபம். தனையனுக்கோ தன் தங்கை மீது வருத்தம். நாத்தனாருக்கோ அண்ணியார் மீது வருத்தம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உறவுகளின் மீது கோபம். ஆனால் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டால் வருத்தத்தையோ, கோபத்தையோ காட்டிக்கொள்ள மாட்டார்கள். நமுத்த பட்டாசைபோல போக வேண்டிய ஒன்றை மனதினுள் அனுகுண்டு போல வெடித்துக்கொண்டிருப்பர். இவர்களை நினைத்து அழுவதா, சிரிப்பதா இல்லை கோபப்படுவதா என்று அவனுக்கு தெரியவில்லை. உறவுகளுக்குள்தான் எத்தனை எத்தனை பகிர்ந்துக்கொள்ளாத உணர்வுகள். மகிழ்ச்சியையும் முழுமையாக கூறமாட்டார்கள்; சங்கடங்களையும் கொட்டி தீர்த்துக்கொள்ளமாட்டார்கள். அவரவர் மனதினுள்ளேயே வைத்துக்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருப்பார்கள். சொந்தபந்த கோபமே மேலோங்கி இருக்க சமுதாய கோபம் அவர்களுக்கு இருக்குமா? மற்றவர் பிரச்சனைகள் பற்றி அவர்கள் வருந்துவார்களா என்று எண்ணிப்பார்க்கிறான். சரி, அவனுக்கு யார் மீது கோபம்? உறவுகள் மீதா, நட்புகள் மீதா, சமுதாயம் மீதா? அவனுக்கு ஒன்று நன்றாக உரைத்தது; அனைத்தையும்விட அவனுக்கு தன் மீதுதான் மிகுந்த கோபம். பகிர்ந்துகொள்ளவும் மறுக்கிறார்கள்; எவரேனும் அப்படியே பகிர்ந்துகொள்ள முற்பட்டாலும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அதனை உணர்த்த முற்பட்டால் உணர மறுக்கிறார்களே; அவர்களுக்கு புரியவைக்க முடியவில்லையே என்ற கோபம். தோற்றுவிட்டதால் எழுந்த கோபம். மாற்றமுடியும் என்ற நம்பிக்கை அழிந்துகொண்டே போவதால் வளர்ந்துகொண்டே இருந்தது அவனது கோபம். அவனை பொறுத்தவரை இறுதிவரை மாறாமல் இருக்கப்போவது மற்ற மனிதர்களும், அவனது கோபமும்.
𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆
1 day ago
2 comments:
மணி,
என்ன ஆச்சு????
:(
Post a Comment